முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் அவ்வையார் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் அண்ணாதுரை தகவல்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      தஞ்சாவூர்

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிர்க்கு ஆண்டுதோறும் உலக மகளிர் தின விழாவில் ஒளவையார் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

 

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த மகளிர், சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் போன்ற துறைகளில் சிறப்பாக தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவராகவும் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

மேற்காணும் தகுதியுடைய நபர்கள் 23.03.2017க்குள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், நாஞ்சிக்கோட்டை ரோடு, உழவர் சந்தை அருகில், தஞ்சாவூர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்