எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.
குறைதீர் கூட்டம்
இக்கூட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 338 மனுக்களில் வேளாண்மையைச் சார்ந்த 194 மனுக்கள் மற்றும் வேளாண்மை சாராத 144 மனுக்களுக்கும் பதில்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்கள். இக்கூட்டத்தில், வேளாண்மைத் துறையின் மூலம் 11 விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் மானியத்திலானரோட்டோவேட்டர் இயந்திரங்களையும், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஒரு விவசாயிக்கு ரூ.17700/-க்கான தீவன தட்டுக்களையும், தாது உப்புக் கலவையினை 5 விவசாயிகளுக்கும், தேசிய தோட்டக்கலைத் துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கும், மொத்தம் 19 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது-திருநெல்வேலி மாவட்டத்தில் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி முடிய 19.08 மி.மீ. மழை பெய்துள்ளது. தற்போது மாவட்டத்திலுள்ள அணைகளில் 34 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 15 சதவீதம் நீர் இருப்பு மட்டுமே இருந்தது. மாவட்டத்தில் பிசான பருவத்தில் 58,697 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையினை விட குறைவாக வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் 46 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டு, தற்சமயம் 19 கிராமகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேற்படி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து 1981.48 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1660/- ஆகவும், இதர ரகங்களுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1600/- ஆகவும், தமிழக அரசால் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2016-17ம் ஆண்டு நெல் மற்றும் உளுந்து பயிர்களுக்கு காப்பீடு செய்த 28,174 விவசாயிகளுக்கு ரூ.54.40 கோடி காப்பீடுட்டுத் தொகை இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் வட்டங்களில் உளுந்து பயிருக்கான காப்பீட்டுத் தொகை ஒரு சில கிராமங்களில் குறைவாக பெறப்பட்டுள்ளதாக வரப்பெற்ற புகாரினை ஆய்வு செய்த அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்ட உரிய இழப்பீட்டுத் தொகையினை பெற ஐஊஐஊஐ நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மக்காச்சோளம் மற்றும் பாசிப்பயிறுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை சுமார் ரூ.30 கோடி காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்று விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் (2017-2018) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 65,748 விவசாயிகள் 1,35,902 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் காப்பீடு செய்துள்ளனர். பருத்தி பயிருக்கு விவசாயிகள் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த கடைசி நாள் 28.07.2018 ஆகவும், கரும்பு பயிருக்கு காப்பீட்டு கட்டணம் செலுத்த கடைசி நாள் 31.10.2018 ஆகவும், அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களை பொறுத்தவரை 2017-18ம் ஆண்டு வாழை, வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்களுக்கு இதுவரை 266 விவசாயிகள் பயிர் காப்பீடு செலுத்தியுள்ளனர். தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையினை செலுத்த கடைசி நாள் 28.02.2018-ல் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அiவைரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை மரம் கணக்கெடுப்பு பணியினை வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வனத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். பிப்ரவரி-2018ம் தேதி புதன்கிழமை வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், வேளாண்மைத் துறை, வனத்துறை அலுவலர்கள் கொண்ட முத்தரப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை மனுக்களின் மீது அனைத்து துறை அலுவலர்களும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ் கோட்டாட்சித் தலைவர் (திருநெல்வேலி) மைதிலி, வோண்மைத் துறை இணை இயக்குநர் பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு.ராஜேந்திரன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அற்புதம் மற்றும் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: நேபாளத்தில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
18 Mar 2024காத்மண்டு : தங்கம் கடத்தல் விவகாரத்தில் நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.