எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆதாரை இணைக்க வரும் பொதுமக்களை நிற்க வைக்காமல் அவர்களுக்கு உட்கார போதிய இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆதாரை பதிவு செய்ய...
தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ம் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
மீண்டும் அறிவிப்பு...
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மின் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கண்டிப்பாக ஆதாரை இணைக்க வேண்டும் என்று மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் ஒவ்வொருவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் 'வெப்சைட்டுக்குள்' சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள். மற்ற பொதுமக்கள் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின் வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.
சிறப்பு முகாம்கள்...
இதற்காக தமிழ்நாடு மின்வாரியம் மூலம் செயல்பட்டு வரும் 2,811 மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் நடந்த சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5 லட்சம் பேர்...
அப்போது அவர் கூறுகையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம். ஒருவருக்கு எத்தனை இணைப்பு இருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார். மொத்தம் உள்ள 2.33 கோடி வீடு மின் இணைப்புகளில், 1.15 கோடி மின் இணைப்புதாரர்களுக்கான தரவுகள் மட்டுமே மின் வாரியத்தில் உள்ளது. இதன் பிறகு இதுவரை 15 லட்சம் மின் இணைப்புதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்திருந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்திருக்கிறார்கள்.
அறிவுறுத்தல்கள்...
ஆனாலும் சில மையங்களில் 'சர்வர்' பிரச்சினை காரணமாக ஆதாரை இணைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் மக்கள் நீண்ட கியூவில் காத்திருந்து ஆதாரை இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதாரை இணைப்பது தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் என்னென்ன வசதிகள் செய்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். மேலும் இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து பிரிவு மண்டல பொறியாளர்கள், உதவி பொறியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது.,
- * ஆதாரை இணைக்க வரும் பொதுமக்களை நிற்க வைக்காமல் அவர்களுக்கு உட்கார போதிய இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும்.
- * ஆதார் புதுப்பிப்பு பணிக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- * தேவைப்பட்டால் சாமியானா பந்தல் அமைக்க வேண்டும்.
- * ஆதார் இணைப்பை விளக்குவதற்கும், அதை செய்து கொடுப்பதற்கும் தனியாக ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும்.
- * கம்ப்யூட்டரில் சர்வர் கோளாறு ஏற்பட்டாலோ மெதுவாக இயங்கினாலோ அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
- * தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கம்ப்யூட்டர் தயாராக வைத்திருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஆதார் இணைக்கும் பணி பாதிக்கப்படக்கூடாது.
- * தேசிய விடுமுறை மற்றும் விழா நாட்களை தவிர ஞாயிறு உட்பட ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு கவுண்டர்கள் செயல்பட வேண்டும். டீ பிரேக், மதிய உணவு இடைவேளையின்றி தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
- * மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு பொதுமக்களிடம் இருந்து எந்த தொகையும் வசூலிக்க கூடாது. லஞ்சம் கேட்கக் கூடாது. யாராவது பணம் வாங்கியதாக புகார் வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதை கவனிக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.
- * மின் வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்டர்களிலும் ஒவ்வொரு நாளும் ஆதாரை இணைக்கும் பணி முன்னேற்றத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
- * மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் அவசியம் குறித்த விவரங்களை ஒவ்வொரு அலுவலகத்திலும் பிளக்ஸ் பேனர் வைத்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கனடா நாட்டு பொருட்களுக்கு 35 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு
11 Jul 2025வாஷிங்டன் : ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது: டெல்லியை அச்சுறுத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
11 Jul 2025சென்னை, தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றில் தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை
-
கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பலமாக இருக்கும்: இ.பி.எஸ்.
11 Jul 2025விழுப்புரம் : கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் பலமாக இருக்கும் கட்சி அ.தி.மு.க. என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
பிரதமரின் வெளிநாட்டு பயணம்: பஞ்சாப் முதல்வர் விமர்சனம்
11 Jul 2025புதுடெல்லி : “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
-
தமிழ்நாட்டு பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி
11 Jul 2025சென்னை : வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவ
-
தங்கம் விலை ரூ.440 உயர்வு
11 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 11) பவுனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையானது.
-
ஆடு, மாடுகள் முன் சீமான்: அமைச்சர் சிவசங்கர் வருத்தம்
11 Jul 2025அரியலூர் : ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
-
அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்
11 Jul 2025சென்னை : மாவீரர் அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியா பயணம்
11 Jul 2025மாஸ்கோ : ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
-
எடப்பாடி பழனிசாமி தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்: அமைச்சர் சேகர்பாபு
11 Jul 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகங்கள் வரும் 15-ம் தேதி திறப்பு
11 Jul 2025சென்னை, தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘ஹைடெக்’ ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்
-
ஜி-மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்
11 Jul 2025வாஷிங்டன் : ஜி மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
-
குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்: முதல்வர் புகழாரம்
11 Jul 2025சென்னை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
11 Jul 2025சென்னை : கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
-
ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு 2,300 பேர் உயிரிழப்பு
11 Jul 2025பாரீஸ் : ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு இதுவரை 2,300 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jul 2025சென்னை : தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சுபான்ஷு சுக்லா 14-ம் தேதி பூமி திரும்புகிறார் - நாசா அறிவிப்பு
11 Jul 2025புதுடெல்லி : சுபான்ஷு சுக்லா வருகிற 14-ந்தேதி பூமி திரும்புகிறார் என்று நாசா அறிவித்துள்ளது.
-
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்
11 Jul 2025புதுடெல்லி : வர்த்தக ஒப்பந்த பேசசுவார்த்தைககு அமெரிக்காவுககு இந்திய குழுவினர் பயணம் செய்ய உள்ளனர்.
-
வழக்கின் சாட்சிகளை அழிக்க முயற்சி: தென்கொரியா முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு
11 Jul 2025சியோல் : தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
-
பாக்.கில் கிளர்ச்சியாளர்களால் பயணிகள் 9 பேர் சுட்டுக்கொலை
11 Jul 2025கராச்சி : பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றனர்.
-
வரும் 27,28-ம தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
11 Jul 2025சென்னை, வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
-
பீகார் தேர்தலை 'திருட' பா.ஜ.க. முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
11 Jul 2025புவனேஸ்வர் : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பீகார் தேர்தலையும் திருட பா.ஜ.க. முயல்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: பொதுசுகாதாரத்துறை
11 Jul 2025சென்னை : தமிழகத்தில் 'நிபா' வைரஸ் இல்லை. மக்கள் பீதி அடைய தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
கடமை தவறுவது போல் தெரிகிறது: அ.தி.மு.க. தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி
11 Jul 2025சென்னை, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடமை தவறுவது போல் தெரிவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
குரூப்-4 வினாத்தாள் கசிவா? - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மறுப்பு
11 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் விளக்கமளித்துள்ளார்.