முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தினை அரிசியின் மருத்துவ பலன்கள்

 

  1. தினை அரிசியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.
  2. நாட்டு சர்க்கரையுடன் திணை அரிசி மாவை கலந்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
  3. கால்சியம் சத்துக்கள் தினை அரிசியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும்.
  4. தினை அரிசியினை உண்டு வரும்பொழுது ஒரு நாளிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து விடும்.
  5. நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினை உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோயால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும்,மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.
  6. தினை அரிசியை மாவாக இடித்து, அந்த மாவில் பசும் நெய் கலந்து, களி போல செய்து சாப்பிட்டு வந்தால் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து ஆண்கள் மற்றும் பெண்களின் மலட்டு தன்மை நீங்கும்.
  7. தினை அரிசியை எடுத்து கொள்வதால் நரம்பு தளர்ச்சி குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.
  8. இதயத்துக்கு பலம் சேர்க்கும் பி1 வைட்டமின் தினையில் உண்டு தினை அரிசியை எடுத்து கொள்வதால் இதய நோய் வராமல் தடுக்க முடியும், இதயத்தை பலப்படுத்தும்.
  9. தினை அரிசியை எடுத்து கொள்வதால் அறிவாற்றல் பெருகும். நினைவுத்திறன் அதிகரிக்கும். முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளை தடுக்கும்.
  10. மூட்டு வலி இருப்பவர்களும் தினை அரிசியை உணவாக எடுத்துகொள்ளலாம். வளரும் குழந்தைகளுக்கு தினை அரிசியை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் எலும்புகள் உறுதியாகும் வளர்ந்த பிறகும் எலும்பு தேய்மானம் உண்டாக்காது.
  11. தினை அரிசியை எடுத்து கொள்வதால் எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது, எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்க செய்கிறது,
  12. தினை அரிசியை எடுத்து கொள்வதால் நமது உடலில் ஏற்படும் நோயை குறைத்து,மீண்டும் நோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்