Idhayam Matrimony

பெண்கள் பார் வைத்து நடத்திய பால் தாக்கரே பேரன் கைது

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,மார்ச்.11 - மும்பையில் பெண்கள் பார் வைத்து நடத்திய சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரேயின் பேரன் நிஹார் தாக்கரேவை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பை நகரில் பெண்கள் பார் வைத்து நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொழிலில் நல்ல வருமானம் கிடைப்பதால் எல்லா கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் பெண்கள் பார் வைத்து நடத்தி வருகிறார்கள். மும்பையில் சாந்த குரூஷ் பகுதியில் பால் தாக்கரேயின் பேரன் நிஹார் தாக்கரே பெண்கள் பார் வைத்து நடத்தியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சோதனை நடத்தினர். அப்போது பெண்கள் 9 பேர் ஒரு சுவருக்கு அப்பால் ஒளிந்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாரில் பெண்கள் விபசாரத்திற்கு வற்புறுத்தப்பட்டது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் மீட்டனர். மேலும் இந்த பாரை வைத்து நடத்திய நிஹார் தாக்கரே மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பால்தாக்கரேயின் மூத்த மகன் பிந்தா என்பவர் மகன்தான் நிஹார். பிந்தா திரைப்படம் தயாரித்து வந்தார். ஒரு கார் விபத்தில் பிந்தா இறந்துவிட்டார். மும்பையின் பல பகுதிகளில் நிஹார் பெண்கள் பார் வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதையும் தேடி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago