முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகிலேயே மிகவும் தடிமனாக வளரும் மரம் எது தெரியுமா?

மரங்கள் பெரிதாகவும், உயரமாகவும் வளரும் என்பது நாம் நன்கு அறிந்ததே. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் யூகலிப்டஸ் மரம் ஒன்று 435 அடி உயரம் வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல கலிபோர்னியாவில் செம்மரம் ஒன்று 379 அடி உயரம் வளர்ந்திருந்தது. ஆனால் தடிமன் என்ற அளவில் ஆப்பிரிக்காவில் உள்ள போபாப் மற்றும் வட அமெரிக்காவில் உள்ள செகோயா மரங்களும்தான் மிக பெரிதானவை. இவற்றின் பருமனை பற்றி கேட்டால் அதில் ஒரு வீடு, அல்லது ஒரு அபார்ட்மென்டே கட்டிவிடலாம் என்றால் கற்பனை செய்து பார்த்து கொள்ளுங்கள்.

இலையுதிர் காலத்தில் இலையை உதிர்க்காத மரங்கள்

இலையுதிர் காலத்தில் அனைத்து மரங்களின் இலைகளும் நிறம் மாறி உதிர்ந்து கீழே விழும் என்பதல்ல, இதில் சில மரங்கள் மட்டும் விதிவிலக்கு. அவற்றில் சைப்ரஸ் வகை மரங்களும் அடங்கும். Conifer வகையைச் சேர்ந்த மரங்களின் இலைகள் (ஊசி இலைகள்) இவைகளின் நிறம் மாறுவதில்லை அதேபோல் உதிர்ந்து கீழே விழுவதும் இல்லை. Pine tree, cedar, cypress trees, fire, junipers, kauris, larches, redwoods, spruces, yews இவ்வகை மரங்கள் எல்லாம் gymnosperm என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. இவற்றை நாம் கிறிஸ்துமஸ் மரங்கள் என பொதுவாக குறிப்பிடுவோம். டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் அதற்கு உணவாக இவ்வகை மரங்கள் இருந்துள்ளது. இவ்வகை மரங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டாலும் குளிர் பிரதேசங்களில் அதிகம் காணப்படுகிறது.  நம்மூரில் காணப்படும் அரச மரம், ஆலமரம், வேப்பம் மரம், போன்ற மரங்களை போல அல்லாமல் குளிர் பிரதேச மரங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்ப்பதில்லை என்பது ஆச்சரியம் தானே..

லிப்ஸ்டிக்கை கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா

இன்றைக்கு நவ நாகரிக நங்கைகளின் பிரத்யேகமான பேஷன் பொருளாக இருப்பது லிப்ஸ்டிக். ஆடைகளின் வண்ணங்களுக்கு ஏற்ப விதவிதமான லிப்ஸ்டிக்குகளை இன்றைய டீன்ஸ்கள் தங்களது ஹேண் பேக்கிலேயே வைத்து செல்லும் காலமாகி விட்டது. அனைவரும் நினைப்பது போல இது மேல் நாட்டு நாகரிகம் அல்ல. லிப்ஸ்டிக்கை முதன் முதலில் கண்டு பிடித்தவர்கள் இந்தியர்கள். சிந்து சமவெளி நாகரிகத்திலேயே லிப்ஸ்டிக் பயன்பாடு குறித்த பதிவுகள் உள்ளன. சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாப், ராஜஸ்தான் பெண்டிர் மணமகனை அலங்கரிக்க விதவிதமான இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி லிப்ஸ்டிக் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைக்கு பதிலாக நீரை வெளியேற்றும் கார்

