முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரியுபோல் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும்: உக்ரைன் அதிபர் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 5 மே 2022      உலகம்
Zelensky-2022-05-05

பொதுமக்கள் வெளியேறும் வகையில் மரியுபோல் நகரத்தின் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.  இந்த போரில் ரஷ்யா உக்ரைன் நகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.  இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மரியுபோலை ரஷ்யா கைப்பற்றியதாக அறிவித்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த உக்ரைன் தொடர்ந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.

 மரியுபோலில் உள்ள அஸ்வோஸ்தால் உருக்கு ஆலையில் உக்ரைன் பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறி வருகிறது. உக்ரேனிய படைகளும் அந்த ஆலைக்குள் பதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஷ்யா உருக்கு ஆலையை குறி வைத்து தனது தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இந்நிலையில் மரியுபோல் நகரத்தின் மீதான ரஷ்ய தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மரியுபோலில் உள்ள பொதுமக்களை வெளியேற்றும் பொருட்டு ரஷ்யா போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.  ஐ.நா.வும், செஞ்சிலுவை அமைப்பும் சேர்ந்து 100-க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களை மரியுபோலில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து