முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அதிகமில்லை ரூ.15 லட்சம்தான்!

ரஷ்ய மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கு பேர், பூனை வளர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பூனைகள் வைத்திருப்பவர்கள் தனியாகப் பதிவு செய்திருக்க வேண்டும், பூனைகளுக்கு என்று தனி பாஸ்போர்ட் இருக்கிறது. எஜமானர்களுடன் வெளியே செல்லும்போது உரிய ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன. பூனை வளர்ப்பை அதிகரிக்க ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் சர்வதேசப் பூனைக் கண்காட்சி நடைப்பெற்றது. இதில் ரஷ்ய பூனை ஒன்று ரூ.15 லட்சத்து 31 ஆயிரத்துக்கு விற்பனையானது. நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சியில், ரஷ்யா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து உயர் ரக பூனைகள் இடம்பெற்றன.

இந்தியாவுக்கு முதலிடம்

உலகம் முழுவதும் 32 கோடிக்கும் அதிகமான மக்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்தான் அதிகளவு தற்கொலைகள் நடைபெறுவதாகவும் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கி, 2015ம் ஆண்டு வரையான காலத்தில், இந்திய அளவில் 5.66 கோடி தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர்களில், 3 கோடி பேர் மன அழுத்தம்.

வயலின் இசைக் கருவி எத்தனை மரங்களால் செய்யப்படுகிறது தெரியுமா?

இசைக்கருவிகளில் மிகவும் பிரபலமானது வயலின் இசைக் கருவி. இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார். இத்தாலியில், பதினாராம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இது ரெபெக் (Rebec) எனப்படும் ஒரு பழம்பெறும் இசைக்கருவியில் இருந்து மறுவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த இசைக் கருவி எத்தனை மரங்களால் செய்யப்படுகிறது என்று தெரியுமா... ஒரு வயலின் 70க்கும் மேற்பட்ட தனித்தனி மரத் துண்டுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் மற்றொரு பெயர் பிடில். வயலின் உள்புறம் காலியாகவே இருக்கும். மேல்கூடு பல்வேறு மரச்சட்டகங்களால் இணைக்கப்படுகிறது.

வேப்பிலையின் நன்மை

மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை மரம் வேப்ப மரம். வேப்ப மரத்தின் இலையை 4,000 வருடங்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.  வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.

முகப்பருவை குறைக்க

கொழுப்பு நீக்கப்பட்ட உணவுப் பொருட்களும் பிம்பிளை உண்டாக்கும். கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் அதிகமாக குடிப்பதாலும், குறிப்பாக கொழுப்பு குறைவான தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது, அந்த சர்க்கரை கொலாஜன் இழைகளைப் பாதிப்பதோடு, பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பிக்க முடியாமலும் செய்யும். இதனால் முகப்பரு ஏற்படுகிறது.

மருத்துவத்தில் புதிது

உடலில் ஏற்படும் பிரச்னையை முன்கூட்டிய கண்டறியும் ரோபோ ஒன்று இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. HUNOVA என்ற இந்த ரோபோவில் அமர்ந்தோ, நின்ற நிலையிலோ இருக்கும் போது உடலில் ஏற்படும் மூட்டுப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பயோ மெட்ரிக் மூலம் கண்டுபிடித்து சொல்லிவிடுமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago