முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டச் ஸ்கிரீன் எப்படி வந்தது?

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இ.ஏ. ஜான்சன் என்பவர் தான், தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு முன்னோடி என்று கூறலாம். 1967 வரை ராயல் ரேடார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். வேலையை விட்டு நின்ற பிறகு, 1968ல், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் தொடர்பாக அறிவியல் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதில்தான், முதன்முதலாக தொடுதிரை தொழில்நுட்பம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. முதன்முதலாக தொடுதிரையை செயல்வழியில் வெளி உலகுக்குக் காண்பித்தவர், சாம் ஹர்ஸ்ட் என்பவர்.அமெரிக்காவில் உள்ள கென்ட்யூக்கி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார் ஹர்ஸ்ட். 1971ல், இவர் உருவாக்கிய முதல் தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு ‘எலோகிராஃப்’ (Elograph -– Electrical and Optoelectronic Graphene Devices) என்று பெயரிடப்பட்டது. இந்த எலோகிராஃப் (Elograph)தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை கென்ட்யூக்கி பல்கலைக்கழகம் பெற்றது. பின்னர் வேலையை விட்டுவிட்டு, எலோகிராஃபிக்ஸ் என்று தனியே ஒரு நிறுவனத்தை தொடங்கினார் சாம் ஹர்ஸ்ட். 1974ல், ஒளிபுகும் தொடுதிரையை பேராசிரியர் சாம் ஹர்ஸ்ட் உருவாக்கினார். சீமன்ஸ் நிறுவனத்தின் நிதியுதவிடன்தடை மின்னோட்ட தொடுதிரை தொழில்நுட்பத்தை ( resistive touch screen technology) உருவாக்கி, அதற்கான காப்புரிமையையும் பெற்றார். வளைவான கண்ணாடியாக இருந்த கருவிக்கு, எலோகிராஃபிக்ஸ் நிறுவனம் ‘டச் ஸ்கிரீன்’ என்று பெயரிட்டு அழைத்தது. அப்படிப் பிறந்ததுதான், இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம்.

20, 450 போராட்டங்கள்

கடந்த 2‌015-ம் ஆண்டில் தமிழகத்தில் 20,450 போராட்டங்கள் நடைபெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் 2-ம் இடத்திலும்  (13,089) , உத்தராகண்ட் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. (10,477). அதிகளவு போராட்டங்கள் நடத்தியோர் பட்டியலில் அரசியல் கட்சிகளும், அரசு ஊழியர் அமைப்புகளும் அடுத்தடுத்து உள்ளன.

இரட்டையர்கள் பிறப்பது அரிதல்ல

நம்மில் பெரும்பாலோனோர் நினைத்து கொண்டிருப்பது போல இரட்டையர்களாக பிறப்பது அரிதான ஒன்று அல்ல. மாறாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு ருசிகர தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக இரட்டையர்கள் குறித்து 1915 முதல் ஆவணப்படுத்தப்பட்ட  ஆவணங்களின் மூலம், 1980 வரையிலான கால கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளில் 50 பேருக்கு ஒருவர் சாரி இருவர் இரட்டையர்களாக பிறக்கின்றனர்.  அதாவது கிட்டத்தட்ட 2 சதவீதம் பேர் இரட்டை குழந்தைகளாக பிறக்கின்றனர். 95க்கு பிறகு அதன் பிறப்பு விகிதம் 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2001 இல் 3 சதவீதம், 2010 இல் 3.3 சதவீதம் அதாவது பிறக்கும் 30 குழந்தைகளில் இருவர் இரட்டையர்கள் என்பதே அந்த ஆய்வு தெரிவிக்கும் சுவாரசிய தகவல்.

மறதி நகரம்

பெங்களுருவில் வாடிக்கையாளர்கள் அதிக அளவிலான பொருட்களை காரிலேயே தவறவிட்டுச் செல்வதாகவும், அதற்கடுத்த இடங்களில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் இருப்பதாக தேசிய அளவிலான உபெர் இண்டெக்ஸ் தகவல்கள் தெவிக்கின்றன. செல்போனுக்கு இந்த பட்டியலில் முதலிடம்.

சிவா அய்யாத்துரை : இவரை தெரியுமா

1978 ஆம் ஆண்டு அது நடந்தது. இன்றைய யுகத்தை அதுதான் ஆட்சி செய்யப் போகிறது என அப்போது யாரும் கணித்திருக்க முடியாது. ஏனெனில் அப்போது அதை கண்டுபிடித்தவர் 14 வயது இளைஞர். அவர் பெயர் சிவா அய்யாதுரை. அவர் என்ன செய்தார். கணிப்பொறியில் தகவல்களை பரிமாறிக் கொள்ளக் கூடிய ஒரு புரோகிராமை வடிவமைத்தார். அதற்கு அவர் வைத்த பெயர் EMAIL. இப்போது தெரிகிறதா அதன் அருமை.  1982 இல் அதற்கான காப்புரிமை அவருக்கு கிடைத்தது. ஆம் இமெயிலின் தந்தை தான் சிவா அய்யாத்துரை என்ற தமிழர். நமக்கெல்லாம் பெருமைதானே.

பன்முகம் கொண்ட நாடு

உலக நாடுகள் இந்தியாவை பார்த்து வியக்க காரணங்கள் பல உள்ளன. யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய இடங்களில் இந்தியாவில் மட்டும் 32 உள்ளன. உலகின் உயரமான இடத்தில் (14,567 அடி உயரத்தில்) அமைந்திருக்கும் தபால் நிலையம் ஹிக்கிமில் (Hikkim)இருக்கிறது.  உலகிலேயே மக்கள் அதிகமாக கூடும் திருவிழா கும்பமேளா. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் 55 நாட்களில் பத்து கோடி பேர் திரண்டனராம். உலகிலேயே அதிகமாக மழைப்பொழிவு பெறும் இடம் மேகாலயா. மாவ்சின்ராம் எனும் கிராமத்தில் ஒரு ஆண்டிற்கு 467 இன்ச் அளவு மழை பொழிகிறது. இங்கிருந்து பத்து மையில் தூரம் தொலைவில் உள்ள சிரபுஞ்சி 2-வது இடத்தில் இருக்கிறது. உலகிலேயே அதிகமாக ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நமது நாடு 2-ம் இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago