தஞ்சை மாவட்டத்திலுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கி.பி 1167இல் கட்டப்பட்டது. கோயிலில் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் நடனக்காட்சிகள், போர்க்காட்சிகள், மதநிகழ்வுகள், ரிஷிகள், விலங்குகள், கற்பனை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.இக்கோயிலின் சிறப்பானது சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் சிறப்பிக்கப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களைச் சிற்பங்களாகச் செதுக்கி வைத்துள்ளதே ஆகும். அநபாயச்சோழன் என்று அழைக்கப்படும் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் சேக்கிழாரைக் கொண்டு அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பெரியபுராணத்தை இயற்றினார். அவரது மைந்தனான இரண்டாம் இராஜராஜ சோழன் அவர்களைச் சிற்பங்களாக இக்கோயிலில் செதுக்கிவைத்துள்ளார். தமிழகச் சைவக் கோயில்களில் தாராசுரத்தில் மட்டுமே அறுபத்துமூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் முழுத்தொகுப்பாக காணப்படுகின்றன. தாராசுரம் தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாட்டினைப் பறைசாற்றும் எத்தனயோ சின்னங்களில் இதுவும் ஒன்று.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகில் உள்ள கண்டத்திட்டுகள், தீவுகள் பூமியின் மாற்றத்தால் நகர்வதும், ஈர்க்கப்படுவதுமான செயல்கள் நடைபெறுகின்றன. அதே போல ஒரு சில தீவுகள் மிகவும் மேகமாக வளர்வதும், கடலில் மூழ்குவதுமாகவும் காணப்படுகின்றன. உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் தீவுகளில் ஐஸ்லாண்டு முன்னிலையில் உள்ளது. இது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 5 செமீ வரையிலும் வளர்ந்து வருகிறதாம். அது மட்டுமின்றி இந்த தீவில் வசிக்கும் மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதம் பேர் அதன் தலைநகரிலேயே வசிக்கின்றனர். மேலும் இந்த தீவில் கொசுக்களே கிடையாது என்பது ஆச்சரியம் தானே.
உலக மகளிர் தினத்தன்று, அமெரிக்காவில் பல அலுவலகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை. பெண்களின் துணிச்சலைப் போற்றும் விதமாக, நியூயார்க் நகரில் ஒரு சிறுமியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. சீறும் காளைச் சிலைக்கு எதிராக, அச்சமின்றி சிறுமி நிற்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது
உலகின் மின்னல் மனிதன் என்று அழைக்கப்படுபவர் உசைன் போல்ட். அதிவேக ஓட்டக்காரரரான இவரது உச்சபட்ச ஓட்ட வேகம் மணிக்கு சுமார் 44 கிமீ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இவருக்கு scoliosis முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளது. இது குறித்து இவரே ஒரு பேட்டியில் எனது முதுகெலும்பு கடுமையாக வளைந்துள்ளது. இதனால் ஏற்படும் அவஸ்தைகளை நான் பொருட்படுத்துவதில்லை. அதை மீறியே கடுமையாக உழைக்கிறேன் என்கிறார். வெற்றி யாருக்கும் சும்மா கிடைப்பதில்லை என்பதற்கு உசைன் போல்ட் போன்றவர்கள் மிகச் சிறந்த உதாரணம்.
ஒரே வினாடியில் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்யும் ‘ஃபிளக்சிபல் சூப்பர் கேப்பாசிட்டர்’ என்ற தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தவகை தொழில்நுட்பத்தில், நானோ பேட்டரிகள் ஒரே வினாடியில் போனை சார்ஜ் செய்துவிடுகின்றன.சாதாரணமாக சார்ஜ் செய்வதை விட இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சார்ஜ் செய்வதால் சராசரியை விட 30,000 மடங்கு பேட்டரி பவர் இருக்குமாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்வு
21 Feb 2026நீலகிரி, ஊட்டி மலை ரயில் கட்டணம் 5 சதவீதம் உயர்வால் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க. - இ.யூ.மு.லீக் இன்று பேச்சுவார்த்தை
