எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
முகமது ஷமி எங்கே? அவர் ஏன் விளையாடவில்லை? என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் லேசான காயத்துடன் சிறப்பாக பந்து வீசிய ஷமி இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். அதன்பின் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி இந்தியா கோப்பையை வெல்ல தம்முடைய பங்கை ஆற்றினார். ஆனால் அதன்பின் அவர் பிட்டாக இல்லை என்று சொல்லி இந்திய தேர்வுக்குழு கழற்றிவிட்டு வருகிறது. இருப்பினும் அவர் உள்ளூர் தொடர்களில் ஆடி தனது திறமையை நிரூபித்து வருகிறார். அதனை சுட்டிக்காட்டியே ஹர்பஜன் சிங் தற்போது விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ஷமி எங்கே? அவர் ஏன் விளையாடவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குப் புரிகிறது, உங்களிடம் பிரசித் இருக்கிறார். அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர்தான். ஆனால் அவர் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. உங்களிடம் நல்ல பந்து வீச்சாளர்கள் இருந்தனர். நீங்கள் மெதுவாக அவர்களை ஓரங்கட்டிவிட்டீர்கள். நமது பவுலிங் பும்ரா இருந்தால் ஒரு மாதிரியாகவும், இல்லையென்றால் வேறு மாதிரியாகவும் இருக்கிறது. பும்ரா இல்லாமல் வெற்றி பெறும் கலையை நாம் கற்க வேண்டும். இங்கிலாந்தில் அவர் இல்லாமலேயே சிராஜின் நம்ப முடியாத ஆட்டத்தால் நாம் டெஸ்ட் போட்டிகளை வென்றோம். ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அது போன்ற கலவையைக் நீங்கள் கண்டறிய வேண்டும்” என்று கூறினார்.
________________________________________________________________________________________________________________________________________
வரலாறு படைத்த லபுஷேன்
பிங்க் பந்து கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் புதிய வரலாறு படைத்துள்ளார். இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட்டில் இந்த சாதனையை லபுஷேன் முதல் வீரராக நிகழ்த்தியுள்ளார். இரவு பகலாக ஆடப்படும் டெஸ்ட் போட்டிக்கு பிங்க் நிற பந்து பயன்படுத்துவதால் அதனை பிங்க் பந்து டெஸ்ட் போட்டி என அழைக்கிறார்கள். இந்த வகைமையில் முதல்முறையாக 1000-க்கும் அதிகமான ரன்களை குவித்த வீராரக மார்னஸ் லபுஷேன் வரலாறு படைத்துள்ளார்.
60 டெஸ்ட் போட்டிகளில் 4,560 ரன்களை எடுத்துள்ளார். அதில் 1,00க்கும் அதிகமாக இரவு - பகல் டெஸ்ட்டில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது 25-ஆவது டெஸ்ட் அரைசதத்தை நிறைவுசெய்த லபுஷேன் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். பிங்க் பந்தில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வீரர்கள் வருமாறு., 1023 - மார்னஸ் லபுஷேன் (16 இன்னிங்ஸ்), 827* - ஸ்டீவ் ஸ்மித் (25 இன்னிங்ஸ்), 753 - டேவிட் வார்னர் (17 இன்னிங்ஸ்), 752 - டிராவிஸ் ஹெட் (16 இன்னிங்ஸ்).
________________________________________________________________________________________________________________________________________
கோலி ரசிகரின் தகவலால் அதிர்ச்சி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த போது ரசிகர்கள் ஒருவர் பாதுகாப்பு தடைகளை தாண்டி மைதானத்திற்கு ஓடி வந்த விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார். உடனே போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.
