எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இது உலகின் நான்கு சிறந்த வீரர்கள் பங்கேற்கும் ஒரு குறுகிய விரைவு சதுரங்கப் போட்டியாகும். இதில் இந்தியாவை சேர்ந்த குகேஷ், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், ஹிகாரு நகமுரா மற்றும் ஃபேபியானோ கருவானா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவை சேர்ந்த குகேஷ் முதல் போட்டியில் கார்ல்சனுடன் தோல்வியடைந்து மோசமான தொடக்கத்தை கொடுத்தார். இதனையடுத்து நகமுரா மற்றும் கருவானாவுக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளுடன் அவர் வலுவாக மீண்டு வந்தார்.
குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு குகேஷ்-க்கு எதிராக வெற்றி பெற்ற பிறகு அவரது ராஜா காயை எடுத்து ரசிகர்கள் திசையில் நகமுரா தூக்கி எறிந்தார். இதை பார்த்த குகேஷ், சிரிப்புடன் அதனை கடந்து சென்றார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது நகமுராவுக்கு எதிராக குகேஷ் வெற்றி பெற்ற பிறகு கைகுலுக்கி அமைதியுடன் வெற்றியை கொண்டாடினார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்போட்டியில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு, ரூ.1.05 கோடி பரிசு கிடைக்கும். 2ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, ரூ.78 லட்சமும், 3ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, ரூ.62 லட்சமும் பரிசாக கிடைக்கும்.
_________________________________________________________________________________________________________________
இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம்
23 வயதுக்குட்பட்டோருக்கான 2025 ஆம் ஆண்டு அண்டர் 23 உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப் செர்பியாவின் நோவி சாட் நகரில் அக்டோபர் 20 முதல் 27 வரை நடைபெற்றது. இந்த போட்டி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறும். இதில் ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் இந்திய தரப்பில் சுஜீத் கல்கல் பங்கேற்றார். இவர் கால் இறுதியில் இருமுறை U23 உலக சாம்பியனான பஷீர் மகோமெடோவை 4-2 என்ற கணக்கில் வென்றார். அரையிறுதியில் ஜப்பானின் யூடோ நிஷியூச்சியை 3-2 என்ற கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் உமிட்ஜான் ஜலோலோவுடன் சுஜீத் மோதினார். இந்த ஆட்டத்தில் 10-0 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சுஜீத் தங்கம் பதக்கம் வென்றார். இந்த வெற்றியானது 2025 ஆம் ஆண்டில் மல்யுத்தத்தில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கமாகும். இந்தியா இந்த தொடரில் மொத்தம் 9 பதக்கங்களை வென்று 7-வது இடத்தில் உள்ளது. இதில் சுஜீத் வென்றது மட்டுமே தங்கப் பதக்கமாகும். 2 வெள்ளி 6 வெண்கல பதக்கம் ஆகும். சுஜீத் கல்கல் U23 உலக சாம்பியன்ஷிப் தங்கம் வென்ற 4-வது இந்திய மல்யுத்த வீரராவார்.
_________________________________________________________________________________________________________________
அதிரடியாக விளையாடுவோம்: மார்ஷ்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காதென அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த இரண்டு டி20 உலகக் கோப்பைத் தொடர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு சவால் மிகுந்த அணியாக நாங்கள் இருக்க வேண்டும். பேட்டிங்கில் நாங்கள் மிகவும் அதிரடியாக விளையாடி வருகிறோம். அதிரடியாக விளையாடுவதுதான் டி20 வடிவிலான கிரிக்கெட்டின் இயல்பு என நினைக்கிறேன்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியாகவே விளையாடவுள்ளோம். எல்லா முறையும் போட்டிகளின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்காது. நாங்கள் தோல்விகளை சந்திக்க நேரிடும். ஆனால், நாங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதிரடியாக விளையாடுவது எங்களுக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். இந்திய அணி மிகவும் அற்புதமான அணி. இந்திய அணி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் என நினைக்கிறேன். இரண்டு சிறந்த அணிகள் மோதிக்கொள்வதால், இந்த சவாலை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருக்கிறேன் என்றார்.
