சூரிய ஒளியில் நடமாடுவதன் மூலம் வைட்டமின் டி உடலில் உற்பத்தியாகிறது. சூரிய ஒளியில் நேரம் செலவு செய்வதை நிறுத்தியதாலும், சன்ஸ்கிரீன் அதிகமாக பயன்படுத்துவதாலும் உலகின் பெரும்பாலான மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் உலகில் 1 பில்லியன் மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அல்லது போதுமான வைட்டமின் டி இல்லாததால் பலவித தீவிரமான தோல் நோய்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. மக்கள் சூரிய ஒளியில் குறைந்த நேரம் செலவிடுவதாலும், அப்படியே வெளியில் சென்றாலும் சன்ஸ்கிரீன் பூசிக்கொண்டு போவதாலும், உடலில் வைட்டமின் டி உற்பத்தியாவது தடைபடுவதோடு புற்றுநோய் ஆபத்து ஏற்படுகிறதாம். செல் வளர்ச்சி, நோய் எதிர்ப்புசக்தி, நரப்பு தசை வளர்ச்சி மற்றும் உடலில் கட்டிகளை குறைப்பது போன்ற முக்கிய உடல் செயல்பாடுகளில் வைட்டமின் டி பங்காற்றுகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
நாம் வாங்கும் பொருள் ஓரிஜினலா கலப்படமா என்ற குழப்பம் எப்போதும் இருக்கும். அதிலும் குறிப்பாக அதிக விலை கொடுத்து வாங்கும் மிளகில் கலப்படத்தை எப்படி கண்டு பிடிப்பது.. இதற்காக சோதனைச்சாலைக்கெல்லாம் செல்ல வேண்டியதில்லை.. அதை நீங்கள் வீட்டிலேயே வைத்து கண்டுபிடித்து விடலாம்.. எப்படி என்று பார்க்கலாமா... சிறிய அளவு கருப்பு மிளகு எடுத்து மேஜை மீது வைத்து கட்டை விரலால் இந்த மிளகை அழுத்தவும். அல்லது நசுக்கவும். மிளகு அவ்வளவு எளிதில் உடையாது. ஆனால் அதில் கலப்பட மிளகு இருந்தால் நீங்கள் அதை நசுக்க முடியும். நசுக்கப்பட்ட மிளகு ஒளி வெளிர் கருப்பட்டிகளாக மாறும். மிளகை சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போடவும். மிளகு தரமானதாக இருந்தால் தண்ணீரின் அடியில் மூழ்கி விடும். மிளகு போலியானதாக இருந்தால், பப்பாளி விதையாக இருந்தால் அது நீரில் மிதக்க செய்யும். மிளகை கடித்தால் காரத்தன்மையுடன் இருக்கும். பப்பாளி விதையாக இருந்தால் அது வாசனை தன்மையற்று, சுவையற்று சுருங்கி இருக்கும்.
கூகுள் நிறுவனத்தின் பிரபல ஆப்-ஆன கூகுள் போட்டோ, பிளே ஸ்டோரில் 100 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். பிளே ஸ்டோரில் வெளியான இரண்டு ஆண்டுகளில் கூகுள் போட்டோ ஆப் இந்த சாதனையை படைத்துள்ளது. கூகுள் போட்டோ ஆப்பில் அன்லிமிடெட் கிளவுட் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்படுவதோடு, பல்வேறு புதிய வசதிகளுக்கான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
முதல் தலைமுறை கண்ணாடிகள் எதனால் செய்யப்பட்டவை தெரியுமா... முதலில் கலனில் நிரப்பிய நீரால் முகம் பார்த்த மனிதன் பின்னர் கிமு 6 ஆயிரம் வாக்கில் நன்றாக பளபளப்பூட்டப்பட்ட எரிமலை குழம்பு உறைந்த கற்களையே முகம் பார்க்கும் கண்ணாடியாக பயன்படுத்தி வந்தான். இது பயன்பாட்டுக்கு வந்ததும் நீர் கண்ணாடி விடை பெற்றது. கல் கண்ணாடி ஆட்சி புரிந்தது. அதன் பின்னர் மெசபடோமியா பகுதிகளில் பாலீஸ் செய்யப்பட்ட செப்பு தகடுகள் கண்ணாடிகளாக பயன்படுத்திய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் அமைந்திருக்கும் மிகப் பெரிய ஈபில் கோபுரம் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். சுமார் 18 ஆயிரம் எஃகு துண்டுகளை 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று இணைத்து இந்த 324 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட கோபுரத்ைத அமைத்தனர். இது உலக அதிசயங்களில் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால் கோடை காலத்தில் இந்த கோபுரம் 15 செமீ கூடுதலாக வளர்ந்து விடும் என்றால் ஆச்சரியம் தானே.. ஏன் என்கிறீர்களா, இது முழுக்க முழுக்க உலோகத்தால் செய்யப்பட்டுள்ளதால், கோடை காலத்தில் எஃகு விரிவடைந்து ஒட்டுமொத்தமாக இதன் உயரமும் அதிகரித்து விடுகிறது. விரிவடையும் போது பாதிக்கப்படாத வகையில் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்தில் 9 கிரகங்கள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் வீனஸ் மட்டும் சற்று பிரகாசமாக தெரியும். இதனால் இதை பகலிலேயே வெறும் கண்ணால் பார்க்க இயலும். எனவே இதை காலை நட்சத்திரம் அல்லது மாலை நட்சத்திரம் என்று கூட குறிப்பிடுவதுண்டு. அதையெல்லாம் விட முக்கியம் சூரிய குடும்பத்தில் அனைத்து கிரகங்களும் சூரியனை எதிர் கடிகார சுற்று முறையில் (வலமிருந்து இடமாக) சுற்றி வருகின்றன. ஆனால் வீனஸ் மட்டுமே கடிகார சுற்று (இடமிருந்து வலமாக) முறையில் சூரியனை சுற்றி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