பொதுவாக கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் என்றாலே புகையை கக்கிக் கொண்டு செல்லும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நீரை வெளிவிடும் கார் வந்துள்ளது தெரியுமா.. இந்தியாவில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் முதல் காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டொயோட்டாவின் இந்த மிராய் வகைக் கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 646 கிலோமீட்டர் வரை செல்லும் திறன்கொண்டவை. பெட்ரோல், டீசல் கார்களுக்குச் சிறந்த மாற்றாக விளங்கும் இந்தக் காரில் அதிக அழுத்தத்தைத் தாங்கும் ஹைட்ரஜன் எரிபொருள் டேங்கும், மின்மோட்டாரும் உள்ளன. ஹைட்ரஜனை நீராகவும் ஆக்சிஜனாகவும் மாற்றுவதன் மூலம் கார் ஓடுவதற்கான ஆற்றல் கிடைக்கிறது. இந்தக் காரில் உள்ள எஞ்சின் புகையை வெளியிடுவதற்குப் பதில் நீரை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலுக்கு நடுவே அமைந்துள்ள ஏர்போர்ட்

உலகிலேயே கடலுக்கு நடுவே மிகவும் அபாயகரமான முறையில் அமைந்துள்ள ஏர்போர்ட் எங்குள்ளது தெரியுமா.. அது வேறெங்கும் இல்லை.  இந்தியாவில்தான்.. அகத்தி விமான நிலையம் - லட்சத் தீவுகள்- விமான ஓடுதளத்தை சுற்றிலும் கடல் இது தான் அகத்தி  விமான தளத்தின் பிரம்மாண்டம். இந்தியாவின்  லட்ச தீவுகளில் அமைந்துள்ளது அகத்தி விமான தளம். விமானத்தில் இருந்து பார்க்கும் போது ரன்வே கடலில் மிதப்பது போல காட்சி அளிக்கும் அனுபவம் மிகப் பெரிய அனுபவம். 1988 முதல் இந்த விமான தளம் செயல்பட்டு வருகிறது. டோர்னியர் 228 ரக விமானங்களை இயக்குவதற்காகவே விமான தளம் முதலில் உருவாக்கப்பட்டது.பின்னர் அருகிலுள்ள கல்பட்டி தீவையும் இணைத்து பாலத்தில் நெடிய விமான ஓடுபாதையை அமைக்க  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சூழலியல் காரணங்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. உலகின் அபாயகரமான விமான ஓடுதளங்களில் இதுவும் ஒன்று.

சமண படுகைகளைப்போல மலை உச்சியில் பாறைகளை குடைந்து வீடு கட்டி வசிப்பவர்கள்

தென்னிந்தியா முழுவதும் உள்ள எந்த மலைக்கும், குன்றுக்கும் சென்றாலும் அங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சமணத் துறவிகளால் உருவாக்கப்பட்ட குடை வரை சிற்பங்களையும், கோயில்களையும், படுக்கைகளையும் காண முடியும். இன்றைக்கும் தொல்லியல் துறையின் மிகப் பெரிய ஆச்சரியங்களில் ஒன்றாக நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அவை தாங்கி நிற்கின்றன. ஆனால் இன்றைய நவீன யுகத்தில் அப்படி யாராவது மலை உச்சியில் பாறையை குடைந்து குடை வரை குடியிருப்பை அமைப்பார்களா என்றால்... ஆம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். ஆனால் அது நடந்துள்ளது இங்கு அல்ல. இத்தாலியில். அந்நாட்டில் உள்ள Dolomites Mountains என்ற மலையில்தான் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2700 மீட்டர் அதாவது 8 ஆயிரத்து 858 அடி உயரத்தில் பாறையை குடைந்து தன்னந்தனிமையில் ஒருவர் வீட்டை உருவாக்கியுள்ளனர். முதலாம் உலகப் போரின் போது இத்தாலியர்களுக்கும் ஆஸ்திரோ ஹங்கேரியர்களுக்கும் சண்டை வந்த போது அதிலிருந்து தப்ப விரும்பிய சிலர் இது போன்று யாரும் எளிதில் வரமுடியாத இந்த இடத்தில் வீட்டை உருவாக்கினர். தொலைவிலிருந்து பார்க்கும் போது பாறையில் ஒட்டியிருப்பது போல தோன்றும் இந்த வீடு தற்போது பாரம்பரிய சுற்றலா தளத்தில் இடம் பெற்றுள்ளது. மிகவும் ஆச்சரியமும் வியப்பும் அளிக்கும் செய்தியாக இது உலகுக்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago