எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நேற்று வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விதி 110-ன் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
1924-25 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த வைக்கம் போராட்டம் என்பது, இந்தியாவின் சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம்.
1924 -ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் நாள், கேரளத் தலைவர் டி.கே.மாதவனால் தொடங்கப்பட்டது. தந்தை பெரியார், வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு 74 நாட்கள் சிறையில் இருந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23-ம் நாள் முடிவுக்கு வந்தது.
1925 நவம்பர் 29-ம் நாள் பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது. இந்த வெற்றி விழாவுக்கு, தந்தை பெரியாரும், நாகம்மையாரும் அழைக்கப்பட்டார்கள். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது வரை வைக்கம் போராட்டம் என்பது சமூகநீதி வரலாற்றில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எளிய மக்களுக்காக எல்லைகளைக் கடந்து போராடி, வரலாற்றில் இத்தகைய புரட்சிகளை நிகழ்த்தி வெற்றி கண்ட தந்தை பெரியாரின் நினைவைப் போற்றவும், சமூகநீதிக் கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்தவும், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.
வைக்கம் போராட்டம் தொடங்கிய மார்ச் 30-ம் நாளில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள், 2023-ம் ஆண்டு, மார்ச் 30-ம் நாள் தொடங்கி, ஓராண்டு முழுவதும் நடத்தப்படும். போராட்டத்தின் வரலாற்றையும், நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்களும் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்படும்.
வரும் ஏப்ரல் 1, 2023 அன்று, கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், கேரள முதல்வர் பினராய் விஜயனோடு நானும் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறேன். வைக்கம் போராட்டம் நடைபெற்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம்” என்ற தமிழ் நூலின் மலையாள மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது. இந்த நூலின் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலப் பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு நவம்பர் 29 அன்று, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கக்கூடிய வகையில், வெகு சிறப்பான நிகழ்ச்சி ஒன்று தமிழ்நாடு அரசால் நடத்தப்படும்.
எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய பெரியார் அவர்களை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வைக்கம் விருது சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.
கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் 8 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த அருவிக்குட்டி கிராமத்தில் பெரியார் நினைவிடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கக் கூடிய வகையில், 64 பக்க நூல் ஒன்று கொண்டு வரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்டு, விற்பனை செய்யப்படும். இந்த நூல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும். இவை அனைத்தும் வரும் ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
சபாகர் துறைமுக திட்டத்துக்கு இந்தியா நிதியை ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றம்: ஈரான் அமைச்சர் அப்பாஸ்
26 Feb 2026தெஹ்ரான், சபாகர் துறைமுக திட்டத்துக்கு இந்தியா, இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
-
8-ம் வகுப்பு புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆா்.டி.
26 Feb 2026புதுடெல்லி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆா்.டி.) 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'நீதித் துறையில் ஊழல்' என்
-
72 குண்டுகள் முழங்க இ. கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அரசு சார்பில் மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீர வணக்கம்
26 Feb 2026சென்னை, மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 215.79 கோடியில் 65 முடிவுற்ற பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Feb 2026சென்னை, ரூ.215.79 கோடியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அ.தி.மு.க.வில் கிடைக்கும் மரியாதை வேறு எந்தக் கட்சியிலும் கிடைக்காது முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு
26 Feb 2026கோவை, அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்குச் சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வருவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
-
நல்லகண்ணுக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசிடம் பரிந்துரைப்பேன்: மத்திய அமைச்சர் எல். முருகன் தகவல்
26 Feb 2026சென்னை, நல்லகண்ணுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க மத்திய அரசிடம் பரிந்துரைப்பேன் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
-
கட்சி 'ரோடு ஷோ' விதிகளுக்கு எதிராக வழக்கு: த.வெ.க.வுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
26 Feb 2026சென்னை, கட்சி ரோடு ஷோக்களுக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி த.வெ.க.
-
இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்: முதல் உலகத்தலைவராக பிரதமர் மோடி சாதனை..!
26 Feb 2026புதுடெல்லி, இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.
-
நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு: சென்னையில் 3 நாட்கள் முகாமிடும் இ.டி. தலைமை இயக்குநர் ராகுல்..!
26 Feb 2026சென்னை, சென்னைக்கு அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் ராகுல் நவீன் வருகை தந்துள்ளார்.
-
விரைவல் 2,700 உதவி பேராசிரியர்கள் தேர்வு: 9646 கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் உயர்வு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
26 Feb 2026சென்னை, 2700 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 9646 பேருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் கோ
-
உதய்ப்பூரில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் கோலாகலம்.!
26 Feb 2026உதய்ப்பூர், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் நேற்று காலை திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
-
திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி: பிப்.28-க்குள் கூட்டணி தொடர்பாக அறிவிப்பு: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தகவல்
26 Feb 2026சென்னை, திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி என்றும் பிப்.28-க்குள் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்
26 Feb 2026காங்டாக், சிக்கிம் மாநிலத்தில், அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
-
பிரதமர் நரேந்திர மோடியை இந்திய உடையில் வரவேற்ற நெதன்யாகு
26 Feb 2026டெல் அவிவ், இந்திய பாரம்பரிய உடையணிந்து மோடியை வரவேற்று அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
-
தங்கத்தின் விலை சற்று சரிவு
26 Feb 2026சென்னை, கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2,000 உயா்ந்த நிலையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 360-க்கு விற்பனையானது.
-
ரயில் பயணங்களின்போது செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் இனி அபராதம்: இந்திய ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
26 Feb 2026சென்னை, ரயில் பயணங்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
கற்பனை உலகில் வாழும் பாகிஸ்தான்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு
26 Feb 2026ஜெனீவா, ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
-
ரஷ்ய பெண்களுடன் உறவு: உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பில்கேட்ஸ்
26 Feb 2026வாஷிங்டன், ரஷ்ய பெண்களுடன் தனக்கு இரண்டு உறவுகள் இருந்ததாக ஒப்புக் கொண்ட பில் கேட்ஸ், அந்த உறவுகள் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையது இல்லை என்றும் தெரிவித
-
இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி
26 Feb 2026டெல் அவீவ், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாட்டின் உயரிய விருதைப் பெற்ற ஒரே தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
26 Feb 2026- திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் ஆண்டாள் சன்னதியில் மால ைமாற்றுதல், தங்க தோலுக்கினியானில் பவனி.
- பெருவயல் முருகப்பெருமான் சண்முக உற்சவம்.
- மதுரை கூடலழகர் காலை ஏணிக்
-
இன்றைய நாள் எப்படி?
26 Feb 2026


