Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செல்பி மோகம்

செல்பி மோகத்தால் ஏற்படும் மரணத்தில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். கடந்த ஆண்டு மட்டும் இந்தியா வில் 76 பேரும், பாகிஸ்தானில் 9 பேரும், அமெரிக்காவில் 8 பேரும், ரஷ்யாவில் 6 பேரும், பிலிப்பைன்ஸில் 4 பேரும், சீனாவில் 4 பேரும் இறந்துள்ளனர். இவர்களில் 68% பேர் 24 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் 75.5% பேர் ஆண்கள்.

காற்றிலிருந்து உணவு

மனிதன் வெறும் காற்றை சுவாசித்து உயிர் வாழ முடியாது, அவனுக்கு உணவும் தண்ணீரும் வேண்டும் என்பது நாம் அனைவருக்கும் நன்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்கு மிகவும் சிரமப்படும் பாலைவன பகுதி மக்களின் வசதிக்காக காற்றிலிருந்து தண்ணீரை தயாரிக்கும் ரோபோவை விஞ்ஞானிகள் வடிவமைத்திருந்தனர். தற்போது உணவையும் காற்றிலிருந்தே தயாரிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. பின்லாந்தை சேர்ந்த சோலார் புட்ஸ் என்ற நிறுவனம், காற்றை மாசுபடுத்தும் கரியமில வாயுவை சூரிய மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு, சோலெய்ன் என்ற புதுமையான புரத மாவை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் தொழில்நுட்பத்தை பின்பற்றி இந்த சாதனையை சோலார் புட்ஸ் செய்துள்ளது .வழக்கமான தானிய மாவுகளில் இருக்கும் அதே சுவையும், புரதம், கார்போ ஹைட்ரேட் மற்றும் சிறிது கொழுப்பு ஆகியவை சோலார் புட்ஸ் நிறுவனத்தின் காற்று மாசிலிருந்து தயாரிக்கும் சோலெய்ன் புரத்ததிலும் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சோலெய்ன் தயாரிக்க எரிபொருள் செலவு குறைவு. ஒரு கிலோ சோயாவை உற்பத்தி செய்ய 2,500 லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், சோலெய்னுக்கு வெறும், 10 லிட்டர் தண்ணீரே போதும். இதனால், பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சோலெய்ன் புரத மாவை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மொபைல் அரக்கன்

செல்ஃபோனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்களுக்கும், புற்று நோய்க்கும் பலமான தொடர்பு உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்த கதிர்வீச்சு மூளையில் புற்று நோயை உண்டாக்கும் என்றும் குழந்தைகள் தொடர்ந்து இந்த கதிர்வீச்சில் தாக்கப்பட்டால் லுக்கீமியா வருவதற்கு சாத்தியங்கள் உள்ளன எனவும் தெரிய வந்துள்ளது.

இனி பயணச்சீட்டு வாங்க சில்லறை வேண்டாம் - க்யூஆர் கோடு போதும்

சென்னையில் விரைவு ரயில், மின்சார ரயில் பயணச்சீட்டுகளை எடுப்பதற்கு கால தாமதத்தை தவிர்க்க, தெற்கு ரயில்வே தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பயணச்சீட்டு வழங்கும் கவுண்ட்டர் அறை அருகே இதை வைத்துள்ளது. இதனை பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களே பயணச்சீட்டு எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பயணிகளின் கூடுதல் வசதிக்காகவும், மேலும் கால தாமதத்தை தவிர்க்கவும், தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தில் 'க்யூ. ஆர்' கோடு மூலமாக பணம் செலுத்தும் வசதியையும், பயணச்சீட்டு பெறும் முறையையும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பயணிகள் 'க்யூ. ஆர்' கோடை ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று கொள்ளலாம். மேலும் மாதாந்திர பயண சீட்டை க்யூஆர் கோடு மூலம் புதுப்பித்து கொள்பவர்களுக்கு 0.5 சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகில் அதிகமான சிகரங்களை கொண்ட மலை எது தெரியுமா?

உலகில் அதிகமான சிகரங்களை கொண்ட மலை எது தெரியுமா... அது நமது நாட்டில் உள்ள இமயமலைதான். உலகில் உள்ள உயரமான சிகரங்களில் 30 சதவீதம் இமயமலையிலேயே அமைந்துள்ளன. உலகிலேயே மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரமும் இமயமலையில்தான் உள்ளது. இதில் ஆண்டு தோறும் சுமார் 1200 பேர் மலையேற்ற பயிற்சி  பெறுகின்றனர். அவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை அடைகின்றனர் என்றால் ஆச்சரியம் தானே.. மேலும்  கடந்த நூற்றாண்டில் எவரெஸ்ட் ஏற முயன்று சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 பேர் இது போன்ற வழிகளில் உயிரிழக்கின்றனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட முடியாமல் இன்னும் பனியிலேயே புதைந்துள்ளன.

வேகமாக உருகும் எவரெஸ்ட்

உலகிலேயே மிகவும் உயரமான பனி சிகரமான எவரெஸ்ட் வேகமாக உருகி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் கடந்த 25 வருடங்களில் அந்த பனிப்பாறை இதுவரை 54 மீட்டர் வரையில் அகலத்தில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த பனிப்பாறை கடல் மட்டத்திலிருந்து 25 ஆயிரத்து 938 அடி உயரத்தில் உள்ளது. இது பனியாக மாறிய நேரத்தை காட்டிலும் 80 மடங்கு வேகமாக உருகி வருகிறது. இதற்கு பருவநிலை மாற்றமும் வேகமான காற்றும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. சுமார் 2000 வருடங்களாக உருவான பனிப்பாறைகள் 1990ஆம் ஆண்டிலிருந்து உருகத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இமாலய மலைத்தொடர்களை நம்பி சுமார் பல கோடி மக்கள் உள்ளனர். இவர்கள் குடிநீருக்கு இந்த மலைத்தொடர்களைதான் சார்ந்துள்ளனர். எனவே இந்த மலைத்தொடரில் உள்ள பனிப் பாறைகள் அனைத்தும் உருக தொடங்கினால் மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் நீர் இல்லாமல் போய்விடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago