முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

காற்று விற்பனைக்கு...

சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலைக்காற்றைப் பாட்டிலில் அடைத்து, விற்பனை செய்து வருகிறார் ஜான் கிரீன் என்பவர். அரை லிட்டர் முதல் 3 லிட்டர் பாட்டில்களில் விற்பனைச் செய்யப்படுகிறது. இந்தக்காற்றின் ஒரு லிட்டர் பாட்டிலின் விலை 167 டாலர். இந்திய மதிப்பில் ரூ.11163 ஆகும்.

கோதுமையின் பலன்

கோதுமையில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் உள்ளாதல் நம் உடலுக்கு மிகவும் ஏற்றது. மலச்சிக்கல், செரிமான பிரச்சினையை தீர்க்க  காலை உணவில் கோதுமை சேர்த்துக்கொண்டால் அவை தீரும். கோதுமையில் நார்ச்சத்துக்கள் அடர்த்தியாக உள்ளது. இவை உடல் இயக்கம் சீராக நடைபெறவும், நாள்பட்ட நோய் தாக்கங்களில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

நீந்தி திரியும் வண்ண மீன்களுக்கு மத்தியில் அமர்ந்து சாப்பிடும் உணவகம்

கலர் கலராக வண்ண மீன்கள் காலுக்கு அடியில் சுற்றித் திரிய அதன் மத்தியில் மேஜை நாற்காலி போட்டு சாப்பிடும் அழகிய ஹோட்டல் எங்கிருக்கிறது தெரியுமா.. தாய்லாந்தில் உள்ள ஹோசிமின் நகரில்தான் இப்படி ஓர் அழகிய அனுபவத்தை அளிக்கும் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் கால் பாதம் வரை நிரம்பியிருக்கும் ஹால் ஒன்றில் அழகிய கலர் கலர் மீன்கள் நீந்தி விடப்பட்டிருக்கும் அவற்றின் நடுவில் வாடிக்கையாளர்கள் உணவு அருந்துவதற்கான மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். அதில் அமர்ந்து உணவருந்துவது மிகவும் அற்புதமான அனுபவத்தை அளிப்பதாக உள்ளது.

வரலாற்றில் முதன் முதலாக சட்டம் எங்கு இயற்றப்பட்டது

மெசபடோமியா நாகரிகம் நாம் அனைவரும் நன்கு அறிந்த பண்டைய கால நாகரிகங்களில் ஒன்றாகும். அங்குதான் பழங்கால பாபிலோன் என்ற நகரம் சுமார் கிமு 2300களில் நிறுவப்பட்டது. இந்நகரை மிகவும் புகழ் பெற்ற அரசனான கிங் ஹம்முராபி என்பவன் ஆட்சி செய்து வந்தான். இவன்தான் மனித குல வரலாற்றிலேயே முதன்முறையாக சட்டங்களை வகுத்தான் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த பாபிலோன் நகரம் தொங்கும் தோட்டங்களுக்காக மிகவும் புகழ் பெற்றது. அது உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

நாம் வீசியெறியும் ஆடைகள் மட்க எத்தனை ஆண்டுகள் தேவை?

உலகம் முழுவதும் நாகரிகமடைந்த மனிதர்கள் ஆடைகளை அணிய தொடங்கினர். அதுவும் தற்போது டிசைன் டிசைனாக ஆடைகளை அணிந்து தள்ளுகிறோம். உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான டெக்ஸ்டைல் கழிவுகளை வெளியேற்றுகிறோம். நாம் அணியும் ஆடைகள் மட்கி போக எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள் எவ்வளவு தெரியுமா...40 ஆண்டு காலம் ஆகுமாம். பெரும்பாலான உடைகள் சாயங்களாலும், ரசாயனங்களாலுமே நிறமேற்றப்படுவதால் அவை நிலத்தை விஷமாக்குகின்றன.

சிக்னலிலேயே வாழ்நாளை கழிக்கும் மனிதன்

நகரத்தில் வாகனம் ஓட்டுவது நரகத்தை விட கொடுமையானது. அதிலும் போக்குவரத்து சிக்னலுக்காக நிற்கும்போது ஏற்படும் அழுத்தம் சொல்லி மாளாது. புதிய ஆய்வு ஒன்றில் ஒவ்வொரு மனிதரும் தனது  வாழ்நாளில் சராசரியாக 6 மாதங்களை சிக்னலில் காத்திருக்கும் போது செலவிடுவதாக தெரியவந்துள்ளது. பயண நேரத்தில் 20 சதவீதம், அதாவது 75 விநாடிகளை சிவப்பு சிக்னலில் செலவாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago