முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கால் 22 கோடி மக்களை அடைத்து வைக்க முடியாது இம்ரான் கான் கருத்து

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

ஊரடங்கு மூலம் 22 கோடி மக்களை அடைத்து வைக்க முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 2,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸால் பஞ்சாப் மாகாணமும், சிந்து மாகாணமும் அதிகம் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவை விதிக்காமல், இம்ரான் கான் காலம் தாழ்த்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பத்திரிகையாளர்களுக்குப் பதிலளித்தார். அப்போது இம்ரான் கான் கூறுகையில்,

பாகிஸ்தான் பசிக்கும், கொரோனாவுக்கும் இடையே உள்ள சமநிலையைக் கண்டறிய வேண்டும். மேலும் 22 கோடி மக்களை அடைத்து வைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 190 நாடுகளில் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 11,17,860 பேர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 59,000-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸால் அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து