எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'திருநாள்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா
'திருநாள்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா
நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும்: 'திருநாள்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா பேச்சு!
நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும் என்று 'திருநாள்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா பேசினார். கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிப்பில், ஜீவா, நயன்தாரா நடிப்பில் பி,எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவான 'திருநாள்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு படத்தின் வெற்றிக்கான மகிழ்ச்சி சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 'திருநாள்' படத்தின் நாயகன் நடிகர் ஜீவா பேசும்போது ''இன்று 'திருநாள்' படம்வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என் வாழ்க்கையில் முக்கியமான படம். நான் 'யான்' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போது ராம்நாத் இந்தக் கதையை என்னிடம் கூறினார். இது உங்களுக்காக தைக்கப்பட்ட சட்டை போல 'டெய்லர் மேட்' படமாக இருக்கும் என்றார்.முதல் பாதிகதையைக் கேட்டவுடனேயே பிடித்துவிட்டது. அப்போதே என் உள்ளுனர்வு சொன்னது இந்தப் படத்தில் நடிக்கலாம் என்று. எல்லாமே நல்லபடியாக அமைந்தது. நல்ல படக்குழு நல்ல உள்ளுணர்வோடு சந்தோஷமாகவே நடித்தேன். என் ஒவ்வொரு படத்தையும் நன்றாக வரவேண்டும் என்று நினைத்துதான் செய்கிறேன்.
உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைத்துதான் செய்கிறோம். இந்தப் படத்திலும் அப்படித்தான் நினைத்து நடித்தேன். கும்பகோணத்தில் 45 நாட்களிலேயே முழுப்படத்தையும் இயக்குநர் முடித்துவிட்டார். டப்பிங்கில் பார்த்தபோது வேண்டாத காட்சிகள் என்று எதுவும் இல்லை. அந்த அளவுக்கு எடிட்டிங் சென்சோடு படத்தை எடுத்திருந்தார்.
இயக்குநர் எடிட்டிங் சென்ஸ் உள்ளவர் மட்டுமல்ல மனித உணர்வுகளையும் புரிந்தவரும்கூட. ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் ரசிகன் நான் இதில் அவர் நன்றாக ஒளிப்பதிவு செய்திருந்தார். இசையமைப்பாளர் ஸ்ரீயுடன் 'ஈ' ,'தெனாவெட்டு' க்குப்பிறகு எனக்கு இது மூன்றாவது படம். இனிமையான பாடல்களைக் கொடுத்திருந்தார். வீட்டில், மனைவி, அம்மா எல்லாருக்கும் பிடித்த பாடல்கள். நல்ல படத்துக்கு, நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும் என்பேன். அப்படி அமைந்த படம் இது.
பாபி மாஸ்டருடன்'தெனாவெட்டு' க்குப்பிறகு இதில் சேர்ந்து பணியாற்றினேன். படம் பார்த்துவிட்டு கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூரிலிருந்து எல்லாம் நிறையபேர் போன் செய்தார்கள். எல்லாருக்கும் இதில் என் தோற்றம் பிடித்தது. இப்படி ஊர்ப்பகுதி மக்களுக்குப் பிடித்த படமாகவும் அமைந்தது மகிழ்ச்சி.நயன்தாராவுடன் நடித்தது எல்லாருக்கும் பிடித்து இருந்தது.
பொருத்தமான ஜோடி என்கிறார்கள். நயன்தாராவுடன் நடித்த போது நயன் இயர்ஸுக்குபிறகு நயனுடன் நடிப்பதாக அவருடன் கலாய்ப்பேன் அவர் தொழிலில் சரியாக இருப்பவர். தயாரிப்பாளர் செந்தில் குமார் சூப்பர் குட் பிலிம்ஸ் கம்பெனியில் ஒரு தூண் போன்றவர். அவர் தயாரிப்பில் 'திருநாளு'க்குப் பிறகு அடுத்து 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த வெற்றி எதிர்காலத்தில் தரமான நல்ல படங்கள் தரவேண்டிய ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது ''என்றார்.
இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் பேசும் போது"'திருநாளு'க்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி .நாயகன் ஜீவா சார் 63 நாட்களில் ஒரு நாளும் முகம் சுழிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தார். நயன்தாரா நன்றாக நடித்திருந்தார். எனக்கு படப்பிடிப்பின் போது . 'திருநாள்' படத்தைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. அப்போது நயன்தாரா கேட்பார் 'என்னராம்நாத் உங்களுக்கு திருநாள் படம் தவிர வேறு எதுவுமே தெரியாதா?' என்று கிண்டல் செய்வார். 'திருநாள்' படத்தை வெற்றிப் படமாக்கிய தமிழ்நாடு கேரளா, கர்நாடகா ரசிகர்களுக்கும் ஒத்துழைத்த படக்குழுவினருக்கும் நன்றி''என்றார்.