இந்நிலையில் அவரை ஜெயிலில் அடைத்து வைத்ததாக அந்த ரசிகர் கூறியதாக தகவக் வெளியாகி உள்ளது. அதில் போலீசார் என்னை ஒரு ஸ்டேஷனில் அடைத்து வைத்திருந்தார்கள். எந்த ஸ்டேஷன் என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் கோலி சார் அவர்களை அழைத்து பேசியவுடன், நான் விடுவிக்கப்பட்டேன் என அந்த ரசிகர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
________________________________________________________________________________________________________________________________________
விராட் கோலி குறித்து அஸ்வின்
தன்னுடைய திறமை குறித்து சந்தேகப்படுவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விராட் கோலி இப்படி கொண்டாடுவதாக இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “விராட் ஏன் அப்படி கொண்டாடுகிறார்? அவர் என்ன நினைக்கிறார், என்ன அனுபவித்தார்? விராட் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு வெளியேறினார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இரண்டு நிகழ்வுகளும் மிகவும் ஒத்திசைவாக உணர்ந்தன. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் நேசித்தார். எப்போதும் டெஸ்டில் விளையாட விரும்பினார். ஆனால் அவர் அதிலிருந்து ஓய்வு பெற்றார். ஏனெனில் அவரைச் சுற்றி உரையாடல்களும், டெஸ்ட் போட்டிகளில் அவர் ரன்கள் எடுக்காதது குறித்த கேள்விகளும் இருந்தன.
எவ்வாறாயினும் ஓய்வு பெறுவது ஒரு முக்கிய முடிவு. தற்போது அவர் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். மக்கள் தனது திறமையை சந்தேகிக்கிறார்களா? என்று விராட் கோலி சிந்தித்து கொண்டிருப்பார். தனது திறமை என்பதை அனைவருக்கும் காட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்த அவர் இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். சில சமயங்களில் நீங்கள் வலுக்கட்டாயமாக உங்களை நிரூபிக்க முயற்சிக்கும் போது அது நடக்காமல் போகலாம். ஒருவேளை கடந்த காலத்தில் விராட்டுக்கு அது நடந்திருக்கலாம். ஆனால் தற்போது என்னையா சந்தேகத்தீர்கள்? என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறேன் என்ற வகையில் விளையாடுகிறார். அவர் ஒரு நல்ல மனநிலையில் இருக்கிறார்” என்று கூறினார்.
________________________________________________________________________________________________________________________________________
சுனில் நரைன் '600' விக்கெட்
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), சர்வதேச லீக் 'டி-20' 4வது சீசன் நடக்கிறது. ஷார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி (233/4), 39 ரன் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியை (194/9) வீழ்த்தியது. இப்போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்திய அபுதாபி அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் 37, ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் 600 விக்கெட் சாய்த்த 3வது பவுலரானார்.
கோல்கட்டா, லாஸ் ஏஞ்சல்ஸ், கயானா, சிட்னி சிக்சர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கான விளையாடிய இவர், 568 போட்டியில் இம்மைல்கல்லை எட்டினார். ஏற்கனவே ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (681 விக்கெட், 499 போட்டி), வெஸ்ட் இண்டீசின் டுவைன் பிராவோ (631 விக்கெட், 582 போட்டி) இந்த இலக்கை கடந்தனர்.
________________________________________________________________________________________________________________________________________
வைரலாகும் ஹைடன் மகளின் பதிவு
ஜோ ரூட் சதத்தினால் முன்னாள் ஆஸி. வீரர் மேத்திவ் ஹைடனின் நிர்வாண ஊர்வலம் காப்பாற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஹைடனின் மகளும் கருத்து தெரிவித்துள்ளது சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல் ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் சதமடிக்காமல் இருந்தார். இந்தத் தொடருக்கு முன்பாக முன்னாள் ஆஸி. வீரர் மேத்திவ் ஹைடன் ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் தான் நிர்வாணமாக மெல்போர்ன் கிரிக்கெட் திடலைச் சுற்றிவருவதாகக் கூறினார்.
