முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எல்லாம் வல்ல சித்தர்

ஈசன் வழக்கம்போல் தன் திருவிளையாடல்களைக் காட்ட மாறுவேடம் பூண்டு எல்லாம் வல்ல சித்தராக மதுரைக்கு வந்தார். அப்போது மதுரையை ஆண்டவர் மன்னர் அபிஷேகப் பாண்டியன். இப்படி ஒரு சித்தரைப் பற்றி அறிந்ததும் அவரை சந்திக்க ஓடோடி சென்று, அவரின் பலத்தை சோதிக்கவேண்டும் என்று கூறி, சிலையாக இருந்த யானையை கரும்பு சாப்பிட வைத்து உங்கள் வல்லமையை நிரூபியுங்கள் என்றாராம். உடனே கல் யானை கரும்பை திண்றது. உடனே சித்தரின் மகிமையை புரிந்த மன்னர் மன்னிப்பு கேட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுந்தரேஸ்வரர் சன்னிதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னிதிக்கு அருகில்தான் இந்த ‘எல்லாம் வல்ல சித்தர்' சன்னிதி உள்ளது.

ஃபேஸ்புக்கில் சுவாரிஸ்யம்

ஒவ்வொரு ஆண்டும் ஃபேஸ்புக் நிறுவனம், அதிகம் விவாதிக்கப்பட்டது குறித்து வெளியிட்டு வருகிறது. இதில் 2016-ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்ட பட்டியலில் இந்தியாவில் தீபாவளி முதலிடம் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் அமெரிக்க அதிபர் அரசியல் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து முகமது அலி, போக்கிமான் கோ ஆகியவை அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கிரிக்கெட், உரி தாக்குதல், தோனி திரைப்படம், ஹார்டுவெல், பிரியங்கா சோப்ரா, ரியோ ஒலிம்பிக்ஸ், போகிமான் கோ, பதான்கோர்ட் மற்றும் ஐபோன் 7 ஆகியவை முதல் 10 இடத்தில் உள்ளன.

ஸ்கைப் இயங்காது

ஐஎம்ஓ, வாட்ஸ்அப் வீடியோ கால், பேஸ்புக் வீடியோ கால் என பல வீடியோ சாட்டிங் வசதிகள் வந்த போதிலும் முதன் முதலாக புகழ்பெற்றது ஸ்கைப் தான். குரூப் காலிங், மெசெஜ் சாட்டிங் என பல அம்சங்கள் கொண்ட ஸ்கைப், அதன் வெர்ஷனை மார்ச் மாதம் முதல் மேம்பட்ட பதிப்பில் வழங்க உள்ளதால் பழைய வெர்ஷன் இயங்காது என மைரோ சாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தண்டவாள கற்கள்

வெப்பம், நிலஅதிர்வு காரணமாக ரயில் தன்டவாளங்கள் சுருங்கி, விரிவதால், தண்டவாளங்கள் விலக வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கவே ஜல்லிக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீரின் தேக்கத்தால் தண்டவாளங்கள் மூழ்காமல் இருக்கவே ஜல்லிக் கற்கள் மீது தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன.

நன்றாக தூங்க

தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும். பாலில் புரோட்டீன், அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள்,  தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது.

கதவுகளே இல்லாத கிராமம்

கிராமம் என்றால் வீடுகள் இருக்கும். வீடுகள் என்றால் வாசல் கதவுகள் இருக்கும்தானே.. ஆனால் ஒரு வித்தியாசமான கிராமத்தில் வீடுகளுக்கு வாசல் கதவுகளே கிடையாது. அந்த கிராமம் எங்குள்ளது தெரியுமா...இந்தியாவில்தான். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷானி ஷிங்னாப்பூர்தான்  அது. இது சனீஸ்வர பகவானின் திருத்தலமாகவும் வணங்கப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலை கொண்டுள்ள இந்த கிராமத்துக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கதவு இல்லாத போதும் இந்த கிராம மக்கள் இரவில் நன்றாகவே உறங்குகின்றனர். ஏன் தெரியுமா... சனி பகவான் காவல் காப்பதாக ஒரு ஐதீகம். என்னா ஒரு ஆச்சரியம் பாருங்கள்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago