எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பராமரிபோ : சுரிநாம் நாட்டு தற்போதைய அதிபர் தேசி பவுட்டர்சுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சிறிய நாடான சுரிநாம், 1975 ம் ஆண்டு நெதர்லாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இந்நாட்டின் தற்போதைய அதிபர் தேசி பவுட்டர்ஸ் (வயது 74). 1980ம் ஆண்டு சுரிநாம் நாட்டில் ராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது ஆட்சியை பிடித்த பவுட்டர்ஸ் தற்போது வரை சுரிநாம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். போதைப்பொருட்கள் வழக்கிலும் குற்றவாளி என நிருபிக்கப்பட்டுள்ள இவர் மீது கொலை வழக்குகளும் தொடரப்பட்டன.
1982 ம் ஆண்டு பவுட்டர்ஸ் ஆட்சியில் இருந்த போது அவரது எதிர்ப்பாளர்களான 15 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘டிசம்பர் கொலைகள்’ என அழைக்கப்படும் அந்த சம்பவத்தில் 13 பொது மக்கள் மற்றும் இரண்டு ராணுவ அதிகாரிகள் என 15 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு பவுட்டர்ஸ் மற்றும் 24 நபர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பவுட்டர்ஸ், கொலை நடந்த சமயத்தில் தான் வேறு இடத்தில் இருந்ததாகவும், தப்பிச்செல்ல முயன்ற காரணத்தால் அவர்கள் 15 பேரும் கொல்லப்பட்டார்கள் என தெரிவித்தார்.
விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த பின்னர், பவுட்டர்சுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பவுட்டர்ஸ் சுரிநாம் வந்த பிறகு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்க ராணுவத்தளபதி குறித்த கருத்துக்கு அதிபர் ட்ரம்ப் விளக்கம்
24 Feb 2026வாஷிங்டன், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொ
-
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை உள்பட அ.இ.அ.தி.மு.க.வின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் பழனிசாமி
24 Feb 2026சென்னை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் தொகுப்புடன் இனி ஆண்டுதோறும் ரூ.
-
குமரியில் ரூ.1.45 கோடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
24 Feb 2026நாகர்கோவில், கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை அருகே ரூ.1.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயிலை தமிழ்நாடு முதல்வர் மு
-
தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம் : 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்
24 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை: இன்று தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்
24 Feb 2026சென்னை, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் தேர்தல் ஆணைய குழுவினர் இன்று தமிழகம் வருகிறார்கள்.
-
வரும் 1-ம் தேதி வரை தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
24 Feb 2026சென்னை, தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்டு ரத்து: தமிழக கவர்னர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Feb 2026சென்னை, அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்டு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இளைஞர் காங். தலைவர் கைது: போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி ஐகோர்ட் அனுமதி
24 Feb 2026புதுடெல்லி, ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ஆடையை களைந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார்.
-
நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த ரஷ்யா-உக்ரைன் போா்
24 Feb 2026கீவ், ஐரோப்பிய கண்டத்தில் 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு மாபெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்திய ரஷ்யா-உக்ரைன் போா் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
-
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தென்னக ரயில்வே இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் : கனிமொழி எம்.பி. தகவல்
24 Feb 2026தென்னக ரயில்வே பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
-
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியுரிமையை பெற்று தர போராடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
24 Feb 2026சென்னை, இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்.
-
78-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை
24 Feb 2026சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு இ.பி.எஸ.் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் கல்வியில் புதிய உயரங்களை அடைவதில் நாம் பெருமிதம் கொள்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
24 Feb 2026சென்னை, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் கல்வியில் புதிய உயரங்களை அடைவதில் நாம் பெருமிதம் கொள்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
அணு ஆயுதக் குறைப்பு விவகாரம்: ஈரான்-அமெரிக்கா நாளை 3-ம் கட்ட பேச்சுவார்த்தை
24 Feb 2026ஜெனீவா, அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே ஜெனீவாவில் நாளை (பிப்.26ம் தேதி) 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
-
எனக்காக துப்பாக்கியுடன் பலர் காத்திருக்கிறார்கள்..! அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நகைச்சுவை
24 Feb 2026புளோரிடா, எனக்காகத் துப்பாக்கியுடன் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?
-
நாளை இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி: பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
24 Feb 2026ஒட்டவா, கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 26 முதல் மார்ச் 7 வரை இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
-
த.வெ.க. கூட்டத்தில் விதிமுறைகள் மீறல் வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம்
24 Feb 2026சென்னை, விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதிக்கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக த.வெ.க.


