எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நய்பிதாவ், மார்ச்.5 - மியான்மரில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழக மீனவர் பிரச்சினை, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.
கடந்த 2012- ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் - இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசுவது இது முதல் முறையாகும்.
தமிழக மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் திங்கள் கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்டிருக்கும் சூழலில் பிரதமர் மன்மோகன் சிங், ராஜபக்சேவை சந்தித்துள்ளார்.
அவருடைய இந்த சந்திப்பு, உள்நாட்டில் ராஜபக்சேவுடனான சந்திப்புக்கு எதிர்ப்பு இருந்தாலும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தியா எப்போதுமே கருதுகிறது என்பதை பறைசாற்றும் விதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது, பிரதமர் மன்மோகன் சிங், தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என ராஜபக்சேவிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதுதவிர, ஜெனீவா மனித உரிமை மாநாட்டு கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் குறித்தும் பிரதமர், ராஜபக்சேவுடன் ஆலோசித்ததாக தெரிகிறது.
ஐ.நா. தீர்மானம் பொருத்தவரையில், வலுவான வெளியுறவுக் கொள்கையை உருவாக்கும் அதே வேளையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கும் வகையில் டெல்லி முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இரண்டு முறை ஓட்டளித்துள்ளது. ஆனால் அண்மைகாலமாக இலங்கையை சீனாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து தனது நட்பு வளையத்துக்குள் கொண்டு வர முயற்சிக்கும் தருணத்தில், இந்தியா வெளியுறவுக் கொள்கையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்குமா இல்லை எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் உள்ள வாக்கு வங்கியை குறி வைத்து முடிவெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை அதிபரை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுகிறார் என்ற செய்தி, தமிழர்களையும் தமிழகத்தையும் புறக்கணிக்கும் செயலாகும். காங்கிரஸும் மத்திய அரசும் ஏன்தான் இப்படியெல்லாம் செய்கிறார்களோ புரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை கூறியிருந்தார்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள குர்ஷித், இலங்கையுடன் அவ்வப்போது இந்தியா பேச்சுவார்த்தை மேற்கொள்வது அங்குள்ள தமிழர்களின் நலனை பாதுகாப்பதற்காகவே என்றார்.
மேலும், மத்திய அரசை விமர்சிப்பவர்கள் இலங்கை வடக்கு மாகாணத்தில் வாழும் 50,000 தமிழர்களுக்கும் இந்திய அரசு வீடு கட்டி தந்திருப்பதை நேரில் சென்று பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை உள்பட அ.இ.அ.தி.மு.க.வின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் பழனிசாமி
24 Feb 2026சென்னை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் தொகுப்புடன் இனி ஆண்டுதோறும் ரூ.
-
குமரியில் ரூ.1.45 கோடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
24 Feb 2026நாகர்கோவில், கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை அருகே ரூ.1.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயிலை தமிழ்நாடு முதல்வர் மு
-
ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்க ராணுவத்தளபதி குறித்த கருத்துக்கு அதிபர் ட்ரம்ப் விளக்கம்
24 Feb 2026வாஷிங்டன், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொ
-
அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்டு ரத்து: தமிழக கவர்னர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Feb 2026சென்னை, அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்டு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை: இன்று தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்
24 Feb 2026சென்னை, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் தேர்தல் ஆணைய குழுவினர் இன்று தமிழகம் வருகிறார்கள்.
-
வரும் 1-ம் தேதி வரை தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
24 Feb 2026சென்னை, தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியுரிமையை பெற்று தர போராடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
24 Feb 2026சென்னை, இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்.
-
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தென்னக ரயில்வே இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் : கனிமொழி எம்.பி. தகவல்
24 Feb 2026தென்னக ரயில்வே பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
-
நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த ரஷ்யா-உக்ரைன் போா்
24 Feb 2026கீவ், ஐரோப்பிய கண்டத்தில் 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு மாபெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்திய ரஷ்யா-உக்ரைன் போா் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம் : 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்
24 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் கல்வியில் புதிய உயரங்களை அடைவதில் நாம் பெருமிதம் கொள்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
24 Feb 2026சென்னை, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் கல்வியில் புதிய உயரங்களை அடைவதில் நாம் பெருமிதம் கொள்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
78-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை
24 Feb 2026சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு இ.பி.எஸ.் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
எனக்காக துப்பாக்கியுடன் பலர் காத்திருக்கிறார்கள்..! அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நகைச்சுவை
24 Feb 2026புளோரிடா, எனக்காகத் துப்பாக்கியுடன் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?
-
அணு ஆயுதக் குறைப்பு விவகாரம்: ஈரான்-அமெரிக்கா நாளை 3-ம் கட்ட பேச்சுவார்த்தை
24 Feb 2026ஜெனீவா, அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே ஜெனீவாவில் நாளை (பிப்.26ம் தேதி) 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
-
இளைஞர் காங். தலைவர் கைது: போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி ஐகோர்ட் அனுமதி
24 Feb 2026புதுடெல்லி, ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ஆடையை களைந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார்.
-
நாளை இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி: பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
24 Feb 2026ஒட்டவா, கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 26 முதல் மார்ச் 7 வரை இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
-
த.வெ.க. கூட்டத்தில் விதிமுறைகள் மீறல் வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம்
24 Feb 2026சென்னை, விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதிக்கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக த.வெ.க.
-
இன்றைய நாள் எப்படி?
24 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
24 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் குடவருவாயில் ஆராதனை, மயில் வாகனம்.
- கோவை கோணியம்மன் புலி வாகனம்.
- மதுரை கூடலழகர் வெண்ணெய்த்தாழி சேவை. கிருஷ்ண அலங்காரம்.


