எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் இருதய செயலிழப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல்முறையாக Pediatric அறுவை சிகிச்சை முறையான Biventricular Berlin Heart Implantation அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த MGM Healthcare மருத்துவமனையின் மருத்துவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது,
உலகில் முன்னேறிய நாடுகளில் ஒன்றான ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவன் இருதய செயலிழப்பு பிரச்சினையினால் அவதிப்பட்டு வந்ததால், அச்சிறுவனுக்கு மிகவும் சிக்கலான Pediatric இருதய அறுவை சிகிச்சை முறையான Berlin Heart pump ventricular support சிகிச்சையை அளித்து தமிழ்நாட்டின் பெருமையை உலக சுகாதார வரைபடத்திற்கு கொண்டு சென்ற MGM Healthcare மருத்துவமனைக்கு முதலில் எனது மனமார்ந்த பாட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இருதய அறுவை சிகிச்சை தெற்கு ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய பகுதிகளில் முதன் முறையாக, MGM Healthcare மருத்துவமனையில் பணியாற்றும் இந்திய மருத்துவர்களால் செய்யப்பட்டது என்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். அறுவை சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுவன் நலமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
உயிரை பாடுபட்டு காப்பாற்றும் மருத்துவர்களை தெய்வத்திற்கு இணையாக மக்கள் போற்றுகின்றார்கள். உலகமே கொரோனா தொற்று நோயை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், உலகமே தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்கின்ற வகையில், இந்த அறுவை சிகிச்சையை அதுவும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு செய்து சாதனை படைத்த MGM Healthcare மருத்துவமனையையும், இதற்காக பணியாற்றிய மருத்துவர்களையும் நான் வெகுவாக பாராட்டுகின்றேன்.
தமிழ்நாடு, இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அனைவராலும் அழைக்கப்படுவதற்கு இந்த நிகழ்வு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். சமுதாயத்தில் அனைத்து கட்ட வளர்ச்சிக்கும் ஆரோக்கியம் மிக முக்கியமானதாகும். சமூகப் பொருளாதார பின்னணி எதுவாக இருந்தாலும் அதனை கருத்தில் கொள்ளாமல், மாநிலத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை தொடர்பான திறன்மிகு நடைமுறைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவை கிடைத்திட சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்பதே அம்மா அரசின் நோக்கமாகும்.
உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், மிகச் சிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருகிறது. இதன் காரணமாகத்தான், கொரோனா தொற்று நோய் பரவும்போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவாக உரிய சிகிச்சை வழங்கி, உயிரிழப்பு ஏற்படுவது பெரும்பாலும் தடுக்கப்பட்டது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
மக்களின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, கொரோனா நோய் தாக்கத்திலிருந்து மக்களை மீட்க எது சரியான பாதையோ அதை தேர்ந்தெடுத்து சரியான வழிமுறைகளை எந்தவிதமான அச்சமுமின்றி நேர்மையுடனும், உண்மையுடனும் இந்த அரசு எடுத்து வருகிறது. இந்நடவடிக்கைகளின் காரணமாக, தற்போது நோயினால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்து வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, இந்த நோயினுடைய பாதிப்பு தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.
மேலும், உலகிலேயே தமிழ்நாட்டில்தான் இந்த நோயினால் இறப்பவர்களின் சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து தரமான மருத்துவ சேவைகளை வழங்கி வருவதால், இன்றைக்கு வெளி மாநிலத்திலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் பெறுவதற்கு, அதிக எண்ணிக்கையில் மக்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.
இதன் காரணமாக, தமிழ்நாடு, இந்தியாவின் மருத்துவச் சுற்றுலாத் தலமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டு மருத்துவர்கள், MGM Healthcare மருத்துவமனை மருத்துவர்கள் நிகழ்த்தியதைப் போல மருத்துவ சிகிச்சை முறையில் பல புதிய சாதனைகளை படைத்து, தமிழர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை உலகிற்கு மீண்டும், மீண்டும் நிரூபிக்க வேண்டுமென்று அன்போடு மருத்துவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.
தற்போது உலகளாவிய சாதனையை நிகழ்த்தியிருக்கும் MGM Healthcare மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: அவசர அழைப்பை ஏற்று உடனே உதவ சென்றதாக இந்திய கடற்படை விளக்கம்
06 Mar 2026மும்பை, ஈரான் கப்பல் தாக்கப்பட்டதும் தங்களுக்கு விடுத்த அவசர அழைப்பை ஏற்று உடனே உதவ சென்றதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
-
பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசாணை வெளியீடு
06 Mar 2026சென்னை, பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்துவதற்கான தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
நாங்குநேரி இரட்டைக்கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
06 Mar 2026நெல்லை, நாங்குநேரி இரட்டைக்கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 6,520 ரூபாய் குறைந்தது
06 Mar 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்து விற்பனையானது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 6,520 குறைந்துள்ளது.