இசையமைப்பாளர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகாந்த் தேவா பேசும் போது, "வாய்ப்பு கொடுத்த ஜீவா சாருக்கு முதல் நன்றி. இப்படி ஒரு பெரிய படத்தில் வேறு யாராவது பெரிய இசையமைப்பாளரைத் தேடிப் போயிருக்கலாம். எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இதுவரை குத்துப்பாட்டு இசையமைப்பாளர் என்றிருந்த இருந்த என் பெயரை மெலடிஇசையமைப்பாளர் என மாற்றியிருக்கிறது இந்தப்படம். நான் சாதாரணமாக நினைத்த 'பங்காளி' பாடல் பாபி மாஸ்டரின் அற்புதமான நடனத்தால் பெரிய அளவுக்கு மாறிவிட்டது. 'பழையசோறு பச்ச மிளகா' பாடல்மெட்டு சாதாரணமானதுதான்.
ஆனால் வரிகளால் நல்ல பாடலாகி வெற்றி பெற்று இருக்கிறது.''என்றார். நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, நடன இயக்குநர் பாபி,பாடலாசிரியர் ஜீவன் மயில், ஜீவாவின் அடுத்த படமான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' இயக்கவுள்ள இயக்குநர் ஜே.எம். அருண் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 days ago |
-
செங்கோட்டையன் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி பதில்
02 Sep 2025மதுரை : செங்கோட்டையன் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகும்
02 Sep 2025புதுடெல்லி, ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தின் அகவிலைப்படி, தீபாவளிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
-
ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 7,020 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
02 Sep 2025சென்னை, ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்7,020 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் தமிழகத்தில் புதிதாக 15,320 பேருக்க
-
2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த ஜனாதிபதி முர்முவை வரவேற்றார் துணை முதல்வர் உயதநிதி
02 Sep 2025சென்னை : 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த ஜனாதிபதி முர்முவை துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் நேரில் வரவேற்றார்.
-
கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம் : இலங்கை அதிபர் திட்டவட்டம்
02 Sep 2025கொழும்பு : கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம் என்று இலங்கை அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி
02 Sep 2025சென்னை, சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
-
இந்திய தயாரிப்பு ‘சிப்’புகள் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் : பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
02 Sep 2025புதுடெல்லி : சிறிய இந்திய தயாரிப்பு ‘சிப்’புகள் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழ்நாடு மீனவர்கள் 10 பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் அபராதம்
02 Sep 2025ராமேசுவரம், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேருக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்
02 Sep 2025திருப்பூர் : அமெரிக்க வரி விதிப்பை தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீசார் மீது திடீர் கல்வீச்சு: 50-க்கும் அதிகமானோர் கைது
02 Sep 2025பொன்னேரி : வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீசார் மீது கல்வீசியதை தொடர்ந்து 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பா.ஜ.க. அரசின் தடைகளைக் கடந்து 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
02 Sep 2025சென்னை, பா.ஜ.க.
-
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதல் : விமானம் அவசரமாக தரையிறக்கம்
02 Sep 2025மும்பை : நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதியதால் அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கப்பட்டது.
-
தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி நீக்க உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு
02 Sep 2025சென்னை : சென்னை தாம்பரம் மாநகராட்சிகளின் கவுன்சிலர்களையும், உசிலம்பட்டி நகராட்சி தலைவரையும் பதவி நீக்கம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட
-
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி 1,400 ஆக உயர்ந்தது
02 Sep 2025காபூல், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு 1,400 பேர் உயிரீழநதுள்ளனர்.
-
தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்
02 Sep 2025கர்நாடகா, தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன் - சசிகாந்த் எம்.பி.
02 Sep 2025திருவள்ளூர் : காங்கிரஸ் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன் என்று சசிகாந்த் எம்.பி. கூறியுள்ளார்.
-
கனமழை காரணமாக டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி
02 Sep 2025புதுடெல்லி : டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
-
வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
02 Sep 2025சென்னை : காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளி பலியானதையொட்டி அரவது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
-
அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள்: கர்நாடகா முதல்வருக்கு ஜனாதிபதி முர்மு பதில்
02 Sep 2025பெங்களூரு : கன்னடம் உள்பட அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள் நான் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு கூறினார்.
-
நீலகிரி: வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் : வனத்துறை சோதனையில் அதிர்ச்சி
02 Sep 2025நீலகிரி : வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
02 Sep 2025சென்னை : சென்னையில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி: அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகளை எலிகள் கடித்ததில் காயம்
02 Sep 2025இந்தூர் : மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகளை எலிகள் கடித்ததில் காயம் ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இலங்கை: செம்மணி புதைகுழியில் 209 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
02 Sep 2025கொழும்பு : இலங்கை செம்மணி புதைகுழியில் 209 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து சந்திரசேகர் ராவின் மகள் கவிதா திடீர் சஸ்பெண்ட்
02 Sep 2025ஐதரபாத் : கவிதாவை பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு வருகை: திருச்சியில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
02 Sep 2025திருச்சி : ஜனாதிபதி திருச்சி வருவதை முன்னிட்டு 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.