எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் நவ. 30 - சேலம் , தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் பொதுமக்களை அதிர்ச் சிக்குள்ளாக்கி விட்டது. 3 மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும் மேட்டூர் அணையின் தண்ணீர்தேக்கப் பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. நேற்று அதிகாலை 350 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது வேகமான சத்தத்துடன் சூறாவளி காற்று வீசியது. ஆடுகள், மாடுகள் பெருத்த ஓசையுடன் கயிறுகளை அறுத்துக்கொண்டு ஓடியதால் பயந்துபோன பொதுமக்கள் குழந்தைகளை கையில் எடுத்துக்கொண்டு சாலைகளில் வந்து நின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டு சாலைகளில் வந்து நின்றனர். கிருஷ்ணகிரி பகுதியில் நிலநடுக்கம் 3.3 என பதிவாகியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட குள்ளாத்திராம் பட்டி, குருக்கலையனூர், மஞ்சார அள்ளி, ஈச்சூர், நாகமறை, ராமகுண்ட அள்ளி, மத்தாளபள்ளம், ஏரியூர், நெருப்ர், பெரும்பாலை, ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வெடி வெடிப்பது போன்ற சத்தம் போல் கேட்டது.
மேலும் இந்தபகுதியில் வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. இதனால் ஆண்களும், பெண்களும் அலறி அடித்து விட்டு வீட்டை விட்டு ஓடி வந்தனர். சிலர் கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டு தெருவுக்கு ஓடி வந்து கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் வெட்டவெளி சாலையில் நின்றனர். சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
கிராமங்களில் வீட்டுக்கு வெளியே கட்டியிருந்த ஆடு, மாடுகள் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடின. அவை சத்தம் போட்டுக் கொண்டு ஓடியதால் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் வெளியே ஓடி வந்து பார்த்த போது தான் சிலருக்கு நில நடுக்கம் ஏற்பட்ட தகவல் தெரிந்தது. சில கிராமங்களில் நில நடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு நாய்கள் ஊளையிட்டுக்கொண்டு ஓடி உள்ளன.
இந்த சத்தத்தை கேட்டு சிலர் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். அப்போது சூறாவளி காற்று அடித்ததால் எப்படி சத்தம் வருமோ அது போல நிலநடுக்க சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்
ஈச்சூர் கிராமத்தில் கோவிந்தன் என்பவரது ஓட்டு வீட்டில் 4 இடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி பேருராட்சிக்குட்பட்ட சாம்ராஜ்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், மற்றும் மேட்டூர் அணையின் தண்ணீர்தேக்கப் பகுதிகளான கூனாண்டியூர், கீரைக்காரனூர், மற்றும் பொட்டனேரி, அரங்கனூர், வெள்ளார் பேரூ ராட்சிக்குட்பட்ட எருமப்பட்டி, நங்கவள்ளி, வனவாசி,ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.இந்த நில நடுக்கம் 5 முதல் 8நொடிகள் வரை இருந்தது. . நில நடுக்கம் ஏற்பட்ட போது கட்டில் குலுங்கியது. பாத்திரங்கள் உருண்டன. தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் கொட்டும் பனியிலும் வீட்டுக்கு வெளியே ரோடுகளில் நின்றனர். நிலநடுக்கத்தினால் நங்கவள்ளி அருகே தாச காப்பட்டியில் முனியப்பன் என்பவரது வீட்டில் விரிசல் ஏற்பட்டது.
மேச்சேரியை அடுத்த மல்லிகுந்தம் அருகே கூத்தனூரில் ஆஸ்பெட்டாஸ் கூரைகள் நிலநடுக்கத்தால் உராய்ந்து இடி சத்தம் போல கேட்டதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார். சேலம் மாவட்டம் மேட்டூர், கொளத்தூர், கோவிந்தப்பாடி, குருமனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. ஒரு சில வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன. அதிகாலை 4 மணிக்கு முன்பு நில நடுக்கம் ஏற்பட்டு இருந்தாலும் காலை 8 மணி வரை பெண்களும், ஆண்களும் நிலநடுக்க அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. பீதியில் அவர்கள் தெருவில் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் மீண்டும் வீட்டுக்குள் செல்ல பயந்தனர். மீண்டும் நில நடுக்கம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர். தாரமங்கலத்தில் அதிகாலை நேரத்தில் ரெயில் போவது போல் திடீரென சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருட்கள் குலுங்கியது.
இதனால் நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். ஆனால் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கஞ்ச நாயக்கன்பட்டி, சின்ன திருப்பதி, ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
25 Feb 2026சென்னை, முதுபெரும் அரசியல் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) சென்னையில் நேற்று காலமானார்.
-
ராமதாஸ் தொடர்ந்த வழக்கு: அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
25 Feb 2026சென்னை, ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர்: நல்லகண்ணுவுக்கு விஜய் புகழஞ்சலி
25 Feb 2026சென்னை, மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர் நல்லகண்ணு என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
25 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்துகிறார்.
-
தனக்கென வாழாமல் பிறர்காகவே வாழ்ந்தவர்: நல்லகண்ணுவுக்கு இ.பி.எஸ். இரங்கல்
25 Feb 2026சென்னை, சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு மறைவுக்கு அ.தி.மு.க.
-
யாருடன் கூட்டணி என்பது குறித்து ராமதாஸ் இன்று முக்கிய முடிவு
25 Feb 2026திண்டிவனம், பா.ம.க. கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று முடிவு செய்கிறார்.
-
குமரியில் ரூ. 30 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
25 Feb 2026கன்னியாகுமரியில் மினி டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
-
தமிழக காவல் துறைக்கு ரூ.124 கோடியில் புதிய மென்பொருள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
25 Feb 2026சென்னை, தமிழக போலீஸ் துறைக்கு ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
-
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு சார்பில் விழா: ரூ. 858.92 கோடியில் நலத்திட்ட உதவிகள்: 3,12,082 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
25 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ச
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
25 Feb 2026கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
அதானி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கும் தமிழக அரசு
25 Feb 2026சென்னை, அதானி நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு மின்சாரம் வாங்கியது.
-
இலவச வாக்குறுதிகளை தடைசெய்ய கோரி வழக்கு: தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி அறிவிப்பு
25 Feb 2026புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அவச
-
என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன்: தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்: நாகர்கோவில் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
25 Feb 2026நாகர்கோவில், என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இ
-
போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாக்., பிரதமர் ஷெரீப் இறந்திருப்பார்: அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு
25 Feb 2026நியூயார்க், போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இறந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டு
-
இன்றைய நாள் எப்படி?
25 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
25 Feb 2026- ஆழ்வார் திருநகரியில் மாசி உற்சவாரம்பம்.
- கோவை கோணியம்மந் கிளி வாகனம்.
- திருச்செந்தூர் முருகன் கோ ரதம், இரவு சுவாமி வெள்ளி சப்பரம். அம்பாள் இந்திர வாகனம்.


