முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகையிலை பயன்பட்டால் ஆண்டுதோறும் 70 லட்சம் உயிரிழப்பு: டாக்டர் தகவல்

புதன்கிழமை, 31 மே 2017      சென்னை
Image Unavailable

புகையிலை பயன்பட்டால், ஆண்டுதோறும் 70 லட்சம் உயிரிழப்பதாக .வி.எஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

பேரணி

முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்களுக்குத் தீர்வு அளிப்பதில் முன்னோடியான வி.எஸ் .மருத்துவமனை மற்றும் வி.எஸ். மருத்துவ அறக்கட்டளை ஆகியவை இணைந்து உலகப் புகையிலை மறுப்பு நாளையொட்டி, ஒரு மாபெரும் நடைப்பேரணியை நடத்தின.தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர், எம்.நாசர் இந்த பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

வி.எஸ் மருத்துவமனை குழுமத்தின் தலைவர், மேலாண் இயக்குநர் மற்றும் முதுநிலைபுற்றுநோய் வல்லுநரான டாக்டர் என். சுப்ரமணியன் தலைமையேற்றுப் பேசுகையில் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, ஆண்டுதோறும் புகையிலைப்பயன்பாட்டால் 70 லட்சம் பேர் இறக்கிறார்கள். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை நாம்எடுக்காவிட்டால், 2030 ஆம் ஆண்டுவாக்கில், புகையிலை ஆபத்து மேலும் அதிகரித்து,

இறப்போர் எண்ணிக்கை 80 லட்சத்தைத் தொடும்.புகையிலையைப் பயன்படுத்துவதால், புற்றுநோய், நுரையீரல் செயலிழப்பு, இதய நோய்கள், மூளைச் சேதம், கால்களில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு போன்ற உயிரைக் குடிக்கும்நோய்கள் தோன்றும் அபாயம் உள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து