குழந்தைகள் வெளியில் விளையாடும் போது, அவர்களது உடல் மற்றும் மனம் வலிமையடைகிறது. அவர்களுக்கு ஒற்றுமையையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் நீண்ட காலம் உடல் மற்றும் மன வலிமையுடன் இருக்க முடியும். இதற்கு மாறாக ஸ்மார்ட்போனை விளையாட கொடுத்தால் இதெல்லாம் அப்படியே தலைக்கீழாக மாறும். மேலும் உடல்ரீதியாக, மனரீதியாகவும் பாதிப்புகுள்ளாகின்றனர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவின் எல்லையில் ரஷ்யா, ஈரான், ஆர்மீனியா, ஜார்ஜியா மற்றும் காஸ்பியன் கடல் இடையே அஜர்பைஜான் நாடு அமைந்துள்ளது. பெண்களுக்கு உரிமை வழங்கிய முதல் முஸ்லிம் நாடு. 1918 ஆம் ஆண்டில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் முஸ்லீம் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இன்றுவரை ஆண் பெண் சமத்துவ முஸ்லிம் நாடுகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இங்கு திருமணம் நிச்சயம் வித்தியாசமாக தேநீர் கோப்பை மூலமாக நடத்தப்படுகிறது. திருமண நிச்சயம் செய்ய கூடியிருக்கும் பொழுது தேனீர் கோப்பைகள் சர்க்கரை இல்லாமல் பரிமாறப்பட்டால் திருமணம் இன்னும் நிச்சயம் செய்யப்படவில்லை என அர்த்தம். தேனீர் கோப்பையில் தேநீர் இனிப்பு சேர்த்து கொடுக்கப்பட்டால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது என அர்த்தம். அஜர்பைஜானின் தேசிய விலங்கு கராபக் குதிரை. இது உலகின் பழமையான இனங்களில் ஒன்றாகும். அஜர்பைஜானில் குதிரை இறைச்சி ஒரு காலத்தில் பரவலாக உண்ணப்பட்டது. ஆனால் இப்போது அதற்கு பதிலாக மெனுவில் ஆட்டுக்குட்டி மற்றும் மாட்டிறைச்சியைக் காணலாம்.
சோடாவை தினமும் குடிப்பதால் 50% இதய நோய்கள் உருவாகும். தொடர்ந்து ஒருவருடம் குடித்தால் உடல் பருமன் இரட்டிப்பாகும் . சோடாவிலுள்ள மூலப்பொருட்களால் நரம்பு மண்டலம் விரைவில் பலமிழந்து போய்விடும். இதனால் நரம்புத் தளர்ச்சி உருவாகும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக முதுமையில் அல்சீமர் நோய் வரும் ஜாக்கிரதை.
உலகில் உள்ள பெரும்பாலான ஜீவராசிகளுக்கும் புற ஒலிகளை கேட்கும் வகையில் காதுகள் அமைந்துள்்ளன. மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளுக்கு காதுகள் அதன் தலையிலேயே அமைந்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் மனிதனை போல அல்லாமல் வெட்டுக்கிளிகளுக்கு காதுகள் எங்குள்ளன தெரியுமா? வெட்டுக்கிளிகளின் காதுகள் அவற்றின் வயிற்றின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன. ஒலிகளை கேட்கும் வகையில் அதன் வயிற்றில் அடிப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சவ்வு போன்ற பகுதிக்கு டைம்பனம் என்று பெயர்.
உலகின் பேட்டரி இல்லா முதல் செல்போனை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். சுற்றுப்புறத்தில் உள்ள ரேடியோ சிக்னல்கள் மற்றும் ஒளி ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெற்று இயங்கும் வகையிலான புதிய செல்போன் ஒன்றை வடிவமைத்து ஆய்வாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். அந்த செல்போனைப் பயன்படுத்தி ஸ்கைப் மூலம் வீடியோ கால் பேசி நிரூபித்துள்ளனர். ரேடியோ அலைகளில் இருந்து ஆற்றலைப் பெறும் வகையில் செல்போன்களில் சிறிய அளவிலான ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த அலைகளைப் பயன்படுத்தி குரல் பதிவுகளை பரிமாறிக் கொள்ளும் வகையில் செல்போனின் செயல்பாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
பெரு நாட்டில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால், 800 முதல் 1,200 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்ட மிகவும் பக்குவமாகப் பதப்படுத்தப்பட்ட ஒரு மம்மி உடல் நாட்டின் தலைநகரான லிமாவிற்கு அருகில் உள்ள இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதில் வினோதம் என்னவென்றால், இந்த மம்மி இன் உடல் முழுவதும் கயிறுகளால் இறுக்கி கட்டப்பட்டுள்ளது. அதன் முகத்தை அந்த மம்மி அதன் கைகளால் மூடியுள்ளது. இது தெற்கு பெருவியன் இறுதிச் சடங்கு முறை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.சான் மார்கோஸின் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டு பிடித்துள்ளனர். இது 15 ஆம் நூற்றாண்டில் பெருவின் சிறந்த அறியப்பட்ட மச்சு பிச்சு கோட்டையை நிறுவிய இன்கா நாகரிகத்திற்கு முந்தையது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


