முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 1458 பேருக்கு கொரோனா பாதிப்பு : தமிழக சுகாதார துறை அறிவிப்பு

சனிக்கிழமை, 6 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,152-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலியை விஞ்சி 6-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 1458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதார துறை கூறியுள்ளதாவது, 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 16,395 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 633 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 251-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,116 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மொத்தம் 20,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 74 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 13,503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 5,76,695 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.83 சதவீதமாக உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.37 சதவீதமாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,022 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1286 பேருக்கு தொற்று உறுதியானது. இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து