எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக முதல்வர் வருகை தொடர்பான - முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் - இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு இணைச்செயலாளர் பொ.சங்கர் கலெக்டர்என்.வெங்கடேஷ் ஆகியோர்கள் முன்னிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தலைமையில், கலெக்டர்அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு அரசுத் துறைகளின் சார்பிலும் வழங்கப்படவுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்தும், தமிழக முதலமைச்சர் அவர்களால் புதிதாக திறந்து வைக்கப்படவுள்ள கட்டடங்கள் மற்றும் திட்டப் பணிகள் குறித்தும், புதிதாக அடிக்கல் நாட்டப்படவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக புதிதாக அறிவிக்கப்பட வேண்டிய திட்டப் பணிகள் குறித்தும், விரிவாகத் துறை அலுவலர்களுடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ விரிவாக ஆலோசனை செய்தார்கள். மேலும், விழா தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் ஒவ்வொரு துறையிலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்தார்.பின்னர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசியதாவது:-
பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா தூத்துக்குடி மாவட்டத்தில் 22.11.2017 அன்று சிறப்பாக நடைபெறுவது, நமது மாவட்டத்திற்கு கிடைத்த சிறப்பாகும். புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர்.அவர்களால் உருவாக்கப்பட்டது தூத்துக்குடி மாவட்டமாகும். எனவே, மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா தாம் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் போதே புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூறினார்கள். அதனடிப்படையில், 22.11.2017 அன்று நடைபெறவுள்ள இவ்விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும், பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களையும் அறிவிக்கவும் உள்ளார்கள். இவ்விழாவில், வருவாய்த் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சி முகமை, வேளாண்மைத் துறை, கல்வித் துறை, தொழிலாளர் நலத்துறை, தொழில் வணிகத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் அதிகளவிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டு, திறக்கப்பட தயார் நிலையில் உள்ள கட்டடங்கள் மற்றும் பணிகள் முடிக்கப்பட்டுள்ள திட்டப் பணிகள் விவரங்களையும், புதிதாக அடிக்கல் நடப்பட வேண்டிய திட்டப் பணிகள் குறித்த விவரங்கள் தயார் நிலையில் உள்ளது.
திரளாக பங்கேற்க வேண்டுகோள்
இவ்விழாவில், பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்து சிறப்பிக்கவுள்ளதால், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பு வசதிகளையும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக விழா முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இவ்விழா மிக, மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது என்ற பெருமையை தேடித்தரும் வகையில் சிறப்பாக விழாவினை நடத்திட வேண்டும். மேலும், சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், பாரத பிரதமர் முன்னிலை வகிக்கவுள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவில் மற்ற மாவட்டத்தை விட நமது தூத்துக்குடி மாவட்டம் மிகசிறப்பாக பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினை நடத்தியமைக்கான முதல் பரிசினை பெற வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து விழாவினை மிகச்சிறப்பாக நடத்த வேண்டும். - என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்தார்கள். முன்னதாக பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ள இடம் தேர்வு செய்வது தொடர்பாக கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மைதானத்தினை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு இணைச்செயலாளர் பொ.சங்கர் கலெக்டர்என்.வெங்கடேஷ் ஆகியோர்கள் முன்னிலையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இக்கூட்டத்தில், ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய வங்கி கூட்டுறவுத்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உல.இரவீந்திரன் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மூ.வீரப்பன், மாநகராட்சி ஆணையர் டாக்டர்..அல்பிஜாண் வர்க்கீஸ் சார் ஆட்சியர் பிரசாந்த் உதவி ஆட்சியர் (பயற்சி) சரவணன் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, கோட்டாட்சியர்கள் அனிதா, கணேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
சர்வதேச ஒருநாள், டி- 20 கிரிக்கெட்: விராட் கோலி உலக சாதனை
25 Oct 2025சிட்னி: சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்தன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித்
-
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்
25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
-
சாதனையை சமன் செய்த ராணா
25 Oct 2025ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3-வது மற்றும் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் நேற்று மோதியது.
-
3-வது ஒருநாள் போட்டியில் ரோகித், விராட் கோலி பேட்டிங்கை பார்த்தது மகிழ்ச்சி: கேப்டன் சுப்மன்
25 Oct 2025சிட்னி: கோலி பேட்டிங்கை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா வெற்றி...
-
கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
26 Oct 2025கரூர் : கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2025.
26 Oct 2025 -
'பைசன்' படக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு : இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி
26 Oct 2025சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
-
கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
26 Oct 2025வாஷிங்டன் : கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
26 Oct 2025சென்னை : 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல், சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
-
ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி சம்பவம்: ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
26 Oct 2025ராஞ்சி : ஜார்க்கண்ட்டில் ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
-
சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு
26 Oct 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
நேரடியாக போர் தொடுப்போம்: ஆப்கானுக்கு பாக். பகிரங்க எச்சரிக்கை
26 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 4 பேர் பலி
26 Oct 2025கீவ் : உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
-
ஆசியான் உச்சி மாநாடு: மலேசியாவில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
26 Oct 2025கோலாலம்பூர் : ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: தங்க தேரில் சுவாமி வீதிஉலா
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தங்க தேரில் சுவாமி வீதிஉலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம
-
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
26 Oct 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
கந்தசஷ்டி சூரசம்ஹார விழா; திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
26 Oct 2025திருச்செந்தூர் : கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி நெல்லை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
-
கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி
26 Oct 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
26 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
26 Oct 2025புதுடெல்லி : டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
-
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
26 Oct 2025நெல்லை : ஒவ்வொரு முறையும் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் மத்திய அரசு கிள்ளிக் கொடுக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
26 Oct 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
-
பாக்.குடன் அமெரிக்காவின் நெருக்கம் இந்தியாவுடனான நட்பை பாதிக்காது : மார்கோ ரூபியோ விளக்கம்
26 Oct 2025நியூயார்க் : பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
-
அமெரிக்க் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்
26 Oct 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.


