முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

திருமணம் செய்தால் ரூ.1.67 லட்சம் பரிசு தொகை : வித்தியாசமாக அறிவித்த நகர் எது தெரியுமா?

இத்தாலி நாட்டிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அந்நகரத்தின் மேயர் முடிவு செய்தார்  இதனை அடுத்து லாஸியோ நகரத்தின் மேயர் நிகோலா ஜிங்காரெட்டி என்பவர் இத்தாலியிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்துகொண்டு திருமணத்திற்கான ஆதாரத்தை காட்டினால் ரூபாய் 1.67 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பரிசை பெறுவதற்காகவே பலர் திருமணம் செய்ய முன்வந்துள்ளனர் கூறப்படுகிறது. இதே நகரத்தில் தான் பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞானியாக இருந்த போதும் ரசவாதத்தை நம்பியவர் யார் தெரியுமா?

மனித அறிவியல் வரலாற்றில் ரசவாதம் என்பது ஒரு மிகப் பெரிய காலகட்டத்தை ஆக்கிரமித்திருந்தது. இன்றைக்கு நவீன அறிவியல் வளர்ந்து விட்ட நிலையில் தனிமங்கள் குறித்த அறிவு பொதுவாகவே பரவலாக்கப்பட்டு விட்டது. ஆனால் கடந்த காலத்தில் சில விஞ்ஞானிகள் கூட ரசவாதத்தை நம்பினர் என்றால் ஆச்சரியம் தானே...ரச வாதம் என்பது எந்த தனிமத்தையும் தங்கமாக மாற்றுவது என்பதுதான் அது. அப்படி நம்பிய விஞ்ஞானிகளில் முதன்மையானவர் சர் ஐசக் நியூட்டன் என்றால் நம்ப முடிகிறதா..சர் ஐசக் நியூட்டன் ஒரு சிறந்த விஞ்ஞானி மற்றும் இயற்பியலில் பெரும் பங்களிப்பைச் செய்தார். ஆனால் இது ரசவாதத்தை நம்புவதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை, இது இப்போது புராணங்களின் அடிப்படையில் ஒரு போலி அறிவியலாக கருதப்படுகிறது. தனது நாட்களின் இறுதி வரை, நியூட்டன் ஒரு நாள் சாதாரண உலோகத்தை தங்கமாக மாற்ற முடியும் என்று நம்பினார்.

அதிசய விஞ்ஞானி

க்ரெய்க் வெண்டர் என்ற மருத்துவ விஞ்ஞானி, உலகில் முதல் முறையாக ஒரு உயிரை அடிப்படையிலிருந்து உருவாக்கியிருக்கிறார். 5,82,000 க்ரோமோஸோம் ஜோடிகளைச் சேர்த்து ஒரு பாக்டீரியாவைத் தயாரித்திருக்கிறார். இதற்கு Mycoplasma Laboratorium என்ற பெயரும் வைத்தாகிவிட்டது. தினம் நாம் செய்யும் எத்தனையோ வேலைகளுக்கு பாக்டீரியாக்களின் உதவி தேவையாக இருக்கின்றது. வெண்டரின் ஆசை என்னவென்றால், நமக்கு தேவைப்படும் எல்லா விதமான பாக்டீரியாக்களையும் ஆய்வகத்திலேயே தயாரிப்பதுதான்.

இறந்தவரின் கடைசி ஆசை

மெக்சிகோவில் உள்ள Puerto San Carlos என்ற இடத்தைச் சேர்ந்தவர் Don Adán Arana. இவர் ஆசையாய் ஓட்ட வேண்டும் என விரும்பியதால் அவரது மகன்கள் அவருக்கு சரக்கு வேன் அதாவது டிரக் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் Don Adán Arana அதன் பின்னர் நீண்ட நாட்கள் இந்த பூமியில் உயிர் வாழ இயலவில்லை. அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மரண படுக்கையில் போராடிய அவர் தன்னுடன் சேர்த்து தனக்கு பிடித்தமான அந்த டிரக்கையும் மண்ணில் என் அருகில் புதைத்து விடுங்கள், மரணத்துக்கு பிறகு "அங்கே" நான் ஓட்டிச் செல்ல வசதியாக  இருக்கும் என தெரிவித்தாராம். அதன் பின்னர் அவர் இறந்து விடவே, அவரது இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவருடன் சேர்த்து அவருக்கு அருகிலேயே அந்த டிரக்கையும் உறவினர்கள் மண்ணில் புதைத்துள்ளனர். இதற்காக டிரக்கை இறக்கும் அளவுக்கு மிகப் பெரிய குழி தோண்டி  கான்கிரீட்டால் தொட்டி போல கல்லறையை கட்டியுள்ளனர். பின்னர் அவருடன் சேர்த்து அந்த டிரக்குக்கும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது.

கழுத்து சுருக்கம் போக..

சரியான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காமல் இருப்பது, ஹார்மோன் பிரச்சினைகளால் கழுத்து சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதை போக்க,  அன்னாசி பழ சாறை கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். மேலும், முட்டைக்கோஸ் சாறு,  தக்காளி பழ சாறு, ஆலிவ் எண்ணெயை கொண்டும் கழுத்து சுருக்கத்தை போக்கலாம்.

தலை இல்லாமல் 1 வாரம் வரை கூட உயிர் வாழும் உயிரினம் எது தெரியுமா?

எந்த உயிரினமாக இருந்தாலும் அதன் உடல் இயங்குவதற்கு மூளையும் இதயமும் மிகவும் அடிப்படையானவையாகும். இவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் உடல் இயங்க இயலாது. ஆனால் ஒரே ஒரு உயிரினம் மட்டும் தலை இல்லாமல் சுமார் 1 வாரம் காலம் வரை உயிர் வாழும் என்பது ஆச்சரியம் தானே. அது வேறெதுவும் இல்லை. நாம் நம் சமையலறைகளில் பார்க்கும் கரப்பான்கள் தான் அவை. இதற்கு காரணம், அவை சுவாசிப்பதற்கு வாயையோ, மூளையையோ சார்ந்திருக்கவில்லை. அதன் உடல் முழுவதும் உள்ள துளைகள் வாயிலாகவே சுவாசிக்கிறது. அதே நேரத்தில் வாய் இல்லாவிட்டால் கரப்பான் இறந்து விடும். ஏனெனில் உணவு, தண்ணீர் இல்லாமல் எந்த ஜீவனாலும் உயிர் வாழ முடியாது தானே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago