இந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பின்னர்தான் தவழ ஆரம்பிக்கும். ஆனால் இந்த குழந்தை பிறந்து சில மணிநேரங்களிலேயே செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகியுள்ளது ஆச்சர்யம்தான்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது.மேலும் மனிதர்கள், மரங்கள் விகிதமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற அளவில் உள்ளதாக இந்தக் கணிப்புகள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வெட்டப்படும் மரத்தின் எண்ணிக்கை 1,500 கோடிக்கும் அதிகமாகியுள்ளது. மேலும் ஆண்டொன்றுக்கு 1,92,000 சதுர கீமீ பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகள் வேகமாக அழிக்கப்படுவதால் மனித நாகரீகம் தொடங்கிய போது இருந்த மரங்களின் எண்ணிககையை விட தற்போது பாதியாக குறைந்துள்ளது. இது தொடர்பாக Nature என்ற ஆய்விதழிலும் கட்டுரை வெளியாகியுள்ளது. காடு அழிப்பு வேகம் கடந்த நூறு ஆண்டுகளில் மிக அதிகம். தற்போது இருக்கும் 3.04 ட்ரில்லியன் மரங்களில் வெப்ப மண்டல மற்றும் துணைவெப்ப மண்டலக் காடுகளில் 1.39 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. வடமுனைப் பகுதிகளில் 0.74 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. மிதவெப்பப் பகுதிகளில் 0.61 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. பல இடங்களில் அடர்ந்த காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதும் மரங்கள் காணாமல் போனதற்கு காரணம் என்கிறது ஆய்வு.
அண்மையில் நம்ம தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ேபாது, மீட்பு படையினர் முதலில் தேடியது கருப்பு பெட்டியைத்தான். விமானங்கள் விபத்துக்குள்ளானால் முதலில் தேடப்படுவது கருப்பு பெட்டியைத்தான். இந்த கருப்பு பெட்டி என்பது விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பாக அதனுள் நடந்த அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்து வைத்திருக்கும் பெட்டகம். இதன் மூலம் விபத்துக்கான காரணத்தை டக்கென்று கண்டுபிடித்து விடலாம். அதே போல பூமிக்கும் ஏதேனும் கருப்பு பெட்டி இருக்கா... என்று கேட்டால். இப்போதைக்கு இல்லை. ஆனால் விரைவில் அப்படி ஒரு முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.பூமியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பதிவு செய்யக்கூடிய டிசாஸ்டர் ரெக்கார்டர் என்ற ஒரு சாதனம் இந்த ஆண்டு நிறுவப்பட உள்ளது. பூமியின் கருப்புப் பெட்டி என்று அழைக்கப்படும் இத் திட்டம் நமது கிரகத்தின் அழிவுக்கான பாதையின் ஒவ்வொரு அடியையும் துல்லியமாக பதிவு செய்யும். சூரிய சக்தியால் இயங்கும் இந்த பெட்டகம் சராசரியாக ஒரு பள்ளிப் பேருந்தின் நீளம் இருக்கும்.இது எந்தவகையான இயற்கை பேரிடரையும் தாங்கிக் கொண்டு பூமியின் மீது நடக்கும் அனைத்து தரவுகளை சேமிக்க வல்லது. இது 7.5 செமீ தடிமனான எஃகு தகடுகளை கொண்டு மூடப்பட்டிருக்கும். பூமியில் உள்ள மிகவும் பாதுகாப்பான இடத்தில் இப்பெட்டி வைக்கப்படும்.இதில் வைக்கப்படும் ஹார்ட் டிரைவ்கள் காலநிலை தொடர்பான தகவல்களை பதிவுசெய்து சேமித்து வைக்கும். கிளெமெங்கர் பிபிடிஓ எனப்படும் தகவல் தொடர்பு நிறுவனம் மற்றும் க்ளூ சொசைட்டி ஆகியவை சேர்ந்து இதை மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.
கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் கண்ணெரிச்சலை போக்க, வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் எடுத்து, பின் தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விட்டு, குளித்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நல்ல குளிர்ச்சியடையும்.
25 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கும் பெண்கள் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் அவர்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழக்கிறார்கள் என ஆய்வு மூலம் தெரிகிறது. டி.வி பார்ப்பதால் பெண்களுக்கு உடல் உழைப்பு இல்லாமல் போவதே இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கு காரணம் . எனவே உடல் உழைப்பை அதிகப்படுத்தும் வேலையை செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.
