எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உணவு தானிய உற்பத்தியை தன்னிறைவு அடைய செயல்படுத்தப்படும் திட்டமான உணவு தானிய உற்பத்தி இயக்கம் தொடர்பாக, வேளாண்மை இயக்குநர் லி.தஷ்ணாமூர்த்தி, தலைமையில், கலெக்டர் இல.சுப்பிரமணியன், முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டம்
இக்கூட்டத்தில் உணவு தானிய உற்பத்தி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தமிழக அளவில் 100 இலட்சம் மெ.டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வேளாண் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துதல், விதைகள் மற்றும் உரங்கள் ஆகிய இடுபொருட்களை பயன்படுத்துதல், பயிர் சாகுபடி பரப்பை அதிகரித்தல், உற்பத்தித் திறனை உயர்த்தி உற்பத்தியினை அதிகரித்தல் ஆகியவைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் நெல் பயிர் சாகுபடி பரப்பு இலக்கான 156100 எக்டேரில், இதுவரை 159681 எக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 15100 எக்டேர் பரப்பில் நடப்பு நவரை பருவத்தில் சாகுபடிக்கு கொண்டு வரப்படும் எனவும், இதன்மூலம் நடப்பாண்டில் 174781 எக்டேர் சாகுபடிக்கு கொண்டுவரப்பட்டு 8.32 லட்சம் மெ.டன் அரிசி உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும், சிறுதானியங்கள் மற்றும் மக்காச்சோளப் பயிர்களில் நடப்பாண்டு 61632 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதன் மூலம் 3.314 இலட்சம் மெ.டன் உற்பத்தி செய்யப்படும் எனவும், பயறுவகை பயிர்களில் 87700 எக்டேர் பரப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு, இதுவரை சுமார் ஒரு லட்சம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் 89600 மெ.டன் பயறுவகைகள் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் தமிழக அளவிலான உணவு உற்பத்தி இலக்கான 100 இலட்சம் மெ.டன் உற்பத்தியில் 12.5 இலட்சம் மெ.டன் சாதனை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இது மாநில உற்பத்தியில் 12.5 சதவீத பங்களிப்பாகும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.இதுவரை உணவு தானிய பயிர்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி திறன், உற்பத்தி குறித்து வேளாண்மை இயக்குநர் ஆய்வு செய்து, நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல், சிக்கன நீர்பாசனம், சீரிய இடுபொருட்களை பயன்படுத்துதல், நெல் வரப்பில் பயறு சாகுபடி செய்தல், கரும்பில் ஊடுபயிர் செய்தல் போன்ற உத்திகளை கையாள வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு வேளாண்மை இயக்குநர் தஷ்ணாமூர்த்தி, அறிவுரை வழங்கினார்.முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள திரவ உயிர் உர உற்பத்தி மையத்தில் உற்பத்தியினை துவக்கி வைத்து, பார்வையிட்டார்கள். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பாக 13 பயனாளிகளுக்கு அரசு மானியத்தில் பவர் டில்லர்கள், ரொட்டாவேட்டர்கள், பாசனகுழாய்கள், விசைத்தெளிப்பான்கள், மழைத்தூவுவான்கள், சூரிய ஒளி விளக்குப்பொறி ஆகியவற்றை வழங்கினார்கள்.தொடர்ந்து, முகையூர் வட்டம் டி.கீரனூர் ஊராட்சியில், நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் மழைத்தூவுவான் மூலம் பாசனம் செய்யப்பட்டுள்ள மணிலா பயிரையும், வேங்கூர் ஊராட்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள கிழங்கு வகை மலைப்பயிர் - சம்மங்கி பயிரினையும், பன்னாரி அம்மன் சுகர்ஸ் லிமிடெட்., யூனிட் சர்க்கரை ஆலையில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நிழல்வலைக்கூடம் மற்றும் கரும்பு நாற்று உற்பத்தியினையும் வேளாண் இயக்குநர் தஷ்ணாமூர்த்தி, மற்றும் கலெக்டர் இல.சுப்பிரமணியன், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்நிகழ்ச்சிகளில், திருக்கோவிலூர் சார் ஆட்சியர் சாருஸ்ரீ, கூடுதல் வேளாண்மை இயக்குநர் சங்கரலிங்கம், வேளாண்மை இணை இயக்குநர் கி.செல்வராஜ், வேளாண்மை துணை இயக்குநர்கள் சண்முகம், மோகன்தாஸ், மு.செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) செல்வசேகர், வேளாண் அலுவலர் பி.சுரேஷ், வேளாண்மை உதவி இயக்குநர்கள் சுப்பிரமணியன், கருணாநிதி, கனகலிங்கம் மற்றும் விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சேலம் மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.