முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சஹாராவில் மக்கள்

உலகின் மிகவும் வறண்ட நிலமான பாலைவன பூமி சஹாரா. உலகில் சஹாரா பாலைவனம் மூன்றாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,200,000 சதுர கிலோமீட்டர்கள். கடந்த 100 ஆண்டுகளில் சஹாரா பாலைவனம் 10% வளர்ச்சியடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். சஹாராவில் மக்கள் வாழ்கிறார்கள் தெரியுமா? சுமார் 2.5 மில்லியன் மக்கள் சஹாராவை தங்கள் வீடு என்று அழைக்கிறார்கள். இவர்கள் இங்கு நாடோடிகளாக வாழ்கின்றனர். ஒட்டகங்களுடன் பயணம் செய்யும் பெடோயின் நாடோடி மக்கள் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கைச் சுற்றிலும் பாலைவனத்தைச் சுற்றி நகர்கிறார்கள். பருவ மாற்றம் மற்றும் அவர்களின் தேவைகளைப் பொறுத்து இயற்கை வளங்களுக்கு அருகில் கூடாரங்கள் அடித்து முகாம்களை உருவாக்குகிறார்கள். சஹாரா வறண்டது என்ற போதிலும் இரவில் வெப்பநிலை வியக்கும் அளவில் குறைகிறது. வெப்பநிலை -6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறையும். பல மலைத்தொடர்களில் பனி தவறாமல் விழுகிறது. சஹாரா பாலைவனத்தில் மொத்தம் 20 ஏரிகள் உள்ளன. சஹாராவில் உள்ள ஒரே நன்னீர் ஏரி சாட் ஏரி. இங்கு 1960கள் வரையிலும் கூட சிங்கங்கள் வாழ்ந்தன. அவை பாலைவனத்தின் வறட்சியால் அழியவில்லை. மனிதர்களின் வேட்டையினாலேயே அவை முற்றிலும் அழிந்து போயின என்பது மிகுந்த சோகம்தானே.

புதிய பாதுகாப்பு

இந்திய பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், புரொஃபைல் புகைப்படத் திருட்டைக் கண்டுபிடிக்கவும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக். இந்த புதிய அம்சங்களின் மூலம், சமூகவலைதளத்தில் நண்பர் அல்லாதவர்கள் மற்றவர்களின் புரொஃபைல் படங்களைப் பயன்படுத்தவோ, பகிரவோ முடியாது. படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது. படத்தைச் சுற்றிலும் நீல பார்டர் மற்றும் ஒரு வளையம் தோன்றும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

இயேசுவின் உருவம்

கிறிஸ்தவர்கள் வணங்கும் புனித கடவுளான இயேசுநாதரின் உண்மையான உருவம் எப்படி இருக்கும் என இதுவரை யாரும் தெரியாது. புனித நூலான பைபிளிலும் இயேசுநாதரின் உருவ அமைப்புகள்  பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. இந்நிலையில், முதல் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட வெண்கல நாணயத்தில் பதியப்பட்டுள்ள உருவம் இயேசுநாதரின் உண்மையான தோற்றம் என இங்கிலாந்து ஆய்வாளர் ரல்பெக்எல்லிஸ் என்பவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்ததாக கூறியுள்ளார். எனினும், இதே உருவத்தில் முதல் நூற்றாண்டில் மன்னர் ஒருவர் வாழ்ந்ததாகவும், இது அவரது உருவமாகவும் இருக்க வாய்ப்புள்ளது என பிற ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூட்டுகள் பலப்பட

எலும்பு மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், முதலில் சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். அழற்சி எதிர்ப்பு உணவுகளான ஆலிவ் ஆயில், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வைட்டமின் மற்றும் கனிமச்சத்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டும்.

நாள் முக்கியம்

சனிக்கிழமை பிறந்தவர்கள், இரக்கமற்றவர்களைப் போல தோற்றமளித்தாலும். இனியகுணம் கொண்டவர்கள். எதற்காகவும் கலங்கமாட்டார்கள். பிறருக்கு கட்டளையிடும் சக்தியைப் பெற்றிருப்பர். மனதை அடக்கியாளும் தன்மை உண்டு. இவர்களுக்கு நீடித்த நட்பும் இல்லை. நீடித்த பகையும் இல்லையாம்.

பனி, Snow

ஆர்க்டிக் பகுதியில் பனியில் உறைந்திருக்கும் 90 லட்சம் சதுர மைல் பரப்பளவு சுமார் 10 லட்சம் ஆண்டுகள் பழமையானவை. ஆர்க்டிக்கின் பெரும்பகுதி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. புவி வேகமாக வெப்பமடைந்து ஆர்க்டிக் பனிப்படலம் உருகுவகுதால், அணுக்கழிவுகள், கண்டுபிடிக்கப்படாத வைரஸ்கள், ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்கள் பரவலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago