முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

குறுக்கு வலி,மூட்டு வலி, குதிகால் வலி நீங்க இயற்கை மருத்துவம்.

  1. குதிகால் மற்றும் மூட்டு வலி வர, முக்கிய காரணமாக இருப்பது அதிக உடல் எடையாகும்.
  2. உடல் பருமன் இருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்குப் பாரம் குறைந்து வலிகள் குறையும். 
  3. உளுத்தம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளன, அவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  4. உளுந்தில் உள்ள தாதுஉப்புக்கள் மற்றும் விட்டமின்கள் உடலில் சீரான மாற்றம் நடைபெற உதவுவதோடு குறுக்கு வலிகள்,மூட்டு வலிகள், குதிகால் வலியை சரிசெய்கின்றன.
  5. எலும்பு மூட்டுகளில் கழிவுகள் தேங்கும் போது குதிகால் வலிகள் வரும்.
  6. எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்ற கிடைத்துவிட்டால்,மூட்டு வலிகள் தீரும்.
  7. குதிகாலில் வலிகள் வந்து சிரமப்படுபவர்கள், தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். கரடுமுரடான பாதைகளில் நடக்கக்கூடாது.
  8. முறைப்படி பயிற்சிகளைச் செய்யாமல் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டால் நாளடைவில் குதிகால் வலிகள் வந்துவிடும்.
  9. சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், குதிகால் வலிகள் வருவது தடுக்கப்படும்.
  10. எலும்பு முறிவு ஏற்பட்டால், விரைவில் இணையவும் கால்சியம் அவசியம். கால்சியம் சத்தை கிரகிக்க வைட்டமின் டி தேவை. இந்த இரண்டும் போதுமான அளவில் கிடைத்துவிட்டால் குறுக்கு வலி,மூட்டு வலி, குதிகால் வலி தீரும்.
  11. குதிகால்,உள்ளங்கால் மற்றும் கணுக் காலில்  ரத்த ஓட்டம் சரியானால் வலிகள் குறையும். 
  12. தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் வலியைப் பொறுத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டால், சிறிது நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்