முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே.கே.நகர் மற்றும் புளியந்தோப்பு பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 நபர்கள் கைது

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      சென்னை

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையர் ஜார்ஜ்உத்தரவிட்டதன் பேரில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர். அதன்பேரில், கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் (அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, , முனுசாமி சாலை, ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் உள்ள காலி மைதானத்தில் கண்காணித்தபோது, அங்கு சிலர் சீட்டுக்கட்டுகளுடன் பணம் பந்தயம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. அதன்பேரில் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 1.கோபி (45), மேற்கு கே.கே.நகர், 2.குமார் (45), மேற்கு கே.கே.நகர், 3.அருள் (29), எம்.ஜி.ஆர்.நகர், 4.சுந்தர் (36), மேற்கு கே.கே.நகர், 5.கார்த்திக் ராஜா(28), எம்.ஜி.ஆர்.நகர், 6.ஆறுமுகம் (28), எம்.ஜி.ஆர்.நகர். 7.ராஜா (37), எம்.ஜி.ஆர்.நகர், 8.அப்துல் ரகுமான் (37), வடபழனி, 9.சரவணன் (32), வடபழனி, 10.முருகன்(40), ஆற்காடு சாலை, 11.பழனி (42), எம்.ஜி.ஆர்.நகர், 12. வெங்கடேசன் (42), 13.இளங்கோ (22), எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட 13 பேரும் ஆட்டோ ஓட்டுநர்கள் என்பது தெரியவந்தது. மேற்படி நபர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் பணம் ரூ.17,500/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, புளியந்தோப்பு நேரு நகர் 5வது தெரு மற்றும் 6வது தெரு சந்திப்பில் உள்ள காலி இடத்தில் சிலர் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த 1.ராஜன் (46), 2.வீரமுத்து (37), 3.ஆறுமுகம், 4.தமிழரசன், 5.சீனிவாசன் 6.கார்த்திக் ஆகிய 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் பணம் ரூ.4,020/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்