எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தன. வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது.
புதிய நிதி ஆண்டான ஏப்ரல் 1-ம் தேதியையொட்டி நேற்று முதல் பல்வேறு புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (எஸ்.சி.எஸ்.எஸ்.) முதியவர்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கு முன்பு அதிகபட்ச வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. அது நேற்று முதல் ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
தபால் அலுவலகத்தில் நேற்று முதல் ரூ.1000 செலுத்தினால் ரூ.67,750 பெறக்கூடிய திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான வட்டி 7.1 சதவீதம் ஆகும். இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும். பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால் நேற்று முதல் பான் கார்டு முடக்கப்படும். மேலும் அவர்களுக்கு வரி பிடித்தமானது (டி.டி.எஸ்.) அதிகபட்ச அளவான 20 சதவீதமாக நிர்ணயிக்கப்படும்.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை கடந்த 313 நாட்களாக உயராமல் உள்ளது. அடுத்த நிதி ஆண் டு நேற்று தொடங்கி உள்ள நிலையில் புதிய நிதி ஆண்டில் எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளது. அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை நேற்று முதல் 12.12 சதவீதம் உயருகிறது. வலி நிவாரணிகள், தொற்று நோய் தடுப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரிக்கிறது.
அரிய நோய்களுக்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ தேவைகளுக்கான உணவுகளுக்கு இறக்குமதி வரி விலக்கு நேற்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் அரிய மருந்துகளின் விலை குறைகிறது. மத்திய அரசு ஊழியராக இருப்பவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யலாமா? பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்க வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை அவகாசம் உள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.217 சம்பளம் வழங்கப்படுகிறது. இது ரூ.229 ஆக உயருகிறது. வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வருகிறது. ஆண்டு சம்பளம் ரூ.7 லட்சத்துக்கு மேல் பெறுபவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கிறது.
ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான சம்பளத்துக்கு 5 சதவீதம் வரி, ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரைக்கும் 10 சதவீதம் வரி, ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரைக்கும் 15 சதவீதம் வரி. ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரைக்கும் 20 சதவீதம் வரி, ரூ.15 லட்சத்துக்கும் மேல் உள்ள வர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது. ஸ்டேட் வங்கி புதிய வட்டி 7.90 சதவீதம் முதல் தொடங்குகிறது. எச்.டி.எப்.சி. வங்கி வட்டி 8.30 சதவீதம் முதல் தொடங்குகிறது. மற்ற வங்கிகளும் வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளன. மாசு இல்லாத பி.எஸ்.-6 தொழில்நுட்பம் கொண்ட வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதால் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் விலை உயரும்.
நிறுவனங்கள் நேற்று முதல் தங்கள் நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளை நிர்வகிக்க பயன்படுத்தும் மென்பொருளில் ஆடிட் டிரையல் எனப்படும் தணிக்கை சோதனை வசதியை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். அரசு சாரா ஊழியர்கள் ஓய்வு பெறும்போது விருப்ப பணப்பட்டுவாடா மீதான வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயருகிறது. ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தின் மூலம் கிடைக்கும் இரண்டு பிரீமியமான ரூ.5 லட்சத்துக்கு வரி விதிக்கப்படும். மேற்கண்ட நடைமுறைகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.