முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் வீற்றிருப்பவர் எஸ்.பி.பி.க்கு மதுரை ஆதீனம் புகழாரம்

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் வீற்றிருப்பவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்று மதுரை ஆதீனம் புகழாரம் சூட்டியுள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

பக்தி பாடலாக இருந்தாலும், திரைப்பட பாடலாக இருந்தாலும், கர்நாடக சங்கீதமாக இருந்தாலும் அனைத்து மொழிகளிலும் கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழ் நெஞ்சங்களில் தமிழ் செவிகளில் எப்போதும் ரீங்காரமிட்டு கொண்டிருக்கிற குரல் எஸ்.பி.பி.யின் குரலாகும். இந்திய திருநாட்டில் புகழ்மிக்க இசை வல்லுனர்களில் சிறந்த ஒருவராக அவர் திகழ்ந்தார். பாடினார். இசை அமைத்தார். நடித்தார். படங்களை தயாரித்தார்.

பல்வேறு மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இசை விரும்பிகளின் உள்ளம் கவர் கள்வனாக திகழ்ந்தார். அவர் உடல் மறைந்தாலும் அவரது இசை ஒருபோதும் மறையாது. அவரை இழந்து தவிக்கின்ற அவரது குடும்பத்து உறுப்பினர்களுக்கும் கோடானு கோடி ரசிக பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். எஸ்.பி.பி.யின் ஆன்மா இறைவன் சன்னதியில் மகிழ்வோடும், நிம்மதியோடும் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து