முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அரிதான நோய்

சீனாவை சேர்ந்த ஹூவாங் சுன்சய் என்பவர் நியூரோஃபிப்ரோடோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தில் 15 கிலோ கட்டியுடன் இதுவரை 4 முறை அறுவை சிகிச்சைச் செய்தும் பலன் தரவில்லை. இவரை, சீனாவில் ’யானை நாயகன்’ என்று கூறுகின்றனர்.

நவீன சோப்

சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற நவீன சோப் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். சோயா பீன்ஸ், தேங்காய் போன்றவற்றின் கொழுப்பு அமிலங்கள், மக்காச்சோளத்தில் இருந்து பெறப்படும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் கலவையால் தயாரிக்கப்படுகிறது. இந்த சோப்பின் ஓ.எப்.எஸ். எனப்படும் மூலக்கூறுகளால் குறைந்த அளவிலான சோப்பை பயன்படுத்தி அதிகமான கறைகளை அகற்றலாம்.

இந்தியர்களின் உலகம்

உலக அளவில் ஆண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்தும் 10 மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. கடந்த மே மாதம் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஏதாவது ஒரு செயலியை பயன்படுத்துவதில் நேரத்தைச் செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ஷாப்பிங் ஆப்ஸ், டிராவல் ஆப்ஸ், கேம்ஸ் ஆப்ஸ் ஆகியவற்றையே இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுகின்றனராம்.

வேகம் தேவை

இந்தியா, பணமில்லா பரிமாற்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் பரிமாற்றத்திற்குத் தேவையான இணைய சேவையில் போதிய வேகம் இல்லை. உலக அளவில் இணையதளத்திற்கான வேகத்தில் இந்தியா, 96- வது இடத்தில் உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்த வேகத்தில் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. இலங்கை, சீனா, தென் கொரியா, இந்தோனேஷியா, மலேசியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவை விட பலமடங்கு முன்னிலையில் உள்ளன. இணைய வேகத்தில் இந்தியா டவுன்லோட் சேவையில் 96- வது இடத்திலும், பேண்ட்வித் சேவையில் 105- வது இடத்திலும் உள்ளது.

உலகின் முதல் பல்கலை கழகம்

உலகின் முதல் பல்கலை கழகம் பண்டைய இந்தியாவில் அமைக்கப்பட்டது  என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும். அதன் பெயர் தக்சஸீலா. பரதன் தனது மகன் தட்சனுக்காக நிர்மாணிக்கப்பட்ட நகரம் தக்சஸீலம் என்று சொல்லப்படுகிறது. தட்சஸீல பல்கலை கழகத்தின் காலம் கிமு 6 லிருந்து 7 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அர்த்த சாஸ்திரம் என்ற அரசியல் நூலை எழுதிய சாணக்கியர் இங்கு பேராசிரியராக பணியாற்றினார். அவரிடம் மெளரிய அரசர் சந்திர குப்தர் கல்வி பயின்றார். மற்றொரு புகழ் பெற்ற பேராசிரியர் சமஸ்கிருத அறிஞரான பாணினி. அசோகர் காலத்தில் இது மேலும் விரிவாக்கம் பெற்றது. காலப்போக்கில் பல்வேறு படையெடுப்புகள், ஆட்சிமாற்றங்கள் காரணமாக தட்சஸீலம் படிப்படியாக அழிந்தது.  அது சரி தற்போது அந்த இடம் எங்கே இருக்கிறது என்கிறீர்களா..பாகிஸ்தானில். பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாதுளை நன்மை

இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை எளிதில் ஜீரணமாகும் பழம். இதன் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் ஏற்படும் சோர்வு நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஈரலின் செயல்பாட்டிற்கும் ஏற்றதாக இது இருக்கிறது. ஈரலில் வைட்டமின் ஏ-யை சேகரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago