எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல்-2017 பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்க விழா, கலெக்டர் மு.கருணாகரன், தலைமையில், சங்கரன்கோவில், காந்திநகரில் உள்ள நியாயவிலைக் கடையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலெக்டர் மு.கருணாகரன், 100 நபர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி, திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை தொடங்கி வைத்தார்கள்.பின்னர், கலெக்டர் பேசியதாவது-
ஏழை, எளிய மற்றும் நடுத்தர பொதுமக்கள் பொங்கல் பண்டிகையன்று பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. தமிழக அளவில் பொங்கல்-2017 பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தமிழக முதலமைச்சர் சென்னையில் இன்று துவக்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்திலும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 1454 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், கூட்டுறவுத் துறையின் மூலும் 807 முழு நேர நியாயவிலைக் கடைகளும், 375 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும், ஆக மொத்தம் 1182 கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு 2017ன்படி, அரிசி பெறும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் வழங்கப்படுகிறது. இதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.110/- மதிப்பிலான பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 7,94,023 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,57,31,035/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சங்கரன்கோவில், கழுகுமலை ரோடு (27ஊஊ004ஞலு) நியாயவிலைக் கடையில் 1,124 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் ரூ.3 கோடி செலவில் 10 இடங்களில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ரூ.14.25 கோடி செலவில் 59 கண்மாய்கள் இயந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய நிலங்களின் பாசன பரப்பு அதிகரிப்பதுடன், நிலத்தடி நீரும் உயரும். திருநெல்வேலி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கணக்கெடுக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படவுள்ளது. நமது மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைவரையும் வாழ்த்துகிறேன் என கலெக்டர் மு.கருணாகரன், பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி கோட்டாட்சித் தலைவர் செல்வி பெர்மிவித்யா, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, ஆவின் நிறுவனத் தலைவர் ரமேஷ், சங்கரன்கோவில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் வேலுசாமி, சௌந்தர் என்ற சாகுல்ஹமீது, துணைப் பதிவாளர் (பொ.வி.தி) அ.ரியாஜ்அகமது, சங்கரன்கோவில் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் எஸ்.பி.சுடலைமுத்துபாண்டியன், குடிமைப் பொருள் வட்டாட்சியர் சுப்புராயன், சங்கரன்கோவில் கூட்டுறவு சார் பதிவாளர் (பொ.வி.தி) சக்திவேல், அக்ரோ மாவட்ட துணைத் தலைவர் சண்முகையா, குடிமைப் பொருள் வழங்க வருவாய் ஆய்வாளர் பெருமாள் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தூத்துக்குடியில் மாணவி கொலை வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு
13 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அ
-
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு: கனிமொழி எம்.பி. தகவல்
13 Mar 2026தூத்துக்குடி, தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடுவார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி.. தேர்தல் அறிவிப்பே இன்னும் வரவில்லை.
-
சுட்டு வீழ்த்தப்பட்டதா..? ஈராக்கில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க விமானம்-4 பேர் பலி
13 Mar 2026தெஹ்ரான், ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.581.65 கோடி மதிப்பிலான அனில் அம்பானியின் சொத்துகள் முடக்கம்
13 Mar 2026புதுடெல்லி, கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்பிலான
-
பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு: கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விநியோகிக்க தடை
13 Mar 2026சென்னை, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நாளை நேரில் ஆஜராகுகிறார் விஜய்
13 Mar 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விஜய் நாளை நேரில் ஆஜராகுகிறார்.
-
தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
13 Mar 2026சென்னை, இளைஞர்களே தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026சென்னை, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ.
-
மாதவிடாய் விடுப்பு அளித்தால் பெண்கள் வேலை பறிபோகும்: சுப்ரீம் கோர்ட் கருத்து
13 Mar 2026புதுடெல்லி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும், நிறுவன உரிமையாளர்கள், பெண்களை
-
இந்திய பங்குச்சந்தைகள் 3-ம் நாளாக கடும் வீழ்ச்சி : ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு
13 Mar 2026மும்பை, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக நேற்று (மார்ச் 13) கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமானது.
-
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி: பார்லி., மக்களவை ஒத்திவைப்பு
13 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
-
கள்ளச்சந்தையில் விற்க சிலிண்டர்கள் பதுக்கல்: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
13 Mar 2026மதுரை, மதுரையில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் தமிழ்நாட்டில் முத
-
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026புதுடெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக எல்.பி.ஜி.
-
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநில தோ்தல் தேதி மாா்ச் 16-ல் அறிவிப்பு?
13 Mar 2026புதுடெல்லி, தமிழகம், கேரளம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி தோ்தல் தேதியை இந்திய தோ்த
-
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,843 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Mar 2026சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம்,
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.


