Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வேப்பிலையின் நன்மை

மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை மரம் வேப்ப மரம். வேப்ப மரத்தின் இலையை 4,000 வருடங்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.  வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.

சீனாவில் ஜூராசிக் பார்க்

சீனாவின் ஷெய்ஜங் மாகாணத்தில் சுமார் 65 முதல் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமங்கள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய எட்டு விலங்கு இனங்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளதன் மூலம் அங்கு உண்மையான ஜூராசிக் பார்க் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஷெய்ஜங் பகுதியை சேர்ந்த 11,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மொத்தம் 82 டைனோசர் படிம தளங்கள், ஆறு டைனோசர் இனம் மற்றும் 25 வகையான படிம டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஷெய்ஜங் ஹைட்ராலஜி மற்றும் ஜியோலஜி நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர் குழுவினர் இத்தகவலை உறுதி செய்துள்ளனர். 

சூரிய குளியல்

சூரிய குளியலால் உடலுக்கு வைட்டமின் 'டி' அதிகம் கிடைப்பதால், நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறதாம்.  வைட்டமின் 'டி' குறைபாடினால் வளர்சிதை நோய் உருவாகிறது. இத்தகைய வளர்சிதை நோயினால்தான் நீரிழிவு, இருதய நோய்கள் ஏற்படுகின்றன.

3-டி பிரிண்ட் பாலம்

உலகில் முதன்முதலாக நெதர்லாந்தில் 3-டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 800 அடுக்குகளால் ஆன பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 40 லாரிகளை ஒரே நேரத்தில் தாங்கும் அளவு வலிமை வாய்ந்தது.

பூமியின் பரிணாம வளர்ச்சியில் பறவைகள் எப்படி தோன்றின தெரியுமா?

பொதுவாக மீன்கள் போன்ற நீர் வாழ் விலங்குகளிலிருந்து பறவைகள் தோன்றியிருக்கலாம் நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் பறவைகள் பரிணாம வளர்ச்சியில் டினோசர்களிடமிருந்தே தோன்றியதாம். இவை இரண்டும் ஊர்வன இனங்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக பறவையானது முதலையிலிருந்தே தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதே போல திமிங்கலம், டால்பின் ஆகியவற்றுக்கு ஒரு காலத்தில் பின்னங்கால்கள் இருந்தனவாம். அதன் அடையாளமாக அவற்றின் உடலில் ஒரு சிறிய எலும்பு உள்ளது. இதுதான் அவற்றுக்கு பின்புற துடுப்பாக மாற்றமடைந்திருக்கலாம் என்கின்றனர். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

சீனாவில் அதிசயம்

சீனாவில் தற்போது வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில் அங்கு 16 இளம் ஜோடிகள் வானத்தையும், பூமியையும் சாட்சியாக வைத்து கொண்டு பறக்கும் பலூனில் திருமணம் செய்து கொண்டனர். வடக்கு சீனாவில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், தெற்கு சீனாவில் இதமான சீதோஷ நிலை நிலவி வருவது குறிப்பித்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago