எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தாம்பரம், தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் தாலுகா அரசு மருத்துவமனையை செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி 2021-ம் ஆண்டு அனுமதி வழங்கியதோடு, ரூபாய் 110 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது.
மேலும் தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் தேசிய சித்த மருத்துவமனை வளாகம் அருகே உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு நிலம் சுத்தம் செய்யப்பட்டு மருத்துவமனை கட்டிடப் பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
6 தளங்கள் கொண்ட 400 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வந்த இந்த மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்த வைக்கும் நிகழ்ச்சி நேற்று (ஆக.9) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூபாய் 115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம், ரூ.7.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை - புறநகர் பிரிவு, ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டிடம் மற்றும் 3 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எம்.பி, டி.ஆர்.பாலு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு ஆட்சியர் தி. சினேகா மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
புதிய மாவட்ட மருத்துவமனை 6 மாடி கொண்டது. இக்கட்டிடத்தில், 4 அறுவை சிகிச்சை அரங்கம், 3 அவசர அறுவை சிகிச்சை அரங்கம், 111 தீவிர சிகிச்சை படுக்கை, 289 படுக்கை கொண்ட பொதுப் பிரிவு என, 400 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் தரைத்தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே, சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன், மருந்தகம், புற நோயாளி பிரிவு. முதல் தளத்தில் அவசர அறுவை சிகிச்சை அரங்கம், நம்பிக்கை மையம், குடும்ப நலப் பிரிவு, கர்ப்பிணிகளுக்கான புறநோயாளிகள் பிரிவு, கால் போஸ் கோபி உள்ளிட்டவையும். 2வது தளத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ அறை, மகப்பேறு உயர் தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு அறுவை அரங்கம், பிரசவ முன் கவனிப்பு அறை, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு.
3-வது தளத்தில் பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, நீரிழிவு பிரிவு, ரத்த வங்கி, பிரசவ பின் கவனிப்பு பிரிவு, குடும்ப நல அறுவை சிகிச்சை பிரிவு. 4வது தளத்தில் ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு, பெண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு, தீக்காயப்பிரிவு ஆய்வகம்.
5வது தளத்தில் அவசர அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு, உயர் சார்பு அலகு பிரிவு, பொது சிகிச்சை பிரிவு. 6வது தளத்தில் குழந்தைகள் பொது பிரிவு, ஆண்கள் பொது பிரிவு, பெண்கள் பொது பிரிவு என மொத்தம் ஆறு தளத்தில் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பாக தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக திறக்கப்படும் இந்த மருத்துவமனையால் தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதி மக்கள் பயனடையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் விபத்துகளில் சிக்குபவர்கள் மேல் சிகிச்சைக்கு சென்னைக்கு கொண்டு செல்லும் வழியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் தற்போது அதிநவீன கருவிகளுடன் அனைத்து சிகிச்சைகளும் புதிய மருத்துவமனையில் வழங்கப்பட உள்ளதால் விபத்து உயிரிழப்புகள் பெருமளவு குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
டெல்லியில் கனமழை: சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலி
09 Aug 2025புதுடெல்லி, டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
-
அன்புமணி பொதுக்குழு சொல்வதற்கு ஒன்றுமில்லை: ராமதாஸ் பதில்
09 Aug 2025விழுப்புரம், அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த கேள்விக்கு சொல்வதற்கு ஏதுமில்லை என ராமதாஸ் பதில் அளித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-08-2025.
09 Aug 2025 -
இந்திய அஞ்சலக வங்கியில் செல்போன் செயலி அறிமுகம்
09 Aug 2025சென்னை, இந்திய அஞ்சலக வங்கியில் செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
-
ஆசிய கோப்பை தொடர் : இந்தியா-பாக்., போட்டி ரத்து? - யு.ஏ.இ. கிரிக்கெட் வாரியம் பதில்
09 Aug 2025துபாய் : இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய தலைமை இயக்க அதிகாரி கூறியுள்ளார்.
-
திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார்: எடப்பாடி பழனிசாமி காட்டம்
09 Aug 2025ஓமலூர், ''தமிழக மக்கள் கடவுளாக மதிக்கும் எம்.ஜி.ஆரை விமர்சித்தால், அரசியலில் இருந்து திருமாவளவன் காணாமல் போய்விடுவார்,'' என்று அ.தி.மு.க.
-
சாத்தூர்: பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் பலி; ஒருவர் படுகாயம்
09 Aug 2025சாத்தூர், சாத்தூரில் பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாம் அடைந்தார்.
-
இந்தியா-பாக். போரை நிறுத்தியது நான்தான்: அதிபர் டிரம்ப் மீண்டும் பரபரப்பு பேச்சு
09 Aug 2025நியூயார்க், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
-
தலைவராக அன்புமணியே தொடர்வார்: பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம்
09 Aug 2025செங்கல்பட்டு, 2026 ஆகஸ்டு வரை பா.ம.க. தலைவராக அன்புமணி நீடிப்பார் என பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.
-
672.52 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்கள்: அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 20,021 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
09 Aug 2025பல்லாவரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 20 ஆயிரத்து 21 பேருக்கு ரூ.672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக
-
சுமார் ரூ.1,650 கோடி செலவில் பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானம் : முதல்வா் சித்தராமையா ஆலோசனை
09 Aug 2025பெங்களூரு, : கர்நாடகத்தில் அமைக்கப்படும் புதிய கிரிக்கெட் திடல் குறித்து முதல்வா் சித்தராமையா கலந்தாலோசித்துள்ளார்.
-
பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
09 Aug 2025சென்னை, விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Aug 2025சென்னை, தங்கம் விலை சற்று குறைந்து நேற்று விற்பனையானது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.
-
குஜராத்: விபத்தில் 4 பேர் பலி
09 Aug 2025காந்திநகர், குஜராத் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் தீயில் கருகி பலி
-
தற்போதைய சூழலுக்கு ஏற்ப கல்விக் கொள்கை வடிவமைப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
09 Aug 2025சென்னை, தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப இந்த கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: களமிறங்குகிறார் விராட்கோலி?
09 Aug 2025மும்பை : இந்திய அணி வீரர் விராட் கோலி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் பெண்களுக்கு பட்டுப்புடவையுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்படும் : அருப்புக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
09 Aug 2025அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சிவன் கோவில் சந்திப்பு பகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி உரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆற்றின
-
தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜா நியமனம்
09 Aug 2025சென்னை, தி.மு.க. இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
09 Aug 2025சென்னை : தமிழகத்தில் இன்று (ஆக.10) முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்ளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களை மீட்க வலுவான, ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
09 Aug 2025சென்னை, இலங்கைக் கடற்படையால் மீண்டும் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களை மீட்க வலுவான, ஒருங்கிணைந்த
-
இமாசலபிரதேசத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 6 பேர் பலி
09 Aug 2025சிம்லா, இமாசலபிரதேசத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
334 அரசியல் கட்சிகள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
09 Aug 2025புதுடெல்லி, அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
09 Aug 2025தாம்பரம், தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
முதன்முதலில் நிலவை சுற்றி வந்த விண்வெளி வீரர் ஜிம் காலமானார்
09 Aug 2025நியூயார்க், நிலவை முதன் முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்.
-
அஜித்குமார் வழக்கில் திருப்பம்: பொய் புகார் கொடுத்தாரா நிகிதா?
09 Aug 2025சிவகங்கை, அஜித்குமார் வழக்கில் பொய் புகார் கொடுத்தாரா நிகிதா என சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.