எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						Source: provided
மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னவிஸ் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று முறைப்படி அவர் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியில், “மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டிசம்பர் 2 அல்லது 3 ஆம் தேதிகளில் நடைபெறும் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.” என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறையைப் போன்றே 2 துணை முதல்வர்கள் நியமனம் இருக்கும் என்றும், ஒருவர் சிவ சேனா கட்சியையும், மற்றொருவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் சார்ந்தவராக இருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர் தனது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவை துணை முதல்வராக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஏக்நாத் ஷிண்டே, "முதல்வர் பதவி தொடர்பாக பாஜக தலைமை எடுக்கும் முடிவை நானும் சிவ சேனாவும் ஏற்போம் என்றும், எங்கள் முழு ஆதரவும் இருக்கும் என்றும் நான் ஏற்கனவே கூறியுள்ளேன். (முதல்வர் பதவி தவிர்த்த) மற்ற விவகாரங்கள் தொடர்பாக பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஒரு சந்திப்பு நடந்தது, இப்போது நாங்கள் மூன்று கூட்டணி கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து அரசாங்கத்தை அமைப்பது குறித்து விவாதிப்போம்," என்று கூறினார்.
ஏக்நாத் ஷிண்டேவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் தனது சொந்த கிராமத்துக்குச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில் அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஷிண்டே, “இப்போது என் உடல்நிலை நன்றாக உள்ளது. எங்கள் அரசின் பணிகள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.
சிவ சேனாவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவராக அஜித் பவாரும் அந்தந்த கட்சிகளின் எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் தொடர்பான தகவல் இதுவரை வரவில்லை என்று பாஜக எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர். எனினும், இன்று அதற்கான கூட்டம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பதவியேற்பு விழா வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. பதவியேற்பு விழா மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் மட்டும் டிசம்பர் 5-ம் தேதி பதவியேற்பார்களா அல்லது அமைச்சர்களும் பதவியேற்பார்களா என்பதை கூட்டணிக் கட்சிகள் கூட்டாக முடிவு செய்யும் என்று ஒரு மூத்த மகாயுதி தலைவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 இடங்களை மகாயுதி கைப்பற்றியது. பாஜக 132 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 2 months ago | 
-   
          வாக்குகளுக்காக பீகாரை சுரண்டுகிறார்கள்: தே.ஜ.க. கூட்டணி மீது தேஜஸ்வி தாக்கு30 Oct 2025பாட்னா, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொழில்களை எல்லாம் குஜராத்தில் அமைத்துவிட்டு, பீகார் மாநிலத்தை வாக்குகளுக்காக சுரண்டி வருகிறது என ஆர்.ஜே.டி. 
-   
          தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்30 Oct 2025ராமநாதபுரம், வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியா 
-   
          பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது கேரள அரசு30 Oct 2025திருவனந்தபுரம், பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு செய்துள்ளது. 
-   
          கேரளாவில் திருமண விழாவில் ருசிகரம்: ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூல்30 Oct 2025எர்ணாகுளம், கேரளாவில் நடந்த திருமண விழாவில் ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூலிக்கப்பட்டது. 
-   
          ஐ.பி.எல். கொல்கத்தா அணியின் புதிய பயிற்சியாளரானார் அபிஷேக்30 Oct 2025கொல்கத்தா, ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 
-   
          ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து30 Oct 2025புதுடெல்லி, ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 
-   
          சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் அபராதம்30 Oct 2025சென்னை, சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் இனி ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது. 
-   
          சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 150 சிக்சர் அடித்த 2வது வீரர்: சூர்யகுமார் புதிய மைல் கல்30 Oct 2025கான்பெர்ரா, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இந்த மைகல்லை (150 சிக்சர்கள்) எட்டிய 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். 
-   
          தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர்: சீமானுக்கு வைகோ திடீர் புகழாரம்30 Oct 2025ராமநாதபுரம், தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான் என்று வைகோ தெரிவித்துள்ளார். 
-   
          டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை: உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை: இந்தியா - தெ.ஆப்பிரிக்க போட்டியில் அறிமுகம்30 Oct 2025மும்பை, டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை நடைமுறைக்கு வருகிறது. 
-   
          வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: த.வெ.க எதிர்ப்பு30 Oct 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் - த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கூறினார். 
-   
          தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி30 Oct 2025சென்னை, தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி வழங்கி பாராட்டினார். 
-   
          பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் சந்திப்பு30 Oct 2025சென்னை, பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். 
-   
          சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் யாதவ் நியமனம்30 Oct 2025புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
-   
          சீனா மீதான இறக்குமதி வரி 10 சதவீதம் குறைத்த ட்ரம்ப்: ஜி ஜின்பிங் : உடனான சந்திப்புக்குப் பின் அறிவிப்பு30 Oct 2025புசான், தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்கு 
-   
          17 வயது இளம் ஆஸி. வீரர் மரணம்30 Oct 2025ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளம் வீரர் பென் ஆஸ்டின் பேட்டிங் பயிற்சியின்போது கழுத்தில் பந்துதாக்கி மரணம் அடைந்துள்ளார். 
-   
          தமிழ் வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநர்களாக 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்30 Oct 2025சென்னை, தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்களுக்கான பணி நியமன ஆணையத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். 
-   
          தெலுங்கானா அமைச்சராகிறார் அசாரூதின்30 Oct 2025ஐதராபாத், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன், தெலங்கானா மாநில அமைச்சரவையில் இடம்பெற உள்ளார். 
-   
          நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்30 Oct 2025சென்னை, நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்த 
-   
          அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சி தொடரும்: ஓ.பி.எஸ்.30 Oct 2025ராமநாதபுரம், அ.தி.மு.க.வை இணைந்திருப்பதாக முயற்சி தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
-   
          தேவரின் அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி30 Oct 2025புதுடெல்லி, சமூக, அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய வர் பசுமபொன் முத்துராமலிங்கத் தேவர் என்றும் அவரது அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது 
-   
          பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஒன்றாக வழிபாடு30 Oct 2025சென்னை, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சந்தித்து வழிபாடு செய்தனர். 
-   
          கோவில் சொத்துகளை இணையதளத்தில் வெளியிடுவதில் என்ன சிக்கல் உள்ளது..? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி30 Oct 2025சென்னை, கோவில் சொத்துகளின் விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை தயங்குவது ஏன்? 
-   
          தமிழகத்தில் புலம் பெயர்ந்து வந்த வெளிமாநிலத்தவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது: அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்30 Oct 2025புதுக்கோட்டை, தமிழகத்தில் புலம் பெயர்ந்து வந்த வெளிமாநிலத்தவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார். 
-   
          நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வாளர் தகவல்30 Oct 2025சென்னை, நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 























































