முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் முதல் பல்கலை கழகம்

உலகின் முதல் பல்கலை கழகம் பண்டைய இந்தியாவில் அமைக்கப்பட்டது  என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும். அதன் பெயர் தக்சஸீலா. பரதன் தனது மகன் தட்சனுக்காக நிர்மாணிக்கப்பட்ட நகரம் தக்சஸீலம் என்று சொல்லப்படுகிறது. தட்சஸீல பல்கலை கழகத்தின் காலம் கிமு 6 லிருந்து 7 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அர்த்த சாஸ்திரம் என்ற அரசியல் நூலை எழுதிய சாணக்கியர் இங்கு பேராசிரியராக பணியாற்றினார். அவரிடம் மெளரிய அரசர் சந்திர குப்தர் கல்வி பயின்றார். மற்றொரு புகழ் பெற்ற பேராசிரியர் சமஸ்கிருத அறிஞரான பாணினி. அசோகர் காலத்தில் இது மேலும் விரிவாக்கம் பெற்றது. காலப்போக்கில் பல்வேறு படையெடுப்புகள், ஆட்சிமாற்றங்கள் காரணமாக தட்சஸீலம் படிப்படியாக அழிந்தது.  அது சரி தற்போது அந்த இடம் எங்கே இருக்கிறது என்கிறீர்களா..பாகிஸ்தானில். பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாம்பூவை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு

இன்று உலகம் முழுவதும் நவீன பேஷன் விரும்பிகளை ஆட்டி படைத்துவரும் பொருள்களில் முதன்மையானது தலை கேசத்துக்கு பயன்படும் ஷாம்பூ. இது முதன்முதலில் எந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டது தெரியுமா.. இந்தியாவில்தான். பண்டைய இந்தியாவில் மக்கள் நெல்லிக்காய், பூந்திகொட்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி தங்களது கேசத்தை பராமரித்து வந்தனர்.  இந்த வகை பயன்பாடு இன்றும் இந்தியா முழுவதும் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதுதான் பின்னர் வணிக ரீதியாக வெளநாடுகளுக்கு சென்று ஷாம்பூவாக மீண்டும் இந்தியாவுக்குள் வந்துள்ளது. ஷாம்பூ என்ற வார்த்தையே இந்திய வார்த்தையான சாம்போ என்பதில் இருந்து தோன்றியதாகும் என்றால் ஆச்சரியம் தானே..

நன்மைகள் பல

பெரிய திரை கொண்டுள்ள ஸ்மார்ட்போன்களில் அதிக தகவல்களை ஒரே ஸ்வைப் மூலம் பார்க்க முடியும். இதோடு புகைப்படம், வீடியோ மற்றும் கேம் உள்ளிட்டவற்றை சிறப்பாக கையாளலாம். ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சாதனம் எனில் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் மூலம் ஒரே சமயத்தில் இரண்டு செயலிகளை இயக்க முடியும்.

கடல்கள் அதிசயம்

கடல்கள் பூமியின் 71 சதவீத பரப்பை ஆக்கிரமித்துள்ளது மட்டுமல்லாமல், உயிர்களின் சுவாசத்திற்குத் தேவையான 70 சதவீத பிராண வாயுவையும் கடல்களே உற்பத்தி செய்கின்றன.  கடல்நீர் பசிபிக் , அட்லாண்டிக் , இந்தியப் , ஆர்டிக் , அண்டார்டிக் பெருங்கடல் என 5 வகைப்படும். பசிபிக் பெருங்கடல், உலக கடல்களில் எல்லாம் பெரியது. பூமியின் 30 சதவீத பரப்பை இது ஆக்கிரமித்துள்ளது.

அடையாளம் காண

கத்திரிக்காயில் ஓட்டை இருந்தால் உள்ளே புழு இருக்கும். அதனால் சிறு ஓட்டை கூட இல்லாமல் கவனமாக வாங்கவேண்டும். காம்பு நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். குச்சி போன்று இருந்தால் காய் முற்றல் என்று அர்த்தம். வெள்ளை வரிகள் இருந்தால் காய் கசக்கும்.

மாரடைப்பிலிருந்து விடுதலை

இருதய பிரச்னைகளை கண்டறிய சோனோகிராம் உள்ளிட்ட கருவிகள் தற்போது மருத்துமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. வயர்களும், டிஜிட்டல் திரைகளும், அதன் ஒலியையும் பார்த்தாலே, கேட்டாலே நன்றாக இருப்பவர்களுக்கும் இதயம் சரியில்லையோ என்று அச்சப்பட வைக்கும் மிகப் பெரியதாக இருக்கும். போதாதென்று அவற்றை கையாள தனி குளிரூட்டப்பட்ட அறைகள் அல்லது தனி லேப்கள் என அதை விவரித்துக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் விடிவு காலம் இல்லையா என்று ஏங்குபவர்களுக்காகவே வந்து விட்டது கையடக்க சோனோகிராம் கருவி. அதன் பெயர் கேப்ஷன் ஏஐ. ஆண்டுதோறும் இதய நோயால் 14 லட்சம் பேர் இறப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இனி இதை எங்கும் எடுத்து செல்லலாம் என்பதால் மாரடைப்புக்கு குட்பை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago