முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

120 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் பல்பு

எந்த பல்பாக இருந்தாலும் நம்மூர் மின்சாரத்துக்கு சில மாதங்கள் தாங்குவதே பெரிய விஷயம். அதிலும் அந்த காலத்து குண்டு பல்பு என்றால் கேட்கவே வேண்டாம்...மின் அழுத்தம் சற்றே மாறினாலும் டப் பென்று மூச்சை நிறுத்தி விடும். வீடு இருண்டு விடும். இன்றைக்கு எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்டன. ஆனால் 120 ஆண்டுகளாக விடாமல் எரிந்து கொண்டிருக்கு குண்டு பல்பு பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா..அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் ஈஸ்ட் அவென்யூவில் உள்ளது லிவர்மோர் ப்ளேசன்டன் தீயணைப்புத்துறை. இந்த தீயணைப்பு நிலையத்தில் தான் 1901 ஆம் ஆண்டிலிருந்து எரிகிறது இந்த அணையா குண்டு பல்பு. கார்பன் இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் பல்பு 1890 களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட ஷெல்பி எலக்ட்ரிக் நிறுவனத்தால் ஓஹியோவிலுள்ள ஷெல்பியில் தயாரிக்கப்பட்டது. 1901 ஆம் ஆண்டில் தீயணைப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க கூடிய இந்த பல்ப் சென்டேனியல் பல்ப் என அழைக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் பல்ப் பொருத்தப்பட்ட பொழுது 30 வாட் வெளிச்சத்தை வெளியிட்டு கொண்டிருந்தது. தற்பொழுது மிகவும் மங்கலாக 4 வாட் இரவு விளக்கு போன்ற வெளிச்சத்தை வெளியிடுகிறது. என்ன ஆச்சரியம் பார்த்தீர்களா..

வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்

சில வேப்பமரங்களில் திடீரென்று பால்போன்ற நீர் சுரக்கும். பொதுவாக (இயல்பாக) வேப்பமரத்தில் உள்ள மாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். வேப்பமரத்திற்கு அருகில் நீர்நிலைகள் அதிகம் இருப்பின், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப்பட்டையின் அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்தை பட்டை வழியே (அதைப் பிளந்து கொண்டு) பால் போல வடிய செய்யும்.இதைத்தான் வேப்ப மரத்தில் பால் வடிகிறது என்கின்றனர். மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் வடிவது நின்று போகும். இப்படி பால்வடிகின்ற மரங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகில்தான் இருக்கும். அதனால்தான் எல்லா வேப்ப மரங்களிலும் பால் வடிவதில்லை, வறண்ட நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

நிலாவை போன்று...

சீனாவில், யூகோங்-1 என்று பெயரிடப்பட்ட ஆய்வகத்திற்குள் நிலாவில் உள்ள தட்பவெப்பநிலை, காற்றழுத்தம் ஆகியவை இருக்கும். இதன் மூலம் நிலாவில் மனிதன் தங்கி அங்குள்ள சூழலை கையாள்வதற்கான ஆய்வாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. “விண்வெளி ஆய்வில் சீனா, உலகின் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. 2018-ம் ஆண்டு நிலாவின் மறைவிடங்களை ஆராயும் பணிக்கு முன்னோட்டமாக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்களில் 4 பேர் கொண்ட முதல் குழு, 60 நாட்களும், 4 பேர் கொண்ட இரண்டாவது குழு 200 நாட்களும் தங்குவார்கள். இந்த ஆய்வகத்தில் ஒரு தங்குமிடம், 2 தாவரங்களுக்கான பசுமைக்கூடம் இருக்கும். சீனா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலா கிராமத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

சுற்றுலாவுக்கு ஏற்ற இடம்

உலகின் சிறந்த சுற்றுலா தலங்களில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் டாப்-10 நகரங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகளவில் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தேர்வான 43 சுற்றுலா தலங்களில் 10-வது இடத்தையும் ஆசியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் 3-வது இடத்தையும் ஜோத்பூர் நகரம் பிடித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரம் அழகிய அரண்மனைகள், கோட்டைகள், பிரமாண்ட மாளிகைகள் போன்றவற்றிற்கு சொந்தமானது. இதனால் இந்தியாவின் சிறந்த சுற்றுலா மையமாக ஜோத்பூர் விளங்குகின்றது.

மத்யாசனம்

தோள்பட்டை கழுத்து வலியால் அவதிப்படுபவர்களுக்கு மத்யாசனம் சிறந்த தீர்வு. இந்த யோகா செய்வதால், மன அழுத்தம், கழுத்துவலி, நரம்பு பிரச்சனை ஆகியவை தீரும். அதேபோல் வயிற்று பகுதியில் அழுத்தம் தரப்படுவதால் கொழுப்புகள் குறைந்து தொப்பை குறைய வழிவகுக்கும். சுவாசத்தை சீர்படுத்தும். மார்புக் கூடு விரிவடையும். தைராய்டு சுரப்பிகள் நன்றாக இயங்கும்.

மொபைல் வேலட்

இந்தியாவில் இருக்கும் எந்தவொரு மொபைல் வேலட்டும் பாதுகாப்பானது இல்லை என்று குவால்கோம் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டே இதுபோன்ற பெரும்பாலான மொபைல் வேலட்டுகள் இயங்குகின்றன. இதனால் வாடிக்கையாளர்களின் கடவுச் சொல் உள்ளிட்ட பாதுகாப்பு குறித்த தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மொபைல் பேங்கிங் எனப்படும் செல்போன்கள் மூலம் செய்யப்படும் பணபரிவர்த்தனைகளைப் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் வகையிலான புதிய பாதுகாப்பு அம்சத்தினை குவால்கோம் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago