முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முதலைகள் குதிரகளைப் பே பாய்ந்து செல்லும் என்பது உங்களுக்கு தெரியுமா?

பார்ப்பதற்கு சாதுவாக தோன்றும் முதலைகள். அவை குதிரைகளைப் போலவே வேகமாக நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து செல்லும் திறன் படைத்தவை என்பது உங்களுக்கு தெரியுமா... இது தொடர்பாக 2019 இல் நேச்சர் இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில் மிகவும் அரிதாக முதலைகள் குதிரைகளைப் போலவே நான்கு கால் பாய்ச்சலில் செல்லக் கூடியவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு எதுவுமே சாதுவாக இருக்கிறது என எதையும் நாம் தப்பு கணக்கு போட்டு விடக் கூடாது.

சாகோன் நாகரீகம்

1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாகோன்கள் இன்றைய நியூ மெக்சிகோ பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சாகோன்கள் 100க்கும் அதிகமான அறைகள் கொண்ட லாவிஷ் கற்களால் ஆன வீடுகளில் வசித்து வந்துள்ளனர். மேலும், இங்கு பெண்களே ஆட்சி செய்ததாகவும், அவர்கள் தங்களது சக்திகளை தங்களின் மகள்களுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

மனிதனால் மட்டும்...

சராசரியாக, வாழ்நாளில் 25 கோடி தடவை அழும் அல்லது கண்ணீர் விடும் ஒரே உயிரினம் மனிதன்தான். அதிகமாக சிரிக்கும் போது கண்ணீர் வரக் காரணம், கண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள சுரப்பியுள்ள தசைநார்கள் அழுத்தப்படுவதால்தான். ஆனால், பச்சிளம்குழந்தைகள் அழுவதில்லை, கத்த மட்டுமே செய்யுமாம்.

வாடகை ரோபோ

மூட்டு வலியால் அவதிப்படும் முதியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், ரோபோ கால் ஒன்று ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. டொயட்டோ மோட்டார் நிறுவனம் உருவாக்கியுள்ள வெல்வாக்ஸ் என்ற இந்த ரோபோ, பக்கவாதம், மூட்டு வலியால் தவிக்கும் நோயாளிகள் எளிதில் நடப்பதற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ காலுடன், ஒரு டிரெட்மில், ஒரு கண்காணிக்கும் கருவியும் வழங்கப்படுகிறது. இந்த ரோபோ, வயதானவர்களுக்கு டிரெட்மில்லில் நடைப்பயிற்சி வழங்குகிறது. யாருடைய உதவியும் இல்லாமல், வயதானவர்கள் மற்றும் கால் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக நடப்பதற்கு இந்த ரோபோ கால் உதவும். இந்த ரோபோ கால், முதற்கட்டமாக வாடகைக்கு விடப்படுகிறது. மாத வாடகைத் தொகை, 2 லட்சம் ரூபாயாம்.

பல்வேறு முத்திரைகள்

யோகாசனம் ஒரு அற்புதமான கலை. கை விரல்களால் செய்வதுதான் முத்திரைகள். நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். இந்த முத்திரைகளை உட்கார்ந்திருக்கும் போதோ, நிற்கும்போதோ, நடக்கும்போதோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது அதிக நன்மை அளிக்கும். சின் முத்திரை அல்லது ஞான முத்திரை செய்வதால் மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும். வாயு முத்திரை செய்வதால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும். சூன்ய முத்திரை செய்வதால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

மனித தோலால் பைண்ட் செய்யப்பட்ட புத்தகம் எங்குள்ளது தெரியுமா?

காகிதங்களால் புத்தகங்கள் அச்சடிப்பதற்கு முன்பாக, ஓலை சுவடிகள், தோல், பாப்பரசி போன்ற பல்வேறு வடிவங்களில் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டன. அவற்றில் மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால் மனித தோலால் பைன்ட் செய்யப்பட்ட 3 புத்தகங்கள் ஹார்வர்டு பல்கலை கழக நூலகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 1880களின் மத்தியில் ஆர்சென் ஹவுஸே என்ற எழுத்தாளர் தனது நண்பரான டாக்டர் லுடோவிக் பவுலண்டுக்கு அளித்ததாக கூறப்படுகிறது. அந்த மருத்துவர்தான் பெண் நோயாளி ஒருவரின் உடலில் உள்ள தோலால் இந்த புத்தகத்தை பைன்ட் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த புத்தகம் இந்த நூலகத்தில் 1930களில் இருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago