எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பகல் பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மக்கள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள இதோ சில ஆலோசனைகள்.
வெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில் செல்வதால் வியர்வை சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் வறட்சி காணப்படும். மேலும் வியர்வை அதிகரிப்பால் ஏற்கனவே தோல் பகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகரிக்கும். அக்குள் மற்றும் முதுகுப் பகுதியில் இந்த அரிப்பு காணப்படும். உடல் சூட்டின் காரணமாக வெயில் கொப்புளம் மற்றும் வியர்குரு போன்ற தொல்லைகள் உண்டாகும்.
உடல் இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்து விடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாட்டு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் ஆகும். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும், வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும் அதிக வெப்பத்தின் காரணமாக சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், தோல் குளிர்ந்து சுருங்குதல் போன்ற தொல்லைகள் உண்டாகும்.
வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு ஏற்படலாம். நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் வெப்பத்தாக்கு வரும். இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்களை இது விரைவில் தாக்கும். இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு போதுமான நீர் ஆகாரம், சரியான உணவு முறை மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெயில்கால நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
பாதுகாப்பு முறை: வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும் போது கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். காட்டன் உடைகள் மட்டுமே வெயிலுக்கு ஏற்றவை. குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தி கண் எரிச்சலைத் தடுக்கலாம். மூன்று முறை குளிப்பதன் மூலம் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம். மேலும் பகல் 12 மணியில் இருந்து 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கடுமையாக உழைக்கலாம். எடை குறைந்த மெல்லிய உடையை தளர்வாக அணியலாம். மது மற்றும் தேநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம்.
சூடான உணவையும் தவிர்ப்பது நல்லது. தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆண்கள் வெளியில் செல்லும் போது முழுக்கை சட்டை, தொப்பி அணியலாம். வெயிலில் இருந்து தப்பிக்க குடை பயன்படுத்தலாம். பெண்கள் வாகனத்தில் செல்லும் போது வெயில்படும் இடங்களை மறைப்பது நல்லது. சன்ஸ்கிரீன் லோஷன் தடவுவதன் மூலம் தோல் கருப்பதைத் தவிர்க்கலாம். வியர்வை உற்பத்தியாகும் பகுதியில் பாக்டீரியாக்கள் செயல்புரிவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மருத்துவரின் ஆலோசனைப்படி சோப் மற்றும் லோஷன் உபயோகித்து துர்நாற்றத்தை விரட்டலாம்.
டயட் : “தினமும் எட்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பழச்சாறுகள், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி, கொய்யா ஆகியவற்றை சாலடாக உணவுக்குப் பின்னர் எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர்க்காய்கள் புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய், கீரை வகைகள், பழ வகைகளும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிர், மோர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். கம்பங்கூழ், கரும்புச் சாறு ஆகியவையும் அருந்தலாம்.
ஊற வைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடி இதில் ஏதாவது ஒன்றை காலை நேரத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டைக் குறைக்கலாம். எலுமிச்சையை சாலட், ரசம் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். அதிக நார்ச்சத்து மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும். அதிக மசாலா, அசைவ உணவுகள் மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது. கீரை, வெல்லம், பேரிச்சை, பால், முட்டை, கடலைக்கொட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் வெயிலால் இழந்த சக்தி உடலுக்கு கிடைக்கும் என்கிறார்கள் உணவு ஆலோசகர்கள்.
பாட்டி வைத்தியம : * கருவேப்பிலையைப் பொடி செய்து மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து சாப்பிடுவதால் வெயில் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல் சரியாகும்.
* கானாம் வாழைக் கீரையை ஒரு கைப்பிடி அளவுக்கு அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
* ஐந்து கிராம்பு மற்றும் 20 சீரகத்தைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் உஷ்ணத்தால் ஏற்படும் தலைவலி குறையும்.
* குப்பைக் கீரையை பருப்பில் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
* கொத்தமல்லியை நன்றாக அரைத்து உருண்டையாக்கி வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
* சர்ப்பகந்தா இலையை வதக் கிச் சாறு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் பாலில் கலந்து குடித்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
* சீரகத்தை தண்ணீரில் கொதி க்க விட்டுக் குடித்தால் ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.
* சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிமுள்ளி ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி செய்து கலந்து கொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
விஜய் பிரச்சார பேருந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வாகன ஓட்டுனரிடமும் விசாரணை
10 Jan 2026சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
10 Jan 2026சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'
10 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –10-01-2026
10 Jan 2026 -
குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி, பதாகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Jan 2026சென்னை, குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி மற்றும் பதாகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
ஜனநாயகன் பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த தயாரிப்பு நிறுவனம்
10 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளத
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கேரளா செல்கிறார்
10 Jan 2026கொச்சி, கேரளாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார்.
-
பியட் காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
10 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பியட் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தமா..? நயினார் நாகேந்திரன் விளக்கம்
10 Jan 2026கோவை, அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
வளர்ச்சியடைந்த இந்தியா: மூன்றாயிரம் இளைஞர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
10 Jan 2026டெல்லி, டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத்(வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச்
-
இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
10 Jan 2026சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களு
-
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
10 Jan 2026புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
-
நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி சி-62: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்
10 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி சி-62 நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் ராக்கெட் மாதிரியை வைத்து திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.
-
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை: பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் விரைவில் தமிழகம் வருகிறார்
10 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் மாதம் தமிழகம் வருகிறார்.
-
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
10 Jan 2026கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
நிதிஷ்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
10 Jan 2026பாட்னா, நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் அஷ்டமி சப்பரம், சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய காட்சி.
- மதுரை செல்லத்தம்மன் உற்சவாரம்பம்.
-
வார ராசிபலன்
10 Jan 2026 -
இன்றைய நாள் எப்படி?
10 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
10 Jan 2026


