Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகிலேயே அதிக விலைக்கு விற்ற புத்தகம் எது தெரியுமா?

இன்றைக்கு புத்தக கண்காட்சிக்கு போனால் புத்தக விலைகளை கேட்டால் மயங்கி விழாத குறையாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு விலைகள் தாறுமாறாக எகிறிவிட்டன. இதில் பதிப்பாளர்களை குற்றம் சொல்லியும் பயன்இல்லை. புத்தகத்துக்கு தேவையான காகித விலை, மை, அச்சடிக்கும் செலவு எல்லாம் அதிகரிக்கும் போது புத்தக விலையும் கூடத்தானே செய்யும். அது கிடக்கட்டும். உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான புத்தகம் எது தெரியுமா... லியோனார்டோ டாவின்சியால் எழுதப்பட்ட கோடெக்ஸ் லெயிஸ்டர் என்ற புத்தகம்தான் உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையானது. அந்த புத்தகத்தை வாங்கியவர் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ். விலை எவ்வளவு தெரியுமா 30.8 மில்லியன் டாலர். அவர் அந்த பணத்தை வெறும் 1 மணி நேரத்தில் ஈட்டி விடுவார் என்றால் அது அதை விட சுவாரசியம் தானே.

ஸ்நூக்கர் போட்டியில் முதன்முதலில் சாம்பியன் வென்றவர் யார்?

உலகில் முதன் முறையாக ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள் 1927 இல் நடைபெற்றது. முதல் சுற்று லண்டனிலும், இறுதி சுற்று  பெர்மிங்காமிலும் நடைபெற்றது. முதன் முதலில் இந்த விளையாட்டில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் ஜோ டேவிஸ். இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொழில் முறை ஸ்நூக்கர் விளையாட்டு வீரராவர். வெற்றி பெறுபவருக்கு பரிசாக 6 பவுண்டுகள் 10 ஷில்லிங் பணம் பரிசாக அளிக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் 600 ரூபாய் ஆகும். 

பாகிஸ்தான் வெள்ளத்தில் இந்திய வகை டால்பின்

அழியும் உயிரினங்களில் ஒன்றாக பன்னாட்டு வன விலங்கு சம்மேளனம் இந்திய வகை டால்பின்களை பட்டியலிட்டுள்ளது. இவை இந்தியா, பாகிஸ்தான் பிராந்தியங்களில் உள்ள நன்னீர் நிலைகளில் வாழக்கூடியவை. டால்பின்கள் மனிதர்களோடு நெருக்கமாக பழகக் கூடியவை என்பது நாம் நன்கு அறிந்ததே. இந்த இந்திய வகை டால்பின்களை, கங்கை நதி டால்பின்கள் என குறிப்பிடுகின்றனர். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா போன்ற ஆழமும் நீளமும் மிக்க நதிகளில் இவை காணப்படும். தற்போது இந்தியாவில் அருகிவிட்ட இவை அண்டை நாடான பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி, வங்க தேசத்தில் பாயும் பிரம்மபுத்ர தீரங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கடந்த 1801 இல் இது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டது. தற்போது அருகி வரும் இந்த டால்பின்கள் குறைபார்வை உடையவை என்றும் சொல்லப்படுகிறது. எப்போதும் தனித்து திரிபவை. குட்டி போட்டால் குட்டிகளோடு சிறிது காலம் சேர்ந்து சுற்றும். வளர்ந்ததும் மீண்டும் தனித்தனிதான். பாகிஸ்தானில் சிந்து நதியில் தத்தளித்த டால்பினை ஆர்வலர்கள் மீட்டு பாதுகாப்பாக ஆழமான பகுதியில் கொண்டு நீந்த விட்டனர். தற்போது இந்த செய்தி மிகுந்த ஆச்சரியத்துடன் ஆர்வலர்களால் பகிரப்பட்டு வருகிறது.

எரிமலை, volcano, lava

உலகத்துல மொத்தம் சுமார், 1,500 எரிமலைகள் தொடர்ந்து (பல வருடங்களாக) தீக்குழம்பைக் கக்கிக்கிட்டே இருக்குதாம். எரிமலையின் பியூமீஸ் என்னும் பாறை மட்டுமே தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது. சூப்பர் எரிமலைகள் எனப்படுபவை வெடித்துச் சிதறும்போது,பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் தீமழை பொழிவதோடு, பருவநிலை மாற்றங்களையும் உருவாக்கும் தன்மை கொண்டவையாம். இத்தகைய ஒரு எரிமலை, அமெரிக்காவின் யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் இருக்கிறதாம். இது வெடிப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். உலகின் மிகப் பயங்கரமான எரிமலை, இந்தோனேஷியாவின் சும்பாவா (Sumbava)தீவில் உள்ள, டாம்போரா(Tambora) மலையில்தான் வெடித்ததாம். 1815 ஆம் ஆண்டு வெடித்துச் சிதறிய இந்த எரிமலைக்கு, ஒரு லட்சம் மக்கள் பலியானார்களாம்! அந்நாட்டில் சுமார் 76  எரிமலைகள் இருக்கின்றன என்கிறது ஒருஆய்வு. ஐஸ்லாந்து நாடு, எரிமலைகளின் மேலேதான் உட்கார்ந்து இருக்கிறதாம். எரிமலைகள் வளரும் தன்மையுடையனவாம்!  உலகின் மிகப்பெரிய எரிமலை ஹவாயின் “மாய்னா லோவா (Mauna Loa)”.

அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ஹாலிவுட் படம் எது தெரியுமா?

உலகிலேயே அதிக பொருட்செலவில் படங்களை தயாரிக்கும் துறையாக அமெரிக்காவின் ஹாலிவுட் விளங்கி வருகிறது. இங்கு அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படம் எது தெரியுமா...நீங்கள் பல்வேறு படங்களை கற்பனை செய்தால் அதெல்லாம் குறைவாகத்தான் இருக்கும். பைரேட் ஆஃதி கரீபியன் என்ற திரைப்படம் தான் இதுவரை எடுக்கப்பட்ட படங்களிலேயே அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்துக்குகாக பட நிறுவனம் 375 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் மூவாயிரம் கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக ஹாலிவுட்டில் அதிக பொருள் செலவில் படம் எடுப்பற்கான பட்ஜெட் சுமார் ரூ.500 கோடி வரைதான் அதாவது 65 மில்லியன் டாலர் என்ற அளவில்தான் திட்டமிடப்படும். அப்படியானால் இந்த படத்தின் செலவை நினைத்து பாருங்கள்...ஆச்சரியமாக உள்ளது அல்லவா.

எய்ட்ஸ் நோய்

உலகம் முழுவதும் ஏராளமானோரை தாக்கி உயிர் பலி வாங்கும் எய்ட்ஸ் நோய்க்கு முற்றிலும் குணப்படுத்தும் சிகிச்சை முறையை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். மரபணு சிகிச்சை மூலம் எச்.ஐ.வி. கிருமி உடலில் வளரும் போதே அவற்றை அழித்து விடலாம். உயிர் இழப்புகளை தடுத்து விடலாம். விரைவில் இந்த மருத்துவ முறையை மனிதனிடம் சோதனை நடத்தி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago