Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

காஸ்ட்ரோ அறியாதது

பிடல் காஸ்ட்ரோ ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து கொண்டிருக்கும் போது தான் அரசியல் ஆர்வலராக மாறினார். இவருக்கு, சுருட்டு பிடிப்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது. ஆனால், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 1985-ல்இருந்து சுருட்டு பிடிப்பதை நிறுத்தினார் . இவர் கியூபாவை, 49 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இது பத்து அமெரிக்க அதிபரின் ஆட்சி கால வருடங்கள் ஆகும். ஈட்டி கொண்டு மீன் பிடிப்பது, சமையல் செய்வது மற்றும் புத்தகம் வாசிப்பது போன்றவை பாலிய வயது பிடல் காஸ்ட்ரோவுக்கு பிடித்த விஷயங்களாக இருந்தன. கியூபாவின் பிரதமராக 1959 - 1976 வரையும்., 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார் பிடல் காஸ்ட்ரோ.

வரிக்குதிரையை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

உடலில் கருப்பு வெள்ளை கோடுகளை கொண்டுள்ளதால் இதை வரிக்குதிரை என்கிறார்கள். இவை சுமார் 30 ஆண்டுகள் உயிர் வாழும் பாலூட்டிகள். மனிதர்களுக்கு கை ரேகை போல இவற்றுக்கு வரிக்கோடுகள் ஒவ்வொரு குதிரைக்கும் மாறுபட்டே காணப்படும். இவை நின்றபடியே உறங்கக் கூடியவை. ஒரு வரிக்குதிரையின் கழுத்தின் மீது, மற்றொன்று தன்னுடைய கழுத்தை சாய்த்தபடி நின்று தூங்கும். சுமார் 2 மீ உயரம், 3 மீட்டர் நீளம், 250 முதல் 500 கிலோ எடையுடையதாக இவை காணப்படும். மணிக்கு 55 கிமீ வேகத்தில் ஓடும். நாள் ஒன்றுக்கு சுமார் 80 கிமீ வரை நடக்கும். இவை கூட்டமாகத்தான் வாழும். இவற்றை தனியே பார்க்க இயலாது. இதன் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்னவென்றால் வரிக்குதிரையை பழக்க முடியாது என்பதுதான். அதற்கான பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக விலங்கியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். இது மிகவும் ஆச்சரியமானது தானே...

ஆதம் பாலம்

1.7 மில்லியன் ஆண்டு பழமையான ராமர் பாலம் மனிதன் நீண்டகாலமாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆதம் பாலம் என்று அழைக்கப்படும் இது, இந்தியாவில் இருந்து இலங்கை வரை நீண்டு உள்ளது.  இது, இந்து தெய்வம் ராமரால் கட்டபட்டது. இந்த பாலம் 10 லட்சம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.

தண்ணீர் நல்லது

தண்ணீர் என்பது ஆக்சிஜன் மற்றும்  ஹைட்ரஜன் கலந்த கூட்டுக் கலவையாகும். தண்ணீரை அதிக அளவில் குடித்தால்  உடல் எடை குண்டாகாமல் சீரான உடலுடன் அழகாக இருக்க முடியும் என்கிறார்கள்  மருத்துவ நிபுணர்கள். தண்ணீரை அதிக அளவில் குடிப்பதால் யூரிக் அமிலம் போன்ற தேவையற்ற கழிவுகள் விரைவில் சிறு நீர் வழியாக வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் உடல், மூளை செயல்பாட்டு திறன் மிகச்சிறப்பாக செயல்பட்டு சுறுசுறுப்பையும் தரும்.

மாறும் துருவங்கள்

பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவதால் 2030-இல் பூமிக்கு ஆபத்து ஏற்படுமாம். காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படுவதால் தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படுமாம். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர்.

ஆய்வாளர்களின் விருப்பம்

ஹரியானாவில் உள்ள ராக்கிகர்ஹி ஓவுறு தொல்பொருள் ஆய்வாளர்களின் கனவாகும். இதை 1963-ம் ஆண்டு சிந்து சமவெளியில் மிக பெரிய நகரம் என கண்டுபிடித்தனர். மொஹெஞ்சோடரோ மற்றும் ஹாரப்பாவில் உள்ள தளங்களைவிட இது பெரிது என்று கூறப்படுகிறது. தற்போது அதில் இருந்த பொக்கிஷங்கள் களவாடப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago