எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உணவு தானிய உற்பத்தியை தன்னிறைவு அடைய செயல்படுத்தப்படும் திட்டமான உணவு தானிய உற்பத்தி இயக்கம் தொடர்பாக, வேளாண்மை இயக்குநர் லி.தஷ்ணாமூர்த்தி, தலைமையில், கலெக்டர் இல.சுப்பிரமணியன், முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டம்
இக்கூட்டத்தில் உணவு தானிய உற்பத்தி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தமிழக அளவில் 100 இலட்சம் மெ.டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வேளாண் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துதல், விதைகள் மற்றும் உரங்கள் ஆகிய இடுபொருட்களை பயன்படுத்துதல், பயிர் சாகுபடி பரப்பை அதிகரித்தல், உற்பத்தித் திறனை உயர்த்தி உற்பத்தியினை அதிகரித்தல் ஆகியவைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் நெல் பயிர் சாகுபடி பரப்பு இலக்கான 156100 எக்டேரில், இதுவரை 159681 எக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 15100 எக்டேர் பரப்பில் நடப்பு நவரை பருவத்தில் சாகுபடிக்கு கொண்டு வரப்படும் எனவும், இதன்மூலம் நடப்பாண்டில் 174781 எக்டேர் சாகுபடிக்கு கொண்டுவரப்பட்டு 8.32 லட்சம் மெ.டன் அரிசி உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும், சிறுதானியங்கள் மற்றும் மக்காச்சோளப் பயிர்களில் நடப்பாண்டு 61632 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதன் மூலம் 3.314 இலட்சம் மெ.டன் உற்பத்தி செய்யப்படும் எனவும், பயறுவகை பயிர்களில் 87700 எக்டேர் பரப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு, இதுவரை சுமார் ஒரு லட்சம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் 89600 மெ.டன் பயறுவகைகள் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் தமிழக அளவிலான உணவு உற்பத்தி இலக்கான 100 இலட்சம் மெ.டன் உற்பத்தியில் 12.5 இலட்சம் மெ.டன் சாதனை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இது மாநில உற்பத்தியில் 12.5 சதவீத பங்களிப்பாகும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.இதுவரை உணவு தானிய பயிர்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி திறன், உற்பத்தி குறித்து வேளாண்மை இயக்குநர் ஆய்வு செய்து, நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல், சிக்கன நீர்பாசனம், சீரிய இடுபொருட்களை பயன்படுத்துதல், நெல் வரப்பில் பயறு சாகுபடி செய்தல், கரும்பில் ஊடுபயிர் செய்தல் போன்ற உத்திகளை கையாள வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு வேளாண்மை இயக்குநர் தஷ்ணாமூர்த்தி, அறிவுரை வழங்கினார்.முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள திரவ உயிர் உர உற்பத்தி மையத்தில் உற்பத்தியினை துவக்கி வைத்து, பார்வையிட்டார்கள். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பாக 13 பயனாளிகளுக்கு அரசு மானியத்தில் பவர் டில்லர்கள், ரொட்டாவேட்டர்கள், பாசனகுழாய்கள், விசைத்தெளிப்பான்கள், மழைத்தூவுவான்கள், சூரிய ஒளி விளக்குப்பொறி ஆகியவற்றை வழங்கினார்கள்.தொடர்ந்து, முகையூர் வட்டம் டி.கீரனூர் ஊராட்சியில், நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் மழைத்தூவுவான் மூலம் பாசனம் செய்யப்பட்டுள்ள மணிலா பயிரையும், வேங்கூர் ஊராட்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள கிழங்கு வகை மலைப்பயிர் - சம்மங்கி பயிரினையும், பன்னாரி அம்மன் சுகர்ஸ் லிமிடெட்., யூனிட் சர்க்கரை ஆலையில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நிழல்வலைக்கூடம் மற்றும் கரும்பு நாற்று உற்பத்தியினையும் வேளாண் இயக்குநர் தஷ்ணாமூர்த்தி, மற்றும் கலெக்டர் இல.சுப்பிரமணியன், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்நிகழ்ச்சிகளில், திருக்கோவிலூர் சார் ஆட்சியர் சாருஸ்ரீ, கூடுதல் வேளாண்மை இயக்குநர் சங்கரலிங்கம், வேளாண்மை இணை இயக்குநர் கி.செல்வராஜ், வேளாண்மை துணை இயக்குநர்கள் சண்முகம், மோகன்தாஸ், மு.செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) செல்வசேகர், வேளாண் அலுவலர் பி.சுரேஷ், வேளாண்மை உதவி இயக்குநர்கள் சுப்பிரமணியன், கருணாநிதி, கனகலிங்கம் மற்றும் விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சேலம் மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
2 நாட்களில் முடிவுக்கு வந்த ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி., கிரிக்கெட் வாரியத்திறகு 60.59 கோடி ரூபாய் நஷ்டம்
28 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.60.59கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது
-
விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் பேரணி
28 Dec 2025சென்னை, தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க.வினர் பேரணி நடத்தினர்.
-
மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு புகழஞ்சலி: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
28 Dec 2025சென்னை, மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு என் புகழஞ்சலி என்று த.வெ.க. தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
-
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
28 Dec 2025பல்லடம், பல்லடத்தில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க.
-
கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி மீட்பு
28 Dec 2025பெங்களூரு, கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்டார்.
-
சேலத்தில் ராமதாஸ் தரப்பில் இன்று பொதுக்குழுக் கூட்டம்
28 Dec 2025சென்னை, சேலத்தில் இன்று ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
-
விஜய்யின் அரசியல் பயணம்: இலங்கை முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து
28 Dec 2025கொழும்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்
-
அன்புமணி பின்னால் சென்றவர்கள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்: ஜி.கே.மணி பேட்டி
28 Dec 2025சேலம், சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.
-
கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று அவரது நினைவு நாளில் அ.தி.மு.க.
-
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியத்தின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Dec 2025சென்னை, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின
-
தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்
28 Dec 2025சென்னை, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது இஸ்ரோ
28 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
-
துணை துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
28 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று முக்கிய நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
தர்மத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும் இறுதியில் அறம்தான் வெல்லும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
28 Dec 2025மதுரை, தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் தேர
-
விஜயகாந்த் 2-ம் நினைவு நாள்: பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினர்.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் பொதுத்தேர்தல்
28 Dec 2025மியான்மர், மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கி நடைபெற
-
தயவுசெய்து மீண்டும் நடியுங்கள்: விஜய்க்கு நடிகர் நாசர் கோரிக்கை
28 Dec 2025சென்னை, நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க.-விடம் உண்மை இல்லை: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
28 Dec 2025டெல்லி, இன்று, பா.ஜ.க.-விடம் அதிகாரம் இருக்கிறது.
-
சம வேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
28 Dec 2025சென்னை, 3-வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்ப
-
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் ஜனாதிபதி முர்மு
28 Dec 2025பெங்களூரு, கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.
-
த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
28 Dec 2025சென்னை, த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
ரயில் 2 வினாடிகளில் 700 கி.மீ. வேகம் சீன ஆராய்சியாளர்கள் புதிய உலக சாதனை..!
28 Dec 2025பெய்ஜிங், சீன ஆராய்சியாளர்கள் 2 நொடியில் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகம் எட்டக்கூடிய சோதனை வாகனத்தை இயக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.
-
பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரம்: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை
28 Dec 2025பெங்களூரு, பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.
-
2-ம் ஆண்டு குருபூஜை: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க.
-
தமிழகம் முழுவதும் தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம்..!
28 Dec 2025சென்னை, தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர்.



