எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஆக.- 18 - வடகிழக்கு மாநிலங்களை பற்றி வதந்திகளை கிளப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 70க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவத்தை அடுத்து நாட்டின் பிற பகுதிகளில் இருக்கும் வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றும் எனவே வடகிழக்கு மாநில மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்றும் செல்போன்கள் மூலமாக எஸ்.எம்.எஸ். தகவல்கள் பரவின. இதை அடுத்து பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் வேலை பார்த்தும், படித்தும் வந்த வடகிழக்கு மாநில மக்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிடைத்த ரயில்களில் ஏறி தங்களது சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கினர். இது குறித்து மத்திய அரசு மிகுந்த கவலை அடைந்தது. வடகிழக்கு மாநில மக்கள் அதிகமாக வசிக்கும் மாநிலங்களில் அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களை பற்றி வதந்திகளை கிளப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்றத்தின் ராஜ்ய சபையில் நேற்று வடகிழக்கு மாநிலங்கள் குறித்த பிரச்சினையை எம்.பி.க்கள் கிளப்பினார்கள். இதை அடுத்து கேள்வி நேரத்தை ரத்து செய்த சபை தலைவர் ஹமீது அன்சாரி இது குறித்த விவாதத்திற்கு அனுமதி அளித்தார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். நாட்டில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் இருந்தால் மட்டும் போதாது, சமுதாய நல்லிணக்கமும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.வதந்திகளை பரப்பும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அஸ்ஸாம் மாநிலத்தில் எது நடந்திருந்தாலும் கூட அது பற்றி வதந்தி பரப்புவதை மன்னிக்கவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் எந்த பகுதியை சேர்ந்த மக்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டில் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை பேணிக்காத்தால் மட்டும் போதாது வகுப்பு நல்லிணக்கமும் வேண்டும் என்றும் அவர் கூறினார். வதந்திகளை பரப்புகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படிப்பட்ட விஷமிகள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வடகிழக்கு மாநில மக்கள் இடையே பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் ஏனென்றால் அவர்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்களுக்கு இருப்பதை போல அவர்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது என்றும் அவர் கூறினார். நுட்பமான பிரச்சினைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் சக்திகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –12-01-2026
12 Jan 2026 -
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம். செளரி திருமஞ்சன சேவை, மூக்குத்தி சேவை
- மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
12 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
12 Jan 2026


