முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி அரசின் முதல் மரியாதை விவசாயிகளுக்குத்தான் : அண்ணாமலை பெருமிதம்

திங்கட்கிழமை, 6 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பா.ஜ.க. தலைமையிலான மோடி அரசின் முதல் மரியாதை விவசாயிகளுக்குத்தான் என்று தருமபுரியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தருமபுரியில் பா.ஜ.க. மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தருமபுரிக்கு வருகை தந்தார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:

விவசாயிகள் தங்களின் அதீத உழைப்பால் தேய்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாகவே புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டங்களை எதிர்க்கின்ற தலைவர்கள் யாரும் விவசாயத்தில் நேரடியாக ஈடுபடுவதில்லை. இடைத்தரகர்களால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளைக் காப்பாற்றவே புதிய வேளாண் சட்டங்கள். இந்தச் சட்டம் எந்த விவசாயிக்கும் எதிரானது அல்ல. இதன் பயன்கள் குறித்து பா.ஜ.க. சார்பில் விரைவில் விவசாயிகளைச் சந்தித்து எடுத்துரைக்க உள்ளோம். பா.ஜ.க. தலைமையிலான மோடி அரசின் முதல் மரியாதை விவசாயிகளுக்குத்தான்.

தனியார் மயத்தைப் பலரும் எதிர்க்கின்றனர். 70 ஆண்டு கால வரலாற்றில் மத்திய அரசின் பல அலுவலகங்கள் அல்லது அலுவலகத்தின் ஒரு பகுதி அல்லது இயந்திரங்கள் பயன்பாடின்றிக் கிடக்கின்றன. இதைக் குத்தகை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் வழங்கி செயல்படச் செய்யவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம், அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். இந்தத் தொகை நாட்டின் ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டுக்கு, தரமான சாலை வசதிக்கு என, திட்டங்களை நிறைவேற்றவே பயன்படுத்தப்படும்.

உண்மை நிலை இப்படியிருக்க, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதாகத் தவறான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. எரிபொருள் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால், எவ்விதக் காரணமுமே இல்லாமல் எதிர்க்கட்சிகள் வரும் 20-ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, தமிழக விவசாயிகளின் வயிற்றில் கை வைக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். இதை பா.ஜ.க. அனுமதிக்காது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாகத் தமிழக அரசு வெளியிடும் அறிவிப்புகள் நமது சம்பிரதாயங்களை அழிக்கும். வாழ்க்கை முறையில் கை வைக்கும் வேலை. விழா நாளில் வீட்டின் முன்பு அனைவரும் விநாயகர் சிலை வைத்துக் கொண்டாடுவோம்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து