தற்போது, இரண்டாவது டெஸ்ட்டில் ஜோ ரூட் சதம் அடித்து ஹைடனின் நிர்வாண ஊர்வலத்தை காப்பாற்றி விட்டார். இது குறித்து வர்ணனையாளராக இருக்கும் ஹைடனின் மகளான கிரேஸ் ஹைடன் பேசியவை கவனம் ஈர்த்து வருகின்றன. போட்டியின்போது கிரேஸ் ஹைடன், ”தயவுசெய்து சதம் அடித்து விடுங்கள் ஜோ ரூட்” எனக் கூறினார். சதம் அடித்ததும், “மிக்க நன்றி ஜோ ரூட். நீங்கள் எங்களது கண்களைக் காப்பாற்றிவிட்டீர்கள்” எனக் கூறினார். மேலும் தனது இன்ஸ்டா பதிவிலும் இது குறித்து பதிவிட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் விராட் கோலி முதலிடம்
04 Dec 2025ராய்ப்பூர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
-
பா.ம.க.வின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து
04 Dec 2025டெல்லி, அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என பா.ம.க. வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு சரியானது: மதுரை உயர்நீதிமன்ற கிளை
04 Dec 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.
-
சையத் முஷ்டாக் அலி டி-20: மும்பை அணிக்காக களம் காண்கிறார் ரோகித் சர்மா.!
04 Dec 2025அகமதாபாத், சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கட்சிக்கு உரிமை கோரி வழக்கு: நீதிமன்றத்தில் ராமதாஸுக்கு வெற்றி; டெல்லியில் ஜி.கே.மணி பேட்டி
04 Dec 2025சென்னை, கட்சி உரிமை கோரிய வழக்கில் நீதிமன்றத்தில் ராமதாஸ்சுக்கு வெற்றி என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.
-
உக்ரைன் போர் விவகாரம் தொடர்பான அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது - அதிபர் புதின்
04 Dec 2025மாஸ்கோ, உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்க அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2025.
05 Dec 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2025.
05 Dec 2025 -
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Dec 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
உலகுக்கு பன்முக பாதையை காட்டியவர்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்
05 Dec 2025புதுடெல்லி : நமது பூமியில், அகிம்சை, உண்மை ஆகிய இரண்டின் மூலம் காந்தி விலை மதிப்பிடமுடியாத பங்களிப்பை செய்திருக்கிறார்.
-
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்டம்: துணை முதல்வர் உதயநிதி திடீர் ஆய்வு
05 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
-
தீபத்திருவிழா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு
05 Dec 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடந்தது.
-
ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கான இலவச இ-விசா வழங்கும் திட்டம் : புடின் முன்னிலையில் மோடி அறிவிப்பு
05 Dec 2025புதுடெல்லி : ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு, 30 நாட்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில், பிரதமர் மோடி அறிவித்தார்.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விரைவில் விசாரணை : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அறிவிப்பு
05 Dec 2025புதுடெல்லி : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
-
குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபருக்கு ராணுவ அணிவகுப்புடன் வரவேற்பு
05 Dec 2025டெல்லி, புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
சுமார் 400 இண்டிகோ விமானங்களின் சேவை தொடர்ந்து 4-வது நாளாக ரத்து: பயணிகள் கடும் அவதி
05 Dec 2025மும்பை, இண்டிகோ விமானம் 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: த.வெ.க. தலைவர் விஜய் உடன் காங்கிரஸ் நிர்வாகி திடீர சந்திப்பு
05 Dec 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி திடீரென சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.79 கோடி
05 Dec 2025திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 79 லட்சம் கிடைத்தது.
-
விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்
05 Dec 2025சென்னை, விஜய் முன்னிலையில் நாஞ்சில் சம்பத் த.வெ.க.வில் இணைந்தார்.
-
33 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தி.மலையில் மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்கா : துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
05 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்று சூழல் சுற்றுலா பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
05 Dec 2025வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு
05 Dec 2025சென்னை : சென்னையில் நேற்று (டிச.,05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.20 குறைந்து
-
வீடு, கார் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம் - ரிசர்வ் வங்கி தகவல்
05 Dec 2025டெல்லி : வீடு, கார் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்தார் பிரதமர் மோடி
05 Dec 2025டெல்லி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிரதமர் மோடி பகவத் கீதையை பரிசாக அளித்தார்.
-
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம்: வழக்கு விசாரணையை டிச. 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை
05 Dec 2025மதுரை : மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய மதுரை கிளை உத்தரவு.