நம்மூர் ஞானிகள் தொடங்கி ஆன்மிக பேச்சாளர்கள் வரை அனைவரும் விழிப்புணர்வு, இங்கே, இப்போது என்று பேசுவதை கேட்டிருப்போம். அதாவது எப்போதும் நிகழ்காலத்தில் அறிவுப்பூர்வமான விழிப்புணர்வுடன் இருப்பதையே இவ்வாறு கூறுகிறார்கள் என ஒரு வாறு நாம் அனுமானிக்கலாம். இருந்த போதிலும் நமது எண்ணங்களும், நினைவுகளும் கடந்த காலத்திலேயே இருக்கின்றன. நிகழ்காலத்தோடு நாம் கொள்ளும் தொடர்பு சற்று தாமதமாகத்தான் நிகழ்கிறது என ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பேலார் மருத்துவ கல்லூரியில் டாக்டர் டேவிட் ஈகிள்மேன் என்பவர் மேற்கொண்ட ஆய்வில் நிகழ்காலத்திலிருந்து நாம் சுமார் 80 மில்லி விநாடிகள் பின்தங்கியே இருக்கிறோம் என்று கண்டறிந்துள்ளார். அதாவது சம்பவம் நடப்பதற்கு சற்று பிந்தி நாம் இறந்த காலத்தில் இருக்கிறோம்். நாம் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே சம்பவங்கள் நடந்து முடிந்து விடுகின்றனவாம். என்ன கொடுமை சார் இது...
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தே.மு.தி.க.வுடன் கூட்டணியா..? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
08 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையா என்ற தகவலுக்கு அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.
-
ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச மூன்ற மாத அவகாசம் உள்ளது: அண்ணாமலை பேட்டி
08 Feb 2026சிவகங்கை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனித்துவிடப்படவில்லை. எங்களுடன் தான் இருக்கிறார்.
-
விசில் அடித்த த.வெ.க.வினர்: செங்கோட்டையன் கிண்டல்
08 Feb 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க.
-
வருகிற 13-ம் தேதி சேலத்தில் நடைபெறும் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி
08 Feb 2026சேலம், சேலத்தில் வரும் 13-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சேலம் மாநகர காவல் துறை அனுமதி வழங்கியுள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –08-02-2026
08 Feb 2026 -
தேர்தலில் தி.மு.க.வுடன்தான் காங்கிரஸ் கட்சி பயணிக்கும்: மதுரையில் செல்வப்பெருந்தகை பேட்டி
08 Feb 2026மதுரை, காங்கிரஸ் கட்சி வருகிற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் பயணிக்கும்.
-
திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஆந்திரா முன்னாள் முதல்வரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
08 Feb 2026சென்னை, சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
சட்டசபை தேர்தலில் தி.மு.க.விடம் அதிக தொகுதிகளை கேட்போம்: திருமா திட்டவட்டம்
08 Feb 2026சென்னை, இந்த முறை சட்டசபை தேர்தலில் நாங்கள் கூடுதலான இடங்களில் போட்டியிட விரும்புகிறோம்.
-
எப்ஸ்டீனை சந்தித்தேனா? தலாய் லாமா விளக்கம்
08 Feb 2026லகாசா, எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில், தனது பெயரை தொடர்புப்படுத்தி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என திபெத்திய மதகுரு தலாய் லாமா மறுத்துள்ளார்.&nbs
-
அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான்: செங்கோட்டையன் பேட்டி
08 Feb 2026ஈரோடு, தமிழ்நாடு அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு எதிரி தி.மு.க.தான். அ.தி.மு.க. ஒரு கட்சியே அல்ல என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு முக்கியம்: மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்
08 Feb 2026கோலாலம்பூர், பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு மிகவும் முக்கியமானது என மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
-
குரூப்-2, 2ஏ தேர்வுகள் திடீர் ரத்து: தேர்வர்கள் மறியலால் பரபரப்பு
08 Feb 2026சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதால் சென்னை பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
மலேசியாவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் பாடல்
08 Feb 2026கோலாலம்பூர், மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த விருந்து நிகழ்ச்சியில், நடிகர் எம்.ஜி.ஆரின் ’நாளை நமதே’ பாடல் பா
-
மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பெருமிதம்
08 Feb 2026புதுடில்லி, மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது என்றும், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நமது வ
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
08 Feb 2026- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனம், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனம்.
- வைத்தீசுவரன் செல்வமுத்து குமாரசுவாமி புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி.
- இராமநாதபுரம் செட்ட
-
இன்றைய நாள் எப்படி?
08 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
08 Feb 2026


