முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வைரத்தை முதன் முதலாக வெட்டி எடுத்து உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு

 இன்றைக்கு உலகிலயே அதிக விலையுள்ள ஆபரணம் எது என்று கேட்டால் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு சொல்வார்கள்.. அது வைரம்தான். அது சரி இந்த வைரம் எங்கிருந்து எப்போது முதன் முதலாக வெட்டி எடுக்கப்பட்டது தெரியுமா.. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தான் வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. தொடக்கத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள குண்டூர் டெல்டா பகுதிகளில்தான் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு வெட்டி எடுக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் பிரேசிலில் வைரம் இருப்பது கண்டுபிடிக்கப்படும் வரை உலகின் வைர சந்தையில் இந்தியாதான் நம்பர் ஒன். இந்தியாவிலிருந்து அந்நிய படையெடுப்புகளால் கொள்ளை போன் முக்கிய தொல் பொருள்களில் விலையுயர்ந்த வைரங்களும் அடக்கம். இது மிகவும் ஆச்சரியமான ஒன்று தானே

உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் செல்போனில் வைரஸ் இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்துவிடலாம். உங்கள் அனுமதி இல்லாமல் செயலிகள் அல்லது வேறு ஏதேனும் ப்ரீமியம் பயன்பாடுக்காக உங்கள் அக்கவுண்டில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அல்லது, உங்களின் அனுமதி இல்லாமலேயே ப்ரீமியம் மெசேஜ் அல்லது அழைப்புகள் செல்லும். அதிகப்படியான விளம்பரங்கள் உங்கள் செல்போனில் தோன்றிக்கொண்டிருந்தால், விளம்பரம் தொடர்பான ட்ரோஜன் அல்லது வைரஸ் உங்கள் செல்போனுக்குள் நுழைந்திருக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அப்போது, உங்களின் தொடர்பில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள். உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறன் முன்புபோல் இருக்காது. அடிக்கடி ஹேங்க் ஆகும் அல்லது மிகவும் ஸ்லோவான ஸ்பீடில் புரோகிராம்கள் இயங்கும். புதிய செயலிகள் உங்கள் அனுமதியில்லாமல் பதிவிறக்கமாகியிருக்கும். அப்படி இருந்தால் உடனடியாக உஷாராகிக்கொள்ளுங்கள். விரைவாக டேட்டா தீர்ந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கலாம். ஏனென்றால், அவையே டேட்டாக்களை அதிகம் யூஸ் செய்யும். பேட்டரி திடீரென குறையும், போன் சூடாகவும். இவையெல்லாம், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ்கள் இருப்பதற்கான அறிகுறி.

அதிசய ரயில்

ஹரியானா மாநிலத்தில் இருந்து இமாச்சல பிரதேசத்ரதிற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. டிசம்பரில், இந்த ரயில் தண்டவாளப்பாதை பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தாலும் இந்த ரயில் தடையில்லாமல் 365 நாட்களும் ஓடக்கூடியதாகவுள்ளது. பனிக்கட்டிகள் தண்டவாளத்தில் விழுந்தாலும் அதனை அப்புறப்படுத்தும் நவீன கருவிகளுடன் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ரயில் பாதை  ஐ.நா. பாரம்பரிய பாதுகாப்பு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. தற்போது தேசிய தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த நிலையில், பல ரயில்கள் பல மணி நேரம் தாமதமாகவும், சில ரயில்கள் ரத்தும் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ஹரியானா - இமாசலப்பிரதேச ரயில் சிறப்பு மிக்கதாக திகழ்கிறது.

எடையை குறைக்க

காலையில் காபி, டீக்கு பதிலாக, பழச்சாறுகளை பருகுபவர்கள் தான் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. லஸ்ஸி,  பாதாம் பால், பழச்சாறுகள், எருமை பால், வாழைப்பழம்,  ஸ்மூத்தி இவற்றை காலையில் எடுக்கக்கூடாது. ஒரு டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

birds

தொலை தூரத்தில் இருந்து வலசை வரும் பறவைகள் வானில் கூட்டமாக பறப்பதை பார்த்திருப்போம். அவை பெரும்பாலும் ஆங்கில 'V'வடிவில் பறப்பதை காணலாம்.. அது ஏன் அவ்வாறு பறக்கின்றன.. அவ்வாறு 'V' வடிவில் பறப்பதால் அவை ஆற்றலை சேமிக்கின்றன..தனியாக பறக்கும் பறவை காற்றால் பின்னுக்கு இழுக்கப்படும் விசையிலிருந்து, இவ்வாறு கூட்டமாக 'V' வடிவில் பறக்கும் போது அது தடுக்கப்படுகிறது... இதனால் அவற்றால் வெகு தொலைவுக்கும், இலகுவாகவும் பறக்க முடிகிறது.. மேலும் சக பறவைகளை எந்த நிலையிலும் பார்க்க முடிவதால் பாதுகாப்பாகவும் பின்தொடர முடிகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

புதிய நட்சத்திர கூட்டம்

சூரியனை விட 20 மில்லியன் பில்லியன் மடங்கு அதிக அடர்த்தி கொண்ட புதிய நட்சத்திர கூட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சரஸ்வதி என பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திர கூட்டம் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், இது பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த நட்சத்திர கூட்டத்தில் 42 குழுக்களாக பத்தாயிரத்துக்கும் அதிகமான நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. இதனை இந்தியாவின் புனேவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டிறிந்து, இதற்கு சரஸ்வதி என்று பெயரிட்டுள்ளனர். இதுவே நமது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திர கூட்டத்திலேயே மிகப் பெரியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago