எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை,மார்ச்.11 - மும்பையில் பெண்கள் பார் வைத்து நடத்திய சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரேயின் பேரன் நிஹார் தாக்கரேவை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பை நகரில் பெண்கள் பார் வைத்து நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொழிலில் நல்ல வருமானம் கிடைப்பதால் எல்லா கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் பெண்கள் பார் வைத்து நடத்தி வருகிறார்கள். மும்பையில் சாந்த குரூஷ் பகுதியில் பால் தாக்கரேயின் பேரன் நிஹார் தாக்கரே பெண்கள் பார் வைத்து நடத்தியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சோதனை நடத்தினர். அப்போது பெண்கள் 9 பேர் ஒரு சுவருக்கு அப்பால் ஒளிந்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாரில் பெண்கள் விபசாரத்திற்கு வற்புறுத்தப்பட்டது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் மீட்டனர். மேலும் இந்த பாரை வைத்து நடத்திய நிஹார் தாக்கரே மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பால்தாக்கரேயின் மூத்த மகன் பிந்தா என்பவர் மகன்தான் நிஹார். பிந்தா திரைப்படம் தயாரித்து வந்தார். ஒரு கார் விபத்தில் பிந்தா இறந்துவிட்டார். மும்பையின் பல பகுதிகளில் நிஹார் பெண்கள் பார் வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதையும் தேடி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


