முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

100 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பேர் வசிக்கும் அதிசய சிற்றூர்

இத்தாலியில் உள்ள சுமார் 1765 பேர் வசிக்கும் சிற்றூர் ஒன்றில் 10 க்கும் மேற்பட்டோர் தங்களது 100 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளனர். இத்தாலியில் உள்ள சர்தினியா என்ற தீவில் அமைந்துள்ள பெர்தாஸ்தேபோகு (Perdasdefogu) என்ற சிற்றூர்தான் அந்த பெருமைக்குரிய இடமாகும்.உலகில் 100 வயதுக்கு மேற்பட்டோர் அதிகம் பேர் வசிக்கும் 5 இடங்களில் சர்தினியாவும் ஒன்றாகும். ஒவ்வொரு 1 லட்சம் குடியிருப்பு வாசிகளில் சுமார் 33.6 சதவீதம் பேர் 100 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த ஊர் கின்னஸில் இடம் பெற்றது. மெலிஸ் என்பவரின் குடும்பம் கடந்த 9 தலைமுறையாக இதே ஊரில் வசித்து வருகின்றனர் என்ற சாதனையுடன் அது கின்னஸ் சாதனை படைக்கப் பெற்றது.  கன்சோலடா மெலிஸ் என்பவரின் வம்சாவளியினர்தான் இந்த ஊரின் மிகவும் மூத்த குடும்ப வம்சாவளியினர் ஆவர். அவர் தனது 105 ஆவது வயதில் கடந்த 2015 இல் காலமானார். இந்த ஊரை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சுத்தமான காற்று, மாசில்லாத சுற்றுச்சூழல், ஆரோக்கியமான உணவு உள்ளிட்டவைதான் இங்கு வாழ்பவர்கள் அதிக ஆண்டுகள் உயிருடன் இருப்பதற்கு காரணம் என்பதை கண்டறிந்தனர். தற்போது 10க்கும் மேற்போட்டோர் இவ்வூரில் சென்சுரி அடித்துள்ளனர். கேட்கவே பொறாமையாக இருக்கு அல்லவா..

வெள்ளை மாளிகையில் முதலை வளர்த்த அதிபர்

அமெரிக்காவின் ஆறாவது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் John Quincy Adams இவர் 1825 முதல் 1829 வரை அதிபராக இருந்தார் அப்போது அவருக்கு பிரெஞ்சு தூதர் முதலை ஒன்றை செல்லப்பிராணியாக பரிசாக வழங்கினார் அந்த முதலையை ஜான் குவின்சி வெள்ளை மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் வளர்த்து வந்தார் அங்கு அது ஜாலியாக நீந்தி விளையாடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார் இவர் முற்றிலும் வித்தியாசமான அதிபர் தானே.

கோகோ-விற்கு மாற்று.

‘கோகோ’ வில் இருந்து சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. அதற்காக சர்வதேச அளவில் 45 லட்சம் டன் கோகோ தேவைப்படுகிறது. ஆனால் விவசாயிகளால் அந்த அளவு கோகோ சாகுபடி செய்ய முடியவில்லை. 37 லட்சம் டன் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். இதற்கு மாற்று வழியை கண்டுபிடிக்க பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லோ பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், பலாக் கொட்டையில் இருந்து சாக்லேட் தயாரிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர். பலாக் கொட்டையில் சாக்லேட்டின் நறுமணம் மற்றும் சுவையுடன் கூடிய ஒரு பொருள் மறைந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதில் இருந்து சாக்லேட் தயாரிக்க பயன்படும் பொருள் உருவாக்க முடியும். இதன் மூலம் கோகோ பற்றாக்குறையால் சாக்லேட் தயாரிப்பில் ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

ஒளிஉணர் விசைப்பலகை : அப்படின்னா..

