முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதத்தை ஒடுக்க ஒத்துழைப்பு: பிரதமர் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2014      இந்தியா
Image Unavailable

 

நய்பிதாவ், மார்ச்.5 - பயங்கரவாதத்தை வேரறுக்க உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மியான்மரில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா, வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, மியான்மர், பூடான், நேபாளம் ஆகிய 7 நாடுகள் பிம்ஸ்டெக்-கில் அங்கம் வகிக்கின்றன.

இந்த நாடுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்கள், பயங்கரவாதம் என பல பொதுவான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூட்டு முயற்சி தேவை. பயங்கரவாதத்தை ஒடுக்குவது மூலம் ஆசியப் பிராந்தியத்தில் அமைதி நிலவவும், பாதுகாப்பு மேலோங்கவும், வளம் ஓங்கவும் வித்திட முடியும் என பிரதமர் தெரிவித்தார்.

மேலும், பிம்ஸ்டெக் நாடுகள் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஆக்கப்பூர்வ உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்