21 Feb 2026சென்னை, தி.மு.க. - இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.தி.மு.க.
-
மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
21 Feb 2026மதுரை, மதுரை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
த.வெ.க.வில் சட்டசபை தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்: விஜய் உத்தரவு
21 Feb 2026சென்னை, த.வெ.க. சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
அவதூறு வழக்கில் ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன்
21 Feb 2026பிவாண்டி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு காரணமாக ராகுல் காந்தி, மகாராஷ்டிராவின் பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
-
டித்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி: பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் நன்றி
21 Feb 2026புதுடெல்லி, டித்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பிரேசில் அதிபர் பேச்சு
21 Feb 2026புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு: பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழுவை அமைத்தது தி.மு.க.!
21 Feb 2026சென்னை, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 7 பேர் கொண்ட குழு அமைத்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
-
சங்பரிவார் சேவகராகவே மாறிய இ.பி.எஸ்: கனிமொழி விமர்சனம்
21 Feb 2026சென்னை, சங்பரிவார் சேவகராகவே மாறிய எடப்பாடி பழனிசாமி என்று கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
-
டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் காங்., போராட்டம் ஒரு திட்டமிட்ட சதி: அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டு
21 Feb 2026டெல்லி, காங்கிரஸ் இளைஞர் பிரிவினர் ஏ.ஐ. மாநாட்டில் நடத்திய போராட்டம் தவறாக நடத்தப்பட்டது அல்ல. நன்றாக திட்டமிட்ட சதி.
-
இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: தீர்ப்பிற்கு பிறகு ட்ரம்ப் விளக்கம்
21 Feb 2026நியூயார்க், அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் எதுவும் மாறவில்லை, இந்தியா வரி செலுத்தும், அமெரிக்கா வரி செலுத்தாது, பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர் என்று அந்நா
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
தலைநகர் டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த பாகிஸ்தான தீவிரவாதிகள் திட்டம்: உளவு துறை எச்சரிக்கை - தீவிர கண்காணிப்பு
21 Feb 2026புதுடெல்லி, டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுதுறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.
-
தமிழருக்கு அ.தி.மு.க. அரணாக விளங்கும்: எடப்பாடி பழனிசாமி
21 Feb 2026சென்னை, அ.தி.மு.க. என்றென்றும் மக்களுக்கு அரணாக விளங்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
கொரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு பணிநியமனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
21 Feb 2026சென்னை, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்.
-
எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும் அதனை வீழ்த்துவோம்: துணை முதல்வர் உதயநிதி உறுதி
21 Feb 2026சென்னை, எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும் அதனை வீழ்த்துவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு: அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீதம் வரியை விதித்த ட்ரம்ப்
21 Feb 2026நியூயார்க், உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் ட்ரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்ற
-
சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்.1 முதல் பாஸ்டேக், யு.பி.ஐ. மூலம் மட்டும் கட்டணம் வசூல்
21 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் 1சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக், யு.பி.ஐ. கட்டணம் மட்டுமே ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரிகளை ரத்து செய்து அமெரிக்க உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு அவமானத்துக்குரியது: ட்ரம்ப்
21 Feb 2026நியூயார்க், அமெரிக்க அரசு பிறப்பித்த வரி விதிப்புகளை செல்லாது என்று அவற்றை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அவமானத்துக்குரியது, அபத்தமானது என்று மாகாண ஆளுநா்கள்
-
தாய்மொழி உடலுக்கு உயிர்: உலக தாய்மொழி தினத்தில் கமல் பதிவு
21 Feb 2026சென்னை, தாய்மொழி உடலுக்கு உயிர் என்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
வார ராசிபலன்
21 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
21 Feb 2026- திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் உற்சவாரம்பம்.
- மதுரை கூடலழகர் ஆண்டாள் திருக்கோலம், இரவு அனுமார் வாகனத்தில் ராமாவதாரக் காட்சி.
- காங்கேயம் முருகர் மயில் வாகனம்.
-
இன்றைய நாள் எப்படி?
21 Feb 2026


