முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு ஆலோசனைக்குழுக் கூட்டம் கலெக்டர் .இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் பணி, முறைகேடுகளை களைவது, பொது விநியோகத் திட்ட பொருட்கள் கள்ளச்சந்தைக்கு திருப்பி விடுவதை தடுத்தல், போலி குடும்ப அட்டைகளை களைதல், தரமான பொருட்களை வழங்குதல், பொருட்கள் இருப்பு விவரம், உயர் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை பொருட்களை அங்காடிகளுக்கு அனுப்புதல் ஆகியவை குறித்து கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.கடந்த 30.11.2016 அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளால் எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தன்னார்வ அமைப்பினரிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதுடன் கூட்டம் நிறைவுற்றது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) அ.அனந்தராம் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களும், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்