_________________________________________________________________________________________________________________
முன்னிலை பெற்ற தமிழகம்
91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் பெங்களூவில் நடைபெற்று வரும் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) தமிழ்நாடு- நாகாலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்து முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 512 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இரட்டை சதம் அடித்த பிரதோஷ் ரஞ்சன் பால் 201 ரன்களுடனும், இந்திரஜித் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆந்த்ரே சித்தார்த் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நாகாலாந்து அணி நேற்றைய 3ம் நாள் முடிவில் 127 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 365 ரன்கள் குவித்திருந்தது. நாகாலாந்து தரப்பில் தேகா நிஸ்சல் 161 ரன்னுடனும், இம்லிவதி லெம்தூர் 115 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தமிழக அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட்டும், சந்திரசேகர் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர். இந்நிலையில்,147 ரன்கள் பின்தங்கிய நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை நாகாலாந்து நேற்று தொடங்கியது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நாகாலாந்து தனது முதல் இன்னிங்சில் 446 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நாகாலாந்து தரப்பில் தேகா நிஸ்சல் 175 ரன்கள் எடுத்தார். தமிழகம் தரப்பில் குர்ஜப்நீத் சிங் 4 விக்கெட்டும், சந்திர சேகர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் தமிழக அணி முதல் இன்னிங்சில் 66 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தொடர்ந்து தமிழக அணி தனது 2வது இன்னிங்சை ஆட உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,000 சரிவு
28 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி பயணம்
28 Oct 2025சென்னை : அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல்கிறார். பின்னர் நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக்கொள்கிறார்.
-
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் விஜய்யை நேரில் சந்தித்த பின் தகவல்
28 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர்.
-
நீடாமங்கலத்தில் மத்தியக் குழு ஆய்வு: நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை
28 Oct 2025நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் நேற்று (அக்.
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
6 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி
28 Oct 2025தருமபுரி : காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்துள்ளதால், 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பய
-
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு
28 Oct 2025சென்னை : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
ஓரணியில் நின்று வாக்குரிமை பறிப்பை நாம் தடுப்போம் : துணை முதல்வர் உதயநிதி பதிவு
28 Oct 2025சென்னை : வரும் 2026 தேர்தலில் 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம் என தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஓரணியில் நின்று அநியாய வாக்
-
களப்பணியில் வெல்ல வேண்டிய தருணம் இது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Oct 2025சென்னை : களப்பணியில் தி.மு.க. தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: தமிழக அரசுக்கு விஜய் கேள்வி
28 Oct 2025சென்னை : உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள த.வெ.க.
-
தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
28 Oct 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
இரு மாநிலங்களில் வாக்காளர் அட்டை: பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ்
28 Oct 2025பாட்னா : இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் விவகாரத்தில் பிரசாந்த் கிஷோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
28 Oct 2025சென்னை : தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ என்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
-
திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
28 Oct 2025சென்னை : திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
-
சென்னையில் இன்று முதல் மழை குறையும்
28 Oct 2025சென்னை : சென்னையில் இன்று முதல் மழை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
6.1 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்
28 Oct 2025அங்காரா : துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
28 Oct 2025புதுடெல்லி : தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு: தமிழ்நாடு அரசு தகவல்
28 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை எதிரொலி காரணமாக 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
முன்னாள் நீதிபதி தலைமையில் 8-வது ஊதியக்குழு அமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
28 Oct 2025புதுதில்லி : சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவது மற்றும் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி த
-
விவசாயம் மற்றும் தொழில்துறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் : துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
28 Oct 2025கோவை : விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.
-
உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானங்களை தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
28 Oct 2025மாஸ்கோ : இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
குகேஷ் தரமான பதிலடி
28 Oct 2025அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
-
பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை: ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து சூர்யகுமார் தகவல்
28 Oct 2025சிட்னி : ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் தற்போது உடல் நிலை சீராக உள்ளதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்


