ஒரு காலத்தில் தரையில் சீறிப் பாயும் கார்கள் வானில் பறக்கும் என்று கூறியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு அந்த கற்பனை உண்மையாகி வருகிறது. வெகு விரைவில் உலகம் முழுவதும் பறக்கும் கார்கள் வானில் வலம் வரப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதற்கு அச்சாரமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வித்தியாசமான கார் பந்தயம் இதை நிரூபித்துள்ளது. அதிலும் இதில் பங்கேற்ற அனைத்து கார்களும் வானில் பறக்கக் கூடியவை. அது மட்டுமின்றி இவை அனைத்தும் பெட்ரோல் போன்ற எரிபொருள் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கக் கூடியவை. சுத்தமாக சொன்னால் பறக்கும் எலெக்ட்ரிக் கார்கள். அக்டோபரின் இறுதியில் நடைபெற்ற இந்த போட்டிகள் குறித்த ஆச்சரிய வீடியோ தற்போது வெளியாகி நெட்டை கலக்கி வருகிறது. இந்த போட்டியினை தெற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலடா ஏரோநாட்டிக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் வடிவமைத்து, தற்போது நடத்தி முடித்துள்ளது. இப் போட்டிக்கு ‘ஏர்ஸ்பீடர்'-இன் முதல் பகுதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாலைவன பகுதியில், வெறும் 300மீ தொலைவிற்கு மட்டுமே இந்த போட்டி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள எக்ஸா (EXA) எனப்படும் சர்வதேச போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட ஒத்திகை போன்றதாகும். இவ்வாறான பந்தயங்கள் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்பிற்கு ஊக்கமளிக்கும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ரஷ்ய வரலாற்றிலேயே அதிக மதிப்புள்ள வைரம் ஒன்று ஏலத்துக்கு வந்திருக்கிறது. இதன் எடை 51 கேரட். இவை அனைத்தும் ஜார் மன்னர்கள் சேகரித்து வைத்தவை. இவை சுமார் 300 ஆண்டுகள் வரை பழமையானவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனை ஏலம் எடுக்க செல்வந்தர்கள் முண்டியடிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் ஒரு ஊழியருக்கு 300 டாலர் செலவு செய்து மைக்ரோ சிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் அக்சஸ் கார்டு போன்று செயல்படுகிறது. அதாவது அலுவலகம் வரும்போது கதவுகளை திறப்பது, பன்ச் செய்வது, அவர்களுக்கான கணினியை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஃபேஸ்புக் நிறுவனம், அதிகம் விவாதிக்கப்பட்டது குறித்து வெளியிட்டு வருகிறது. இதில் 2016-ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்ட பட்டியலில் இந்தியாவில் தீபாவளி முதலிடம் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் அமெரிக்க அதிபர் அரசியல் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து முகமது அலி, போக்கிமான் கோ ஆகியவை அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கிரிக்கெட், உரி தாக்குதல், தோனி திரைப்படம், ஹார்டுவெல், பிரியங்கா சோப்ரா, ரியோ ஒலிம்பிக்ஸ், போகிமான் கோ, பதான்கோர்ட் மற்றும் ஐபோன் 7 ஆகியவை முதல் 10 இடத்தில் உள்ளன.
உலகில் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால் அந்தந்த நாட்டின் பாஸ்போர்ட் மற்றும் இரு நாடுகளின் விசா ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும். பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அந்நாட்டு குடிமக்களுக்கு இஸ்ரேல் செல்ல அனுமதி கிடையாது. எனவே பாகிஸ்தானியர்களுக்கு இஸ்ரேல் செல்வதற்கான விசா கிடைக்காது. அதே போல மேலும் ஒரு வித்தியாசமான சட்டம் அந்நாட்டில் உள்ளது. அங்கு கல்விக்காக ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக செலவிட்டால் அவர்கள் அரசுக்கு 5 சதவீத வரி செலுத்த வேண்டும் என்பதுதான் அது. எனவே பெரும்பாலான மக்கள் உயர்கல்வி படிக்க ஆர்வம் காட்டுவது இல்லை.
நாம் மணக்க மணக்க போட்டு குளிக்கும் சோப் எப்போ வந்துச்சு தெரியுமா...நம் தாத்தா, பாட்டன் காலத்தில் இருந்ததா...ஒரு 100 அல்லது 200 ஆண்டுகள் இருக்குமா.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். சோப் கண்டுபிடித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும்.. இதை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் பாபிலோனியர்கள் எனப்படும் தற்போதைய ஈராக்கியர்கள்தான் என்றால் ஆச்சரியம் தானே... பாபிலோனியாவின் கடைசி அரசன் நபோனிதஸ் ஆட்சிக் (கிமு 556-530) காலத்தில் அவனது உத்தரவின் பேரில் அரண்மனை ரசவாதிகள் சாம்பல், விலங்குகளின் கொழுப்பு, எண்ணெய், மெழுகு, உப்பு இவற்றைக் கொண்டு சவர்க்காரம் எனப்படும் சோப்பை தயாரித்தனர். முதலில் தரையையும், பின்னர் ஆடைகள், பாத்திரங்களையும் இறுதியில் குளிப்பதற்கும் பயன்பட்டன. இது வணிகர்கள் கண்ணில் படவே நைசாக சிரியா, ரோம், எகிப்து என மொரோக்கோ வரை பயணித்து சோப் பரவலானது. அது சரி.. அதற்கு சோப் என யார் பெயர் வைத்தார்.. கிபி 79 இல் ரோமானிய எழுத்தாளர் பிளினி தி எல்டர் என்பவர் சோப்பை குறிப்பிடும் மூலச் சொல்லான sapo என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தவறுதலாக soap என குறிப்பிட்டு விட்டார். அதுவே இன்று வரை சோப்பாக நிலைத்து விட்டது.. என்ன ஓகேவா..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
சர்வதேச ஒருநாள், டி- 20 கிரிக்கெட்: விராட் கோலி உலக சாதனை
25 Oct 2025சிட்னி: சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்தன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித்
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு
25 Oct 2025கோபால்கஞ்ச்: பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு தெரிவித்தார்.
-
தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு
25 Oct 2025சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது.
-
டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
25 Oct 2025சென்னை: 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் சென்னை மாநகராட்சி தகவல்
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தாய்லாந்து ராணி காலமானார்
25 Oct 2025பாங்காக்: தாய்லாந்து ராணி காலமானார் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
-
சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம்: டெண்டர் கோரியது தமிழக அரசு
25 Oct 2025சென்னை: சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியது.
-
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்
25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
-
பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம்: மேற்குவங்கத்தில் டாக்டர்கள் போராட்டம்
25 Oct 2025மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம் குறித்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
விபத்தில் உயிர் தப்பிய உ.பி. அமைச்சர்
25 Oct 2025பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில் விபத்தில் இருந்து அமைச்சர் பேபி ராணி உயிர் தப்பினார்.
-
டெல்டா மாவட்டங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
-
மோன்தா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Oct 2025சென்னை: மோன்தா புயலால் தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
தேவர் ஜெயந்தி- குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்
25 Oct 2025ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை விதிக்க அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் கோரிக்கை
25 Oct 2025ரஷ்யா: ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
-
சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ.


