எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.
குறைதீர் கூட்டம்
இக்கூட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 338 மனுக்களில் வேளாண்மையைச் சார்ந்த 194 மனுக்கள் மற்றும் வேளாண்மை சாராத 144 மனுக்களுக்கும் பதில்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்கள். இக்கூட்டத்தில், வேளாண்மைத் துறையின் மூலம் 11 விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் மானியத்திலானரோட்டோவேட்டர் இயந்திரங்களையும், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஒரு விவசாயிக்கு ரூ.17700/-க்கான தீவன தட்டுக்களையும், தாது உப்புக் கலவையினை 5 விவசாயிகளுக்கும், தேசிய தோட்டக்கலைத் துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கும், மொத்தம் 19 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது-திருநெல்வேலி மாவட்டத்தில் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி முடிய 19.08 மி.மீ. மழை பெய்துள்ளது. தற்போது மாவட்டத்திலுள்ள அணைகளில் 34 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 15 சதவீதம் நீர் இருப்பு மட்டுமே இருந்தது. மாவட்டத்தில் பிசான பருவத்தில் 58,697 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையினை விட குறைவாக வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் 46 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டு, தற்சமயம் 19 கிராமகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேற்படி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து 1981.48 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1660/- ஆகவும், இதர ரகங்களுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1600/- ஆகவும், தமிழக அரசால் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2016-17ம் ஆண்டு நெல் மற்றும் உளுந்து பயிர்களுக்கு காப்பீடு செய்த 28,174 விவசாயிகளுக்கு ரூ.54.40 கோடி காப்பீடுட்டுத் தொகை இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் வட்டங்களில் உளுந்து பயிருக்கான காப்பீட்டுத் தொகை ஒரு சில கிராமங்களில் குறைவாக பெறப்பட்டுள்ளதாக வரப்பெற்ற புகாரினை ஆய்வு செய்த அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்ட உரிய இழப்பீட்டுத் தொகையினை பெற ஐஊஐஊஐ நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மக்காச்சோளம் மற்றும் பாசிப்பயிறுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை சுமார் ரூ.30 கோடி காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்று விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் (2017-2018) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 65,748 விவசாயிகள் 1,35,902 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் காப்பீடு செய்துள்ளனர். பருத்தி பயிருக்கு விவசாயிகள் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த கடைசி நாள் 28.07.2018 ஆகவும், கரும்பு பயிருக்கு காப்பீட்டு கட்டணம் செலுத்த கடைசி நாள் 31.10.2018 ஆகவும், அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களை பொறுத்தவரை 2017-18ம் ஆண்டு வாழை, வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்களுக்கு இதுவரை 266 விவசாயிகள் பயிர் காப்பீடு செலுத்தியுள்ளனர். தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையினை செலுத்த கடைசி நாள் 28.02.2018-ல் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அiவைரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை மரம் கணக்கெடுப்பு பணியினை வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வனத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். பிப்ரவரி-2018ம் தேதி புதன்கிழமை வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், வேளாண்மைத் துறை, வனத்துறை அலுவலர்கள் கொண்ட முத்தரப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை மனுக்களின் மீது அனைத்து துறை அலுவலர்களும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ் கோட்டாட்சித் தலைவர் (திருநெல்வேலி) மைதிலி, வோண்மைத் துறை இணை இயக்குநர் பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு.ராஜேந்திரன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அற்புதம் மற்றும் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
எங்கள் நிறுவனருக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
13 Oct 2025கடந்த வருடம் இதேநாளில் (அக்.14-ல்) கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தினபூமி நாளிதழ் நிறுவனரும், தொழிலதிபருமான திரு.கே.ஏ.எஸ்.மணிமாறன் அவர்களுக்கு தினபூமி நாளி
-
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-10-2025.
13 Oct 2025 -
கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025புதுடெல்லி : கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
உ.பி.யில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
13 Oct 2025லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
இந்தோனேஷிய பெண்ணை கரம்பிடித்த தமிழக வாலிபர்
13 Oct 2025திருவாரூர் : இந்தோனேஷிய பெண்ணை திருவாரூர் வாலிபர் கரம்பிடித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
-
கரூர் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபடுவோம்: ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025சென்னை : கரூர் சம்பவத்தில் எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
-
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
13 Oct 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவர மீனவர்கள் 3-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
-
தென்ஆப்பிரிக்காவில் சோகம்: பேருந்து விபத்தில் 42 பேர் பலி
13 Oct 2025ஜோகன்னஸ்பர்க் : தென்ஆப்பிரிக்காவில் பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
ஹமாஸ் பிடித்து வைத்திருந்த 20 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பு
13 Oct 2025காசா : ஹமாஸ் வசம் இருந்த அனைத்து பணயக்கைதிகளும் விடுவிப்பு செய்யப்பட்டனர்.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
இஸ்ரேலில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
13 Oct 2025ஜெருசலேம் : காசா அமைதி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை முறைக்கு உடனடி தீர்வு முறை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Oct 2025சென்னை : ரிசர்வ் வங்கிக்கு காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.
-
கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது: அண்ணாமலை
13 Oct 2025சென்னை : கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.