ஒவ்வொரு ஆண்டும் ஃபேஸ்புக் நிறுவனம், அதிகம் விவாதிக்கப்பட்டது குறித்து வெளியிட்டு வருகிறது. இதில் 2016-ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்ட பட்டியலில் இந்தியாவில் தீபாவளி முதலிடம் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் அமெரிக்க அதிபர் அரசியல் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து முகமது அலி, போக்கிமான் கோ ஆகியவை அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கிரிக்கெட், உரி தாக்குதல், தோனி திரைப்படம், ஹார்டுவெல், பிரியங்கா சோப்ரா, ரியோ ஒலிம்பிக்ஸ், போகிமான் கோ, பதான்கோர்ட் மற்றும் ஐபோன் 7 ஆகியவை முதல் 10 இடத்தில் உள்ளன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இந்தோனேசியாவில் இருக்கும் ஒரு சிறிய தீவு பகுதி சுலவேசி தீவு. இங்கு வாழும் டோராஜன் மக்கள் தங்கள் வீட்டில், குடும்பத்தில் யார் இறந்தாலும், அதை மரணமாக கருதுவது இல்லை. ஒருவருக்கு மரணமே இல்லை என நம்பும் இவர்கள் இறந்தவர்களை தங்களுடனேயே வைத்துக் கொள்கின்றனர்.
உலகிலேயே மிகப் பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் போன்களை தயாரித்து அசம்பிலிங் செய்யும் இடமாக பெங்களூரூ இறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த உற்பத்தி தொழிற்சாலை பெங்களூரூவின் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான பீன்யாவில் அமைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தினமும் விரும்பிச் செய்யும் உடற்பயிற்சியை செய்வதற்கு முன்பும், செய்த பின்னும் ஸ்டிரெச்சிங் பயிற்சிசெய்வது மிகவும் முக்கியமானது. இதை தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செய்வதால், உடல் ரப்பர் போல வளைந்து கொடுத்து புத்துணர்ச்சி அடையச் செய்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறதாம்.
ஒரு நிறுவனம் அல்லது ஒரு கம்பெனியில் நீங்கள் அதிகப்பட்சமாக எத்தனை ஆண்டுகள் வேலை செய்து உள்ளீர்கள்? என்று கேட்டால், நம்மில் பலரும் விரல் விட்டு எண்ணும் அளவிலான ஆண்டுகளே சொல்வோம்;ஆனால் பிரேசிலைச் சேர்ந்த வால்டர் ஆர்த்மேனுக்கு, அவரது பணியிடத்துடனான தொடர்பு மிகவும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.100 வயது மிக்க வால்டர் ஆர்த்மேன் ஒரே நிறுவனத்தின் கீழ் 84 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். இதுவொரு உலக சாதனையும் ஆகும். ஆம்! இந்த 100 வயது மிக்க முதியவர், "ஒரே நிறுவனத்தில் அதிக ஆண்டுகள் வேலை செய்தவர்" என்கிற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார்! 1938 ஆம் ஆண்டு தனது 15வது வயதில் பிரேசிலில் உள்ள சான்டா கேடரினாவில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் 'ஷிப்பிங் அசிஸ்டென்ட்' ஆக பணியாற்றத் தொடங்கிய வால்டர் ஆர்த்மேன், தன் கடின உழைப்பு மற்றும் மன உறுதியின் உதவியுடன் மெல்ல மெல்ல தனக்கான வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினார். இப்படியாக 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து சாதனையும் படைத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


