முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ராவணனின் சடலம் எங்கிருக்கு தெரியுமா?

நமக்கு ராமாயணத்தை தெரியும். ராமனையும் ராவணனையும் தெரியும். ராமாயணப் போரில் ராவணன் கொல்லப்பட்டதாக நாம் படித்திருக்கிறோம். பின்னர் சீதையை மீட்டுக் கொண்டு ராமன் அயோத்தி திரும்பினான். அதற்கு பின்னர் ராவணனுக்கு என்ன ஆனது, இலங்கையில் என்ன நடந்தது என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. அதன் பின்னர் ராவணின் உடல் வீபிஷணனிடம் ஒப்படைக்கப்பட்டது. வீபிஷணன் தான் பட்டமேற்க உள்ளதால், அந்த உடலை ஒரு பேழையில் வைத்து நாக குல வீரர்களிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் ராவணன் மயக்கத்தில் இருப்பதாக கருதி உடலை பல்வேறு மூலிகை தைலங்களால் பதப்படுத்தி ரக்லா என்னும் காட்டுப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 ஆயிரம் அடி உயர குகையில் பாதுகாத்து வந்துள்ளனர். தற்போது அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த குகையிலிருந்து அரச ஆடை ஆபரணங்களோடு கூடிய ராவணனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, புகைப்படமும் வெளியாகியுள்ளது. அப்பகுதி தற்போது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ராமாயணப் போரின் போது 9300 ஆண்டுகளுக்கு முன்பு கிமு 7292 நவம்பர் 15 இல் ராவணன் கொல்லப்பட்டதாகவும் இதன் மூலம் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராட்சத பென்குயின்கள்

பென்குயின்கள் சுமார் 6 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது டைனோசர் இருந்த காலத்திலேயே வாழ்ந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பென்குயின்கள் ராட்சத வடிவில் இருந்துள்ளன. நியூஸிலாந்து நாட்டில் வைப்பாரா எனும் நகரத்தில் வாழ்ந்த பென்குயின்கள், சுமார் 150 செமீ உயரத்துடன் வாழ்ந்ததாக புதை படிவங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய உயரமான, 17 பென்குவின் இனங்கள் இயற்கையின் காலநிலை மாற்றம், பேரழிவுகளால் அழிந்ததாம். ஆனால், இப்போது உள்ள பென்குயின்கள் வெறும் 43 சென்டிமீட்டர் உயரத்துடனே உள்ளன. இதன் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள்.

7 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

வரலாற்றில் முதன் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் என்றே தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது.  இவற்றில் நீர் மற்றும் வாழக்கூடிய தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என மூத்த ஆராய்ச்சியாளர் மைக்கேல் கில்லான் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே வாணியல் ஆரய்ச்சியாளர்கள் ஏழு கோள்களை கண்டுபிடித்துள்ளனர். எனினும் அவை அனைத்தும் பூமி அளவில் இருக்கவில்லை இதனால் பூமி அளவு கொண்ட 7 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. அனைத்து கோள்களும் ஒரே சுற்றுப் பாதையில் பயணிப்பதால் இவற்றின் ஒரு பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என கூறப்படுகிறது.

மாறாத வழக்கம்

பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் ஒரு பெட்டியை வைத்திருப்பது எதற்காக என்றால், அதற்கு 'பட்ஜெட்' என்ற பெயர்தான் காரணம். பிரெஞ்ச் மொழியில் 'பவ்கெட்' என்றால் தோல் பை என்று பொருள். அதிலிருந்துதான் பட்ஜெட் என்ற சொல் உருவானது. 18-ம் நூற்றாண்டில் பிரிட்டன் நிதி அமைச்சர் அந்நாட்டு வருடாந்திர வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யும்போது உதவியாளரிடம் ஓபன் தி பட்ஜெட் என்று கூறினார். மேலும், பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக, லண்டனின் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் முன் சூட்கேசை நிதி அமைச்சர்கள் நாலாபுறமும் காட்டுவது தொன்று தொட்ட நடைமுறை. அதில் உள்ள அச்சடித்த காகிதங்கள் அடுத்த ஓராண்டில் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிப்பது சிறப்பம்சம். அதுவே இன்று வரை நமது நிதியமைச்சர்களுக்கு பழகிப் போன ஒன்றாகி விட்டது.

அமேசிங் அமேசான்

தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவியிருக்கும் அமேசான் காடுகள் உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளாககும். உலகின் 9 நாடுகளில் எல்லைகளுக்குள் விரிந்துள்ள அமேசான் காடுகள், 1300 வகை பறவை இனங்கள், 427 வகை பாலூட்டி இனங்கள், 2,200 மீன் இனங்கள் மற்றும் 50 ஆயிரம் வகையான தாவர வகைகளின் புகலிடமாக இருக்கிறது. அதில் 16 ஆயிரம் வகை மர வகைகள்உள்ளதாம். இந்த காடுகள் கடந்த 55 லட்சம் ஆண்டுகளாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.இங்கு இதுவரை 11,000-த்துக்கும் மேற்பட்ட புதிய வகை மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிக்கப்படாத மரங்கள் மற்றும் செடிகள் இருக்கலாம் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவற்றையெல்லாம் அடையாளம் காண இன்னும் 300 ஆண்டுகளுக்கு மேலான கால அவகாசம் தேவைப்படுமாம்.

ஒரு லிட்டர் பால் ரூ.10 ஆயிரம் கேட்டால் அசந்து போவீர்கள்

ஒரு லிட்டர் பால் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால் கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா.. ஆனால் அது தான் உண்மை. ஆனால் பால் மட்டும் பசும் பால் அல்ல.. கழுதையின் பால். அதுவும் விற்கப்படுவது இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில். அம் மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி என்ற இடத்தில் தான் இந்த வியாபாரம் சக்கை போடு போடுகிறது. கழுதைப் பாலை வாங்குவதற்காக கூட்டம் அலை மோதுகிறது. கொரோனாவுக்கு பிறகு உலகம் முழுவதும் இது போன்ற பல்வேறு மாற்றங்கள் நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்றாக கழுதைப் பால் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். எனவே இதையடுத்து தற்போது கழுதைப் பாலுக்கு அங்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெறும் ஒரு ஸ்பூன் பால் ரூ.100 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1 லிட்டர் கழுதைப் பால் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இது குறித்து டாக்டர் ரோட்ஜே கூறுகையில், கழுதைப் பாலால் கொரோனா போன்ற தொற்றுகள் குணமாவதில்லை. இது மக்களின் தவறான நம்பிக்கை உடல் நலம் பாதித்தால் டாக்டரிடம் சென்று சோதித்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து காசை இவ்வாறு வீணாக வாரி இறைக்கக் கூடாது என்றார். எது எப்படியோ இதன் மூலம் கழுதைக்கும் அதன் பாலுக்கும் புது மவுசு கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago