முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் ஒருநாள் கொரோனா தொற்று சற்று உயர்ந்தது

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 3,42,15,653 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 585 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 4,55,653 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 14,021 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,97,339 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் தற்போது கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,62,661 ஆக உள்ளது. சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை கடந்த 242 நாட்களில் இதுவே குறைவாகும். நாட்டில் இதுவரை மொத்தம் 103,53,25,577 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து