-
திருச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
06 Mar 2026திருச்சி, திருச்சி மாநாட்டில் வருங்கால திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வுடன் தேர்தல் கூட்டணி; நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை
06 Mar 2026சென்னை, த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் நிர்வாகிகளுடன் புதிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
-
பொள்ளாச்சி - பாலக்காடு இடையே புதிய ரயில் சேவைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்
06 Mar 2026திருவனந்தபுரம், பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடத்தில் புதிய ரயில் சேவைக்கான கேரளாவின் நீண்டகால கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் நிறைவேற்றியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் க
-
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
06 Mar 2026தென்காசி, திராவிட மாடல் 2.O ஆட்சியில் இன்னும் அதிக திட்டங்களை முதல்வர் செயல்படுத்துவார் என்றும், நீங்கள் தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் துணை முதல்வர் உதய
-
மேகதாது அணை திட்டத்தை தீவிரப்படுத்தும் கர்நாடக அரசு பட்ஜெட் உரையில் சித்தராமையா அறிவிப்பு
06 Mar 2026பெங்களூரு, மேகதாது அணை தொடர்பான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார்செய்யப்பட்டு, அதனுடன் வனத்துறை அனுமதிக்கான முன்மொழிவு ஆகியவையும் விரைவில் மத்திய அரசிட
-
அடுதத் 30 நாட்களுக்கு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி
06 Mar 2026நியூயார்க், ரஷ்யாவிடமிருந்து இந்தியா 30 நாட்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
-
9 மாவட்டங்களில் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்கம் திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர்
06 Mar 2026சென்னை, சென்னை மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை இயக்குநரகத்தில் காஞ்சிபுரம், வேலூர், கடலூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் செயல்படும் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்க
-
தென்காசியில் ரூ.44.05 கோடியில் புதிய அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
06 Mar 2026தென்காசி, தென்காசி மாவட்டத்தில் 7,127 பயனாளிகளுக்கு ரூ44.05 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் 172 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தி.மு.க.
06 Mar 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் 172 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. முடிவு செய்துள்ளது.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வ.க. சார்பில் மகளிர் தின விழா - விஜய் பங்கேற்பு
06 Mar 2026சென்னை, சென்னை மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெறும் மகளிர் தின விழாவில் விஜய் பங்கேற்கிறார்.
-
தனது சொந்த எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு வேறொரு நாட்டின் அனுமதி தேவையா? மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
06 Mar 2026சென்னை, தனது சொந்த எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு வேறொரு நாட்டின் அனுமதி தேவையா? என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஆந்திராவில் 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த விரைவில் தடை: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
06 Mar 2026அமராவதி, ஆந்திரப் பிரதேசத்தில், 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.
-
ட்ரம்பின் முன்னால் பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு தைரியமில்லை: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு
06 Mar 2026டெல்லி, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு முன்னால் பேசுவதற்கு மோடிக்கு தைரியமில்லை என்று ராகுல்காந்தி, கெஜ்ரிவால்
-
நியாய விலை கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்தது அரசு
06 Mar 2026சென்னை, நியாய விலை கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.
-
அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு பதவி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
06 Mar 2026சென்னை, அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு அ.தி.மு.க.வில் அமைப்பு செயலாளர் பதவியை வழங்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழ்நாடு '2030' செயல் திட்டத்தின் 14 அம்சங்கள் : கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Mar 2026சென்னை, வீட்டு வசதி முதல் ஜவுளித் துறை வரை தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான 14 திட்டங்களை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இவற்றையெல்லாம் நனவாக்கி 2030-ம் ஆண்டில்
-
பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. விநியோகத்தில் பாதிப்பா..? மத்திய அரசு வட்டாரங்கள் விளக்கம்
06 Mar 2026புதுடெல்லி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், எரிபொருள் போதுமான அளவு கிடைப்பதை உறுதிப்படுத்த உற்பத்தியை அதிகரிக்குமாறு அனை
-
மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 6 பேரின் மனுக்களும் ஏற்பு
06 Mar 2026சென்னை, மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க.