இன்றைக்கு தொழில் நுட்பம் எங்கோ சென்று விட்டது. கணிப்பொறியின் வருகை தொழில் நுட்ப யுகத்தின் புதிய புரட்சி என்று கூட வர்ணிக்கலாம். இதுவரை இருந்து வந்த அனைத்து கைவினை கலைகளையும் மூட்டை கட்ட வைத்து கணிணி வரை கலை மூலம் புதிய கற்பனா உலகை கணிப்பொறி திறந்து விட்டுள்ளது.. அது சரி அதே நேரத்தில் கணிப்பொறி துறையும் தன்னை அதோடு இணையாக வளர்த்துக் கொண்டுள்ளது. உதாரணமாக கணிப்பொறி என்றால் முன்பெல்லாம் பொதி மூட்டை போல பிக்சர் டியூப் மானிட்டர், மிகப் பெரிய மேசை சைசுக்கு சிபியு, தட்டச்சு எந்திரம் மாதிரியான விசைப்பலகை என்ற காலம் மலையேறி விட்டது. தற்போது தொட்டால் உணரும் திரையுடன் மாடலிங் பெண்ணைப் போல மிகவும் ஸ்லிம்மாக மாறிவிட்டது. அதே போல வயர்லெஸ் மவுஸ், கீ போர்டு என அடுத்தடுத்த வரவுகள் அசத்தி வருகின்றன. இதில் மேலும் ஒரு படி முன்னேற்றமாக ஒளியுணர் விசைப்பலகைகள் (லேசர் கீ போர்டுகள்) வந்து விட்டன. ஒரு சிறிய ஒளியை டேபிளில் பாய்ச்சினால் கீ போர்டு வடிவில் தெரியும் வெளிச்சத்தில் தொட்டால் திரையில் தானாகவே செயல்பாடுகள் நடக்கும் வகையில் இந்த புதிய லேசர் விசைப்பலகை வந்து விட்டது. இனி எங்கு சென்றாலும் கீபோர்டை சுமந்து செல்ல வேண்டியதில்லை.. நம்மூர் பொடிடப்பா அளவுக்கு உள்ள அந்த லேசர் விளக்கு போதும்.. விலையும் மலிவுதான்.. ஆன்லைன் ஸ்டோரில் வகைவகையாக அள்ளலாம்..

பாதாமின் அற்புதம்

பாதாம் உடல் வலிமையையும், எலும்பின் வலிமையையும் ஊக்கவிக்கிறது.பாதாம் உட்கொள்வதால், இதய கோளாறுகள், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் பருமன், பற்கள் வலி, பித்தக்கற்கள், இரத்த சோகை, மூளை சோர்வு, மலச்சிக்கல் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு சீரான தீர்வுக் காண முடியும்.  பாதாமை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது எலும்பு நன்கு உறுதியாகும்.

இனி மவுஸ் வேண்டாம் - வந்து விட்டது ஸ்மார்ட் ரிங்

இன்றைக்கு கம்பியூட்டர் துறையில் எவ்வளவோ வளர்ந்து விட்ட போதிலும் சில விஷயங்களில் கொஞ்சம் முன்னகராமலேயே இருந்து வந்தோம். ஆனால் இந்த புதிய நூற்றாண்டு எல்லாவற்றையும் மாற்றி வருகிறது. அதில் லேப்டாப், டேப்லட்  போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு மவுஸ் பயன்பாடு என்பது எவ்வளவு தேவை என்பதை உணர்ந்திருப்பார்கள். டச் பேட் இருந்த போதிலும் கூடவே ஒரு மவுசையும் பையில் வைத்து எடுத்து செல்வர். இனி அந்த கவலை வேண்டாம்.. வந்து விட்டது மவுசுக்கு பதிலாக ஸ்மார்ட் ரிங். இதை ஆள்காட்டி விரலில் மாட்டிக் கொண்டு வழக்கமாக மவுசை பயன்படுத்துவது போல ஆட்டிக் கொண்டிருந்தால் போதும்... லேப்டாப்பில், டேப்லட்டில் அவ்வளவு ஏன் கணிணியில் கூட ஜாலியாக வேலை பார்க்கலாம். இனி  எலி வாலில் தலைகீழாக தொங்குவதை போல மவுஸ் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியது இல்லை.. இந்த ரிங் போதும். தேவைப்படாத போது டிராயரில் போட்டு பூட்டி விட்டு ஜாலியாக செல்லலாம். தேவைப்படும் போது சட்டை பையிலோ.. விரலிலோ மாட்டிக் கொண்டு